Saturday 13 December 2008

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்


அண்ணன் பி.ஜெ. பின்பற்றுவது தூதரையா ? அய்யரையா ?

சிரிப்போம் – சிந்திப்போம்


சிரிப்போம்.

மைக் மைதீன் பேசுகிறார்


அன்புப் பெரியோர்களே ! அருமைத் தாய்மார்களே !
எங்கள் அண்ணன் பி.ஜெ. குர்ஆன் மற்றும் ஹதீஸின் உண்மையான அர்த்தங்களை உல்டா பண்ணி மார்க்கத்தில் புதுமையை உண்டு பண்ணும் “புதுமைப்பித்தன்”. பெயர் சூட்டும் முறையில் அல்லாஹ் ரசூலின் வழி தனி வழியாக இருந்தாலும் எங்கள் பி.ஜெ.யின் வழி தனி… வழி. யார் என்ன கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் கொடுக்கும் கொடைவள்ளல் போல் யார் என்ன கேள்வி கேட்டாலும் பதில்இல்லை என்று சொல்லாமல் எதையாவது சொல்லும் சொல் வள்ளல் அண்ணன் பி.ஜெ. அதன்படி அய்யா முருகேசன் கேட்ட கேள்விக்கு அண்ணன் பி.ஜெ. தந்த பதிலை கீழே வீடியோ கிளிப்பில் கேட்டு மகிழுங்கள்.



இதுவரை மார்க்கத்தில் யாரும் சொல்லாத, சொல்லமுடியாத இன்னும் சொல்லக்கூடாத இப்படிப்பட்ட அதிநவீன ஃபத்வாக்களையெல்லாம் சொல்லுவதில் எங்கள் அண்ணன் பி.ஜெ.க்கு நிகர் பி.ஜெ. தான். யாரும் எங்கள் அண்ணன் பி.ஜெ.யிடம் குர்ஆன்,ஹதீஸ் ஆதாரம் கேட்கக் கூடாது. எங்கள் அண்ணன் பி.ஜெ. மட்டுமே கேட்பார். அப்படியே எங்கள் அண்ணன் பி.ஜெ.க்கு எதிராக எந்த ஹதீஸையாவது ஆதாரம் காட்டினால் அந்த ஹதீஸை பலவீனப்படுத்துவோம்.

மாற்றாருக்கு மாற்றம் செய்யுங்கள் என்று நபி (ஸல்) சொல்லியிருக்க, எங்கள் அண்ணன் பி.ஜெ.யோ நபிக்கே மாற்றம் செய்யுங்கள் என்று கூறும் மார்க்கத்தின் புதுமைதாரி. எங்கள் அண்ணன் பி.ஜெ. குர்ஆனிலிருந்தும், இந்தோனேஷியாவிலிருந்தும் ஆதாரம் காட்டியிருப்பதால், அண்ணன் பி.ஜெ.யின் தமிழ்நா(ட்)டு தவ்ஹீதை தங்களது கடவாய்ப் பற்கள் இருக பின்பற்றும் பக்தகோடிகளுக்காக சில பக்திப் பரவச மூட்டும் பெயர்கள் கீழே தரப்பட்டுள்ளன. அதனை தங்களுக்கு பிறக்கப் போகும் குழந்தைகள் மற்றும் பேரன், பேத்திகளுக்கு அண்ணன் பி.ஜெ. வழியில் பெயர் சூட்டி அழகு பார்க்க வேண்டுகிறோம். மேலும் கீழ்கண்ட இப்பெயரில் ஏற்கனவே ஒருவர் இருந்து இஸ்லாத்திற்கு வந்த பின்னரும் அதே பெயரை தக்கவைத்துக்கொள்ள வேண்டுகிறோம்.







ஆன் குழந்தையின் பெயர்பெண் குழந்தையின் பெயர்
முருகன்வள்ளி
முருகேசன்தெய்வானை
பரமசிவம்பார்வதி
அப்பாசாமிஅகிலான்டேஸ்வரி
அய்யாசாமிஅங்காளபரமேஸ்வரி
முனுசாமிமுனியம்மாள்
முனியான்டிமூக்காயி
கஞ்சா கருப்புகாத்து கருப்பு
சுப்ரமணியசுவாமிசுப்புலட்சுமி
அத்வானிஅன்னை பாராசக்தி
பால் தாக்கரேபால நாகம்மாள்
கோவிந்தாகோமாதா



மேலும் பெயர் வேண்டுவோர் எங்கள் அண்ணன் பி.ஜெ.யின் ஈ-மெயிலை அனுகவும்.


அதுமட்டுமின்றி மார்க்கத்தில் புதுமையை விரும்பும் எங்கள் அண்ணன் பி.ஜெ. அசையும் சொத்திற்கு மேற்கண்ட பெயர்களை வைத்துக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளதால், எங்களது அசையா சொத்துகளாகிய மர்கஸ் மற்றும் மதரசாகளுக்கும் கீழ்கண்ட மற்றும் மேற்கண்ட பெயர்களை சூட்ட அண்ணன் பி.ஜெ.யிடம் அனுமதி கேட்போம்.

1.முருகவிலாஸ் 2.பாரத விலாஸ் 3.சரவணபவன் 4.விநாயகர் இல்லம் 5.சிவன் சன்னிதானம். 6.தங்க விலாஸ். 7.ரங்க விலாஸ். 8.கோபாலபுரம். 9.கீழ்ப்பாக்கம்.
உதாரணத்திற்கு : மேலப்பாளையம் TNTJ முருகவிலாஸ் மர்கஸ், சென்னை TNTJ சரவணபவன் மர்கஸ், சென்னை அன்னை பராசக்தி மகளிர் மதரசா, கடையநல்லூர் கஞ்சா கருப்பு ஆன்கள் மதரசா.

இதுமட்டுமின்றி இனிவரும் தமிழ்நா(ட்)டு தவ்ஹீதின் எழுச்சி மிகு மாநாடுகளில் கீழ்கானும் தீர்மானங்கள் நிறைவேற்ற உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

1.நமது பழக்கத்திலுள்ள அனைத்து அரபு மொழி பெயர்களெல்லாம் இனிமேல் நமது தாய் மொழியாம் தமிழில் மாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

2.நமது உயிரை கைப்பற்றும் மலக்குல் மெளத்தின் பெயர் அரபு மொழியில் இருப்பதால் அதனை நமது தாய் மொழியாம் தமிழில் “எமன்” என்று சொல்லப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இனிமேல் நமது உயிரை “எமன்” தான் கைப்பற்றுவார்.

3.அண்ணன் பி.ஜெ.யின் பேச்சில் உணர்ச்சி வசப்பட்டு அண்ணனின் பக்தகோடிகள் “அல்லாஹூ அக்பர்” என்று சொல்லுவது அரபு மொழியில் இருப்பதால், அதற்கு பதிலாக “அரோகரா” என்று தமிழில் சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

4.இனிமேல் நமது TNTJ பள்ளிவாசல்களில் தொழுகையில் அரபு மொழியில் குர்ஆன் ஓதுவதற்கு பதிலாக தமிழில் ஓதப்படும். அல்லாஹ்வுக்கு தமிழ் தெரியும் என்று எங்களது எதிரிகளுக்கு ஞாபகப்படுத்துகிறோம்.

5.எங்களது இந்து தமிழ் சகோதரர்கள் எவைகளையெல்லாம் அரபு மொழியிலிருந்து தமிழில் மாற்ற சொல்கிறார்களோ அவைகளையெல்லாம் தமிழில் மாற்ற எங்களது புரட்சி தலைவர் அண்ணன் பி.ஜெ.க்கு முழு அதிகாரம் வழங்குகிறோம்.

6.எங்கள் அண்ணன் பி.ஜெ. கூறும் கருத்திற்கு எதிராக யாராவது ஹதீஸை ஆதாரமாகக் காட்டினால் அவையனைத்தும் பலவீனமானவை என பிரகடணம் செய்கிறோம். மேலும் யாராவது குர்ஆனை ஆதாரமாகக் காட்டினால், எங்கள் அண்ணன் பி.ஜெ.க்கு எதிராக அல்லாஹ் இவ்வாறு சொல்லியிருக்க முடியுமா ? என எங்கள் அண்ணன் பி.ஜெ. ஆய்வில் இறங்க வேண்டி வரும் என்று எச்சரிக்கை செய்கிறோம்.



சிந்திப்போம்.



இஸ்லாத்தை பொருத்தவரை அனைத்து மொழிகளும் சமமானது. எந்த மொழியும் உயர்ந்ததோ, தாழ்ந்ததோ கிடையாது. மொழி என்பது மனிதன் தங்களுக்குள் கருத்தை பரிமாறிக்கொள்ளும் தகவல் தொடர்பு சாதனம் அவ்வளவுதான். முஸ்லிம்களை பொருத்தவரை, தமிழ் நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும், தங்களது பெயர்களுக்கும் மற்ற மார்க்க அனுஷ்டானங்களுக்கும் அரபு மொழியை தேர்ந்தெடுக்க மூன்று முக்கிய காரணங்கள் உள்ளது. முதலாவது அல்குர்ஆன் இறக்கியருளப்பட்ட மொழி. இரண்டாவது நமது கண்மனி நாயகம் (ஸல்) பேசிய மொழி. மூன்றாவது எல்லாவற்றிற்கும் மேலாக அல்லாஹ் சுபுஹானுவத்தாலா தனது நபிக்கும்(ஸல்), குர்ஆனுக்கும், சுவர்க்கத்திற்கும் தேர்ந்தெடுத்த மொழி.

அல்லாஹ் ஒன்றை தேர்ந்தெடுத்தால் அது எவ்வளவு உயர்வானதும் சங்கைக்குரியதும்மாகும் என்பதை எந்த முஸ்லிமுக்கும் சொல்லித்தான் தெரியவேண்டுமென்பதில்லை. அப்படிப்பட்ட அந்த உயர்வான மொழியில்தான் முஸ்லிம்கள் தங்களது பெயர்களை சூட்டிக்கொள்கிறார்களே தவிர அரபு மொழி உயர்வானது என்ற தனது சொந்த அபிப்பிராயத்தில் அல்ல.

ஆனால் அண்ணன் பி.ஜெ.யோ முஸ்லிம்களுக்கு குறிப்பாக தமிழ்நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கு அவர்தான் அத்தாரிட்டி போலவும், அவர் என்ன சொல்கிராரோ அதைத்தான் முஸ்லிம்கள் செய்துவருகிறார்கள் என்பதுபோலவும் தனது வியாபார ரீதியிலான “இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்” நிகழ்ச்சிக்கு வரும் ஹிந்துக்களுக்கு காட்டுவதற்காகவும் மேலும் குஷிப்படுத்துவதற்காகவும் முருகேசன் என்ற பெயரில் முஸ்லிமாக இருக்கலாம் என்ற தனது அதிநவீன ஃபத்வாவை கக்கியிருக்கிறார். இதன்மூலம் மார்க்கத்தில் அவரது அறிவும், நேர்மையும் நன்றாகவே விளங்குகிறது.

அண்ணன் பி.ஜெ. சொல்வதுபோல் முஸ்லிம்கள் ஜாதி பிரச்சினையிலிருந்து தப்பிப்பதர்காகத்தான் தனது பெயரை அரபு மொழியில் வைத்திருப்பதாக சொல்வது வேடிக்கையும், விநோதமும், மிகப் பெரிய பொய்யுமாகும். முருகேசன் என்று ஒரு முஸ்லிம் சொன்னால், அடுத்து நீங்கள் என்ன ஜாதி என்று கேள்வி வரும். ஆனால் முஸ்தஃபா என்று அரபு மொழியில் சொன்னால், இவர் ஒரு முஸ்லிம் என்று நினைத்து ஜாதி என்ற பேச்சுக்கே இடமில்லை என்பது அண்ணன் பி.ஜெ.யின் வாதம். இந்த இவருடைய சொந்த கருத்தில் உண்மையாளராக இருப்பாரேயானால், இராமர் சிலையை கடவுள் என அங்கீகரிக்க கூடியதும், தனக்கு விருப்பமானதுமான “இராமசாமி” என்று பெயர் மாற்றம் செய்து மெளலவி இராமசாமி உலவி என பவனி வர தயாரா ? ஏனெனில் இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் நிகழ்ச்சியின் மூலமாகவும் வின் டி.வி. மூலமாகவும் அண்ணன் பி.ஜெ. ஒரு முஸ்லிம் என்பதை அனைத்து ஹிந்துக்களும் அறிந்த ஒன்று. எனவே அடுத்து நீங்கள் என்ன ஜாதி என்று யாரும் கேள்வி கேட்க மாட்டார்களே ?

அடுத்து அண்ணன் பி.ஜெ. இவருடைய இந்த சொந்த கருத்திற்கு தனக்கே உரிய பானியில் குர்ஆனையும் ஹதீஸையும் ஆதாரம் காட்டியிருப்பது, தொழுகையை ஜட்டி போட்டுக்கொண்டு (தொடையின் பெரும் பகுதி தெரிய) தொழலாம் என்பதற்காக காட்டிய ஆதாரத்தைப் போன்றது. அதற்கு முன்னால் ஒரு விஷயத்தை அறிந்து கொள்வது அவசியம். அல்லாஹ்வும் ரசூலும் எந்த விஷயங்களை அங்கீகரித்தார்களோ அதுதான் நமது மார்க்கம். அல்லாஹ் அங்கீகரித்த முன்னால் நபிமார்களின் (அலை) பெயர்களும், நபி (ஸல்) தனது மகனாருக்கு சூட்டிய இப்ராஹிம் என்ற பெயரும் நமது மார்க்கத்தின் ஓர் அங்கமாகும். அது அரபு மொழியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரியே. அதனால்தான் தமிழ்நாட்டு முஸ்லிம்கள் மட்டுமல்ல உலக முஸ்லிம்கள் அனைவரும் தங்களது பெயர்களை முன்னால் நபிமார்களின் பெயர்களாகிய இப்ராஹிம், சுலைமான், மூஸா (அலை)… என்று சூட்டிக்கொள்கிறார்கள். அரபு மொழி இல்லாத பெயர்கள் என்பதால் அல்ல, அல்லாஹ்வும் ரசூலும் அங்கீகரித்த பெநர்கள் என்ற ஒரே காரணத்தினால்தான் என்பதை நிரூபிக்கும் மிகப்பெரிய சான்றும் ஆகும்.

ஆனால் அண்ணன் பி.ஜெ.யோ முருகேசன் (முருகன் என்ற தமிழர் கடவுள் சிலையின் மற்றொரு பெயர்) மற்றும் தனக்கு விருப்பமான இராமசாமி (இந்துக்களின் மற்றொரு கடவுள் சிலையின் பெயர்) போன்ற பெயர்களை முஸ்லிம்கள் சூட்டிக்கொள்ளலாம் என்று ஃபத்வா கொடுப்பதன் மூலம் இராமப் பிரான் மற்றும் முருகப் பிரானின் பெயர்களை ஆதரித்துப் பேசி இருப்பது ஏன் என்று தெரியவில்லை.

நமது பெயருடைய விஷயத்தில் நபி (ஸல்) அவர்களின் வழிமுறை என்ன என்பதை பார்க்கலாம்.

நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூதர்தா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நாளை மறுமை நாளிலே நீங்கள் உங்களது பெயரைக் கொண்டும், உங்களது தகப்பனாரின் பெயரைக் கொண்டும் அழைக்கப்படுவீர்கள், எனவே நல்ல பெயரை (உங்களுக்கு) சூட்டிக் கொள்ளுங்கள்.

நூல் : அபூதாவூது


ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், “இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கெட்ட பெயரை மாற்றி விட்டு, நல்ல பெயர்களை வைத்தார்கள்”.
நூல் : திர்மிதி


ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : “இறைத்தூதர்(ஸல்) அவர்கள் விரும்பாதொரு பெயரைக் கொண்ட மனிதர் அவர்களிடத்தில் வந்தால், அவரது பெயரை மாற்றக் கூடியவர்களாக இருந்தார்கள்”
நூல் : தபரானி


இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : உங்களது பெயர்களில் புகழுக்குரியோனும், மகத்துவமிக்கோனுமாகிய அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்த பெயர் எதுவென்றால் “அப்துல்லாஹ்” மற்றும் “அப்துர்ரஹ்மான்” என்பதாகும்.
நூல் : முஸ்லிம்,திர்மிதி,அபூதாவூத்



அல்லாஹ்வும் ரசூலும் நமக்கு நல்ல விஷயங்களையே கற்றுத் தந்துள்ளார்கள் என்பதில் என்த முஸ்லிமுக்கும் கருத்து வேறுபாடு கிடையாது. ஆனால் அண்ணன் பி.ஜெ.யோ நல்லவைகளை விடுத்து சிலைகளின் பெயர்களும் மார்க்கத்தில் கூடும் எனக் கூறுவதன் மூலம் அண்ணன் பி.ஜெ. பின்பற்றுவது தூதரையா ? அய்யரையா ?

அண்ணன் பி.ஜெ.யின் இந்த அதிநவீன ஃபத்வாவின்படி லாத், உஜ்ஜா, மனாத் போன்ற நபி(ஸல்) காலத்தில் இருந்த சிலைகளின் பெயர்களையும் நாம் வைத்துக்கொள்ளலாம் என்றாகும். எனவே அண்ணன் பி.ஜெ.யின் பக்தகோடிகள் மேற்கண்ட லாத், உஜ்ஜா, மனாத் போன்ற பெயர்களை தங்களுக்கு சையது லாத், சையது உஜ்ஜா என்றோ உஜ்ஜா பீவி, மனாத் பேகம் என்றோ சூட்டிக்கொள்ள தயாரா ? இப்படி உயர்வானதை விடுத்து தாழ்வானதை தேர்ந்தெடுப்போரை குறித்து அல்லாஹ் எச்சரிக்கும்பொழுது :

“நல்லதாக எது இருக்கிறதோ, அதற்கு பதிலாக மிகத்தாழ்வானதை நீங்கள் மாற்றிக் கொள்(ள நாடு)கிறீர்களா ?”

அல்குர்ஆன் :2 :61


எது எப்படியோ அண்ணன் பி.ஜெ. அல்லாஹ்வையும் ரசூலையும் பின்தள்ளி முருகப்பெருமானை முதன்மைபடுத்தி பேசி தனது தமிழ்நா(ட்)டு தவ்ஹீதை நிலைநாட்டியிருப்பதால், முருகப்பெருமானே அண்ணன் பி.ஜெ.யின் கனவில் வந்து சுட்ட பழம் வேண்டுமா ? சுடாத பழம் வேண்டுமா ? என்று கேட்டு ஞானப்பழம் ஒன்றை கொடுத்து ஆசிர்வதிப்பார் என எதிர்பார்க்களாம். அண்ணன் பி.ஜெ.க்கு அரோகாரா.

அண்ணன் பி.ஜெ.யின் கவர்ச்சிப் பேச்சிலிருந்து விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொள்வார். தூங்கியோரெல்லாம் பின்பு துக்கப்படுவார் என கூறியவனாய் இச்சிறு கட்டுரையை நிறைவு செய்கிறேன். வ ஆகிர தாவானா அனில் ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன். அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன். வஸ்ஸலாம்.

இவன்.
முஹம்மது பதுருதீன்.














Sunday 26 October 2008

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹிம்.

அருள்மறையின் அற்புதங்கள்


சந்திரன் இரண்டாக பிளந்ததை ஒப்புக்கொள்ளும் இன்றைய விஞ்ஞானம்.

அல்லாஹ்வும் அவனது ரசூலும் கூறிய விஷயங்களை இன்றைய விஞ்ஞானம் உண்மைபடுத்தி வருகிறது. முஸ்லிம்களென்றால் அல்லாஹ்வும் அவனது ரசூலும் கூறியவைகளை நூறு சதம் உண்மை என நூறு சதம் ஈமான் கொள்பவர்தான். அவ்வாறு ஈமான் கொண்ட விஷயங்களை அல்லாஹ் அவர் கண் முன்னால் காட்டும்பொழுது, அது அவரது ஈமானின் வளர்ச்சிக்கும், இறைநேசத்திற்கும் வித்திடும்.

அல்லாஹ் சுபுஹானுவத்தஆலா இக்கால கட்டத்தில் இஸ்லாத்தின் உண்மையை முஸ்லிம்களை கொண்டு வெளிப்படுத்தவில்லை. மாறாக பெரும்பாலானவைகள் முஸ்லிம் அல்லாதவர்களை கொண்டுதான் வெளிப்படுத்துகிறான். இதில் அல்லாஹ்வின் பேராற்றலும், ஹிக்மத்தும் நிறைந்துள்ளது.

அல்லாஹ் நபி மூஸா (அலை) அவர்களை, முஸ்லிம் சாம்ராஜ்யத்தில், உயர்ந்த கோட்டை கொத்தளங்களில் வைத்து ஃபிர்அவ்னிடமிருந்து பாதுகாக்கவில்லை. மாறாக எந்த ஃபிர்அவ்ன் நபி மூஸா (அலை) அவர்களை அழிக்க நினைத்து, ஆணும் பெண்ணும் சேர தடைவிதித்து, பிறக்கும் ஆண் குழந்தைகள் அனைத்தும் கொல்லப்பட்டு, சல்லடை போட்டு தேடிய அதே ஃபிர்அவ்னின் மாளிகையில் அவனது கண்முன்னால் அவனது பராமரிப்பிலேயே பாதுகாக்கப்பட்டார்கள். அதுபோல் அல்லாஹ்வின் மார்க்கத்தை அழிக்க நினைக்கும், கலங்கம் கற்பிக்க விரும்புபவர்களின் மூலமாகவே அல்லாஹ்வும் ரசூலும் சொன்னவைகள் உண்மையே என்பதை வெளிப்படுத்தி தனது மார்க்கத்தை உயர்ந்தோங்கச் செய்வது அல்லாஹ்வின் வல்லமையாகும். மேலும் சம்பந்தப்பட்டவர்கள் இம்மார்க்கத்தின் உன்மையை உணர்ந்து ஹிதாயத் பெருவது அல்லாஹ்வின் ஹிக்மத்தும் ஆகும்.

அதனடிப்படையில் வருவதுதான் அல்லாஹ் குர்ஆனில் கூறியதும், நபி(ஸல்) அவர்கள் தனது வாழ்நாளில் செய்து காட்டிய அற்புதமுமாகிய சந்திரன் இரண்டாக பிளந்த சம்பவம்.

மறுமை நெருங்கிவிட்டது (அதற்கு அத்தாட்சியாக) சந்திரனும் பிளந்து விட்டது. எனினும், அவர்கள் எந்த அத்தாட்சியைக் கண்ட போதிலும் (அதனைப்) புறக்கணித்து, "இது சகஜமான சூனியந்தான்" என்று கூறுகின்றனர்.
(அல்குர்ஆன் 54 :1,2)



அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நபி (ஸல்) அவர்களிடம் (அவர்கள் இறைத்தூதர் தாம் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில்) தங்களுக்கு ஒரு சான்றைக் காட்டும்படி மக்காவாசிகள் கேட்டுக் கொண்டார்கள். அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் சந்திரனை இரண்டு துன்டுகளாக (பிளந்திருக்கக்) காட்டினார்கள். எந்த அளவிற்கென்றால், மக்காவாசிகள் அவ்விரு துண்டுகளுக்கிடையே ‘ஹிரா’ மலையைக் கண்டார்கள்.

(நூல் : புகாரி)

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நபி(ஸல்) அவர்களின் காலத்தில் சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளந்தது. (பிளவுண்ட சந்திரனின்) ஒரு துண்டு மலைக்கு மேலேயும் மற்றொரு துண்டு மலைக்குக் கீழேயும் சென்றது. அப்போது நபி(ஸல்) அவர்கள் நீங்கள் சாட்சியாக இருங்கள். என்று கூறினார்கள்.

(நூல் : புகாரி)

நபி (ஸல்) அவர்கள் நிகழ்த்தாட்டிய இவ் அற்புதத்தை அக்கால கட்டத்தில் வாழ்ந்த இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சக்கரவர்த்தி "ஃபர்மாஸ்" இதனைக் கண்டுள்ளார். இது சம்பந்தப்பட்ட முழு ஆதாரங்கள் லண்டன் மாநகரிலுள்ள இந்திய நூலகத்தில், பழங்கால கையால் எழுதப்பட்ட பிரதிகளில் காணப்படுகிறது. அதன் குறிப்பு எண் (Ref.No : Arabic, 2807,152-173.) இதனை M. ஹமீதுல்லா எழுதிய "முஹம்மது ரசூலுல்லாஹ்" என்ற ஆங்கில நூலில் குறிப்பிட்டுள்ளார்.

நபியின் இவ் அற்புதத்தை மலபாரில் கண்ட சக்கரவர்த்தி "ஃபர்மாஸ்", மறுநாள் தனது அரசவையில் இதுபற்றி விசாரித்ததில், அவையிலுள்ள அரசு வானசாஸ்திரிகள், "இது அரபு நாட்டில் கடவுளின் தூதர் ஒருவர் வந்துள்ளார் என்பதை அறிவிக்கும் முன்னறிவிப்பு" என அவருக்கு சொல்லப்பட்டது. அத்துடன் தனது மகனை தனது சார்பாக அரியணையில் ஏற்றிவிட்டு, நபி(ஸல்) அவர்களை சந்தித்து அவர்களின் திருக்கரம் பிடித்து இஸ்லாத்தை தழுவ நாடி புறப்பட்டார். நபியை சந்தித்து இஸ்லாத்தை தழுவிய பின் வரும் வழியில் எமன் நாட்டிலுள்ள "ஜஃபர்" என்ற துறைமுக நகரில் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வின்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் அடக்கஸ்தலம் இன்னமும் எமன் நாட்டில் உள்ளது.

உண்மைபடுத்தும் விஞ்ஞானம்


அல்லாஹ்வும் ரசூலும் கூறிய மேற்கண்ட விஷயங்களை இன்றைய விஞ்ஞானம் உண்மைபடுத்தியுள்ளது.

கீழ்கானும் புகைப்படம் அமெரிக்காவின் வின்வெளி ஆய்வு நிருவனம் நாஸா (NASA) 1969-ம் வருடம் அனுப்பிய அப்போலோ-10 மற்றும் அப்போலோ-11 ஆகிய இரு செயற்கைகோல்கள் மூலம் எடுக்கப்பட்டது. படத்தில் காணப்படும் இக்கோடு சந்திரனை முழுவதுமாக சுற்றியுள்ளது. படத்தை பெரிதாக்கிப் பார்க்க அதன் மேல் இரண்டு முறை கிளிக் செய்யவும்.













சந்திரனில் காணப்படும் இக்கோடு சந்திரனை முழுவதும் சுற்றியுள்ளது. இக்கோடு ஒரு காலத்தில் சந்திரன் இரண்டாக பிளந்து பின்பு ஒன்றாக ஒட்ட வைக்கப்பட்டதை ஒற்றதாக உள்ளது. அதாவது ஒரு பொருள் இரண்டாக உடைந்த பின் அதனை ஒட்டுவதற்கு பற்ற வைத்து சீல் வைத்தது போல் உள்ளது.

இங்கிலாந்து நாட்டின் பிரிட்டிஷ் முஸ்லிம் கட்சியின் தலைவர் டேவிட் மூஸா பிட்குக் (David Moosa Pidcook) கூறுகிறார் : இப்புகைப்படக் காட்சி பிபிசி தொலைக்காட்சியில் மூன்று நாஸா விஞ்ஞானிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் காட்டப்பட்டது.

கலந்துரையாடல், நிலவுக்கு மனிதனை அனுப்ப அமெரிக்கா செய்திட்ட செலவினம் பற்றியது. இத்திட்டத்திற்காக சுமார் $100 பில்லியன் டாலர்களை அமெரிக்கா செலவு செய்துள்ளது. மேலும் இவ்வாராய்ச்சியின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட சந்திரனை சுற்றிலும் காணப்படும் இக்கோடு ஒரு காலகட்டத்தில் நிலவு இரண்டாக பிளந்து பின்பு ஒட்ட வைக்கப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்கிறது என அவ் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இதனையே அல்லாஹ் சுபுஹானுவத்தஆலா 1400 வருடங்களுக்கு முன்பே தனது அருள்மறையாம் திருமறையில் :

மறுமை நெருங்கிவிட்டது. (அதற்கு அத்தாட்சியாக) சந்திரனும் பிளந்து விட்டது.

(அல் குர்ஆன் 54 :1)


எனக் கூறியுள்ளான். அல்லாஹ்வும் அவனது ரசூலும் சொன்ன விஷயங்கள் விசுவாசம் கொள்ளாதவர்களின் மூலம் உண்மைபடுத்தி வெளிக்கொணர்வதன் மூலம், விசுவாசம் கொள்ளாதவர்களுக்கு ஹிதாயத்தையும், விசுவாசம் கொண்ட முஸ்லிம்களின் ஈமானை புதுப்பிக்கும் தூன்டுகோளாகவும் ஆக்கி அருளும் அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.

அலிஃப் ; லாம் ; மீம். (அல்லாஹூத்த ஆலா, ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலமாக, நபி முஹம்மது முஸ்தபா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அருட்செய்த திருக்குர்ஆனாகிய) இது வேத நூல். இதில் சந்தேகமேயில்லை.
(அல்குர்ஆன் 2 :1,2)


அஷ்ஹது அன்லாயிலாஹா இல்லல்லாஹ்
வஅஷ்ஹது அன்ன முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்.


ஸல்லல்லாஹூ அலா முஹம்மத். ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்.


இவன்
முஹம்மது பதுருதீன்.

Sunday 24 August 2008

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

ஹயாத்துஸ் ஸஹாபா

கிலாபத் பொருப்பேற்கும் முன்பும் அதற்கு பின்புமுள்ள அபூபக்கர் சித்தீக் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களின் வாழ்க்கை.

இப்னு உமர், ஆயிஷா, இப்னுல் முஸய்யிப் (ரலி) மற்றும் இவர்கள் போன்றோர் அறிவிப்பதாவது. அபூபக்கர் (ரலி) அவர்களிடம் ரசூல் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் வபாத்தான நாளில் பைஅத் செய்யப்பட்டது. ஹிஜ்ரி 11-ஆம் ஆண்டு ரபியுல் அவ்வல் மாதம் 12-ம் நாள் திங்கட்கிழமையன்று ரசூல் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மரணமானார்கள்.

மேலும் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் ஹரிஸ் பின் கஜ்ரஜ் குடும்பத்தைச் சேர்ந்த ஜைத் பின் அபூஜூஹைர் என்பவரின் மகனான, காரிஜா என்பவரின் மகளான, ஹபீபா என்ற பெயர் பெற்ற, சுனுஹ் என்ற இடத்திலுள்ள தன் மனைவியுடைய வீட்டில் தங்குபவர்களாக இருந்தார்கள். அது மதீனாவுக்கு வெளியே இருந்தது. இன்னும் அன்னார் சுனுஹ் என்ற இடத்தில் ஆட்டு ரோமத்தினால் ஆன ஒரு குடிசை போட்டிருந்தார்கள். மதினா விலேயே தங்க வேண்டும் என்று முடிவு செய்யும் வரை அவ்வீட்டிலேயே தங்கினார்கள். அதிகாலையில் கால்நடையாக நடந்தே மதினாவுக்கு வருவார்கள். சில வேலை தன்னுடைய குதிரையின் மீது ஏறி வருவார்கள். அந்நேரத்தில் அவர்கள் கைலி அணிந்திருப்பார்கள். செம்மண் நிற சாயமிடப்பட்ட போர்வையை போர்த்தியிருப்பார்கள்.

அன்னார் மதீனாவுக்கு வந்து மக்களுக்கு ஐந்து நேரம் தொழ வைப்பார்கள். இஷா தொழுது விட்டால் சுனுஹிலுள்ள தன் மனைவியிடம் சென்று விடுவார்கள். அபூபக்கர் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் மதீனா வந்தால் மக்களுக்கு தொழ வைப்பார்கள். வரவில்லையென்றால் உமர் (ரலி) அவர்கள் தொழவைப்பார்கள். மேலும் அபூபக்கர் (ரலி) அவர்கள் ஜூம்ஆவுடைய நாளில் பகலின் ஆரம்பத்தில் சுனுஹில்தான் இருப்பார்கள். தன்னுடைய தலைக்கும், தாடிக்கும் மருதாணி போடுவார்கள். பின்பு ஜூம்ஆவுடைய நேரத்தில் மதீனாவிற்கு வந்து ஜூம்ஆ தொழவைப்பார்கள்.

மேலும் அன்னார் வியாபாரியாக இருந்தார்கள். ஒவ்வொரு நாளும் காலையில் கடைவீதிக்குச் சென்று விற்பது, வாங்குவதில் ஈடு படுவார்கள். இன்னும் அவர்களிடம் ஒரு ஆட்டு மந்தை இருந்தது. அவை மாலை நேரத்தில் தன் கொட்டகைக்குத் திரும்பும் சில வேளை அவர்களே அந்த ஆடுகளை மேய்க்கச் செல்வார்கள். சில வேளை வேறொருவர் மேய்க்கச் செல்வார். இன்னும் அபூபக்கர் (ரலி) அவர்கள் தன் பகுதி மக்களின் கால்நடைகள், ஆடுகளுக்குப் பால் கறந்து கொண்டும் இருந்தார்கள்.

எப்போது அன்னாரிடம் கிலாஃபத்துடைய பைஅத் செய்யப்பட்டதோ அப்போது அப்பகுதியிலிருந்த ஒரு சிறுமி இனி நம் வீட்டிலுள்ள கால்நடைகள், ஆடுகளுக்கு பால் கறக்க மாட்டார்கள் என்று கூறினாள். இதை கேள்விப்பட்ட அபூபக்கர் (ரலி) அவர்கள், என் வயதின் மீது சத்தியமாக ! உங்களுக்காக அந்த ஆடுகளில் நிச்சயம் நான் பால் கறந்து தருவேன். மேலும் நான் ஏற்றுக் கொண்ட கிலாபத் பொருப்பு ஏற்கனவே என்னிடமிருந்து நற்பழக்கங்களை மாற்றி விடாது என்று ஆதரவு வைக்கிறேன் என்பதாகக் கூறினார்கள்.

சில வேலை, தன் முஹல்லாவிலுள்ள சிறுமியிடம், பால் கறக்கும் போது சிறுமியே ! நன்கு நுரைவருமளவு கறப்பதா ? அல்லது நுரையின்றி கறந்து தரவா ? என்று கேட்பார்கள். அச்சிறுமி சில சமயம், நுரையுடன் கறக்கச் சொல்லும், சில சமயம் நுரையின்றி கறக்கச் சொல்லும், எவ்வாறு கூறினாளோ, அது போன்று கறந்து கொடுப்பார்கள். இவ்வாறே ஆறுமாத காலம் சுனுஹில் தங்கியிருந்தார்கள். பிறகு மதீனா வந்து (அங்கேயே) தங்கி தன் கிலாஃபத் பொருப்பை கவனித்தார்கள்.

இன்னும் அல்லாஹ் மீது சத்தியமாக ! வியாபாரத்தில் ஈடு பட்டுக்கொண்டே மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதென்பது சரிபட்டு வராது. மாறாக வியாபாரம் போன்றவைகளை விட்டு மக்களின் தேவைகளை கவனிப்பதற்கென்றே ஒதுங்கி விடுவது மூலமே அவைகளை பூர்த்தியாக நிறைவேற்ற முடியும். அதே சமயம், என் குடும்பத்தினருக்கு அவர்களின் தேவைகள் பூர்த்தியாகுவதற்குரிய ஏற்பாடு செய்வதும் அவசியமாகும் என்று கூறி, வியாபாரத்தை விட்டு விட்டார்கள்.

முஸ்லிம்களின் பொதுச் சொத்திலிருந்து தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் ஒரு நாளைக்கு தேவையான செலவினங்களை பெற்றுக்கொள்வார்கள். அதிலேயே ஹஜ்ஜூம், உம்ராவும் செய்துவிட்டார்கள். பைத்துல்மாலிலிருந்து அவர்களுக்கு ஒதுக்கிய மொத்த தொகை ஒரு வருடத்திற்கு 6000 திர்ஹம் தான்.

அவர்களுக்கு மரணநேரம் வந்ததும், முஸ்லிம்களின் பொதுச் சொத்திலிருந்து நாம் எதையெல்லாம் பெற்றுக் கொண்டோமோ, அவையனைத்தையும் திரும்பக் கொடுத்து விடுங்கள். இந்த பொருளிலிருந்து எதனையும் நான் எடுக்க மாட்டேன். மேலும் இன்னின்ன இடங்களிலுள்ள எனக்கு சொந்தமான நிலங்கள் முஸ்லிம்களின் பொருளிலிருந்து நான் அனுபவித்தவைகளுக்கு பகரமாக முஸ்லிம்களுக்கு சொந்தமாகும் என்று கூறினார்கள். எனவே அந்த நிலத்தையும், ஒரு பால் கொடுக்கும் ஒட்டகம், வாட்களை தீட்டும் அடிமை 5 திர்ஹத்துக்கு சமமான ஒரு போர்வை ஆகியவைகளை உமர் (ரலி) அவர்களிடம் கொடுக்கப்பட்டது. அப்போது அபூபக்கர் (ரலி) அவர்கள், தனக்கு பின்வரும் கலீஃபாக்களை சிரமத்தில் போட்டுவிட்டார்கள் என்று உமர் (ரலி) கூறினார்கள்.

ஹஜ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்கள் ஹிஜ்ரி 11-ம் ஆண்டு உமர் (ரலி) அவர்களை அமீராக்கி ஹஜ்ஜூக்கு அனுப்பினார்கள். ஹிஜ்ரி 12-ம் ஆண்டு, ரஜப் மாதத்தில் அபூபக்கர் (ரலி) அவர்கள் உம்ராவிற்காக சென்றார்கள். லுஹா நேரத்தில் மக்காவில் நுழைந்தார்கள். தன் வீட்டுக்கு வந்தபோது அதன் வாயிலில் அபூகுஹாஃபாவும், அவர் களுடன் சில வாலிபர்களும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். இதோ, உங்கள் மகன், அபூபக்கர் வந்து விட்டார் என்று அவரிடம் சொல்லப்பட்டதும் அவர் எழுந்து நின்றார். உடனே அபூபக்கர் (ரலி) அவர்கள் தன் வாகனத்தை நிறுத்தி, அதிலிருந்து இறங்கி, ஒட்டகத்தை அப்படியே நிற்க விட்டுவிட்டு, என் தந்தையே ! தாங்கள் எழுந்து நிற்க வேண்டாம் என்று கூறிக் கொண்டே வந்தார்கள். பின்பு அவர்களை சந்தித்து, கட்டியணைத்து (தன் தந்தையாகிய) அபூகுஹாஃபாவின் நெற்றியில் முத்த மிட்டார்கள். அப்பெரியவரும் தன் மகன் வந்த மகிழ்ச்சியினால் அழுதார்.

பின்பு (அபூபக்கரின், உம்ரா பயணத்தை கேள்வி பட்டு, தாங்களும் வெளியே சென்று உம்ராவிற்காக இஹ்ராம் கட்டிக் கொண்ட மக்கத்து தலைவர்களான) அத்தாப் பின் அஸீது, சுஹைல் பின் அம்ரு, இக்ரிமா பின் அபீஜஹல் ரலியல்லாஹூ அன்ஹூம் ஆகியோர், மக்காவிற்குள் வந்து ரஸூலுல்லாஹ்வின் கலீஃபாவே ! ‘ஸலாமுன் அலைக்க’ என்று அபூபக்கருக்கு சலாம் சொல்லி அனைவரும் அவர்களுடன் முஸாஃபஹா செய்தார்கள். அவர்கள் ரஸூல் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை நினைவு படுத்தி பேசிய போது அபூபக்கர் (ரலி) அவர்கள் கண்ணீர் விட்டு அழுதார்கள். பின்பு அபூகுஹாஃபா (ரலி) அவர்களுக்கு சலாம் கூறினார்கள்.

உடனே அபூகுஹாஃபா அபூபக்கர் (ரலி) அவர்களிடம், அதீகே ! (இக் கூட்டத்தினை நரகிலிருந்து விடுதலை பெறச் செய்தவரே !) இவர்களுடன் நல்ல விதமாய், உபகாரத்துடன் நடந்து கொள்ளவும் என்று கூறினார். அதற்கு அபூபக்கர் (ரலி) அவர்கள் எனது தந்தையே ! லாஹவ்ல வலாகுவ்வத்த, இல்லாஹ்பில்லாஹ். அல்லாஹ்வின் உதவி கொண்டே நன்மை செய்ய முடியும் தீமையை கைவிட முடியும் நான் மாபெரும் பொருப்பு கொடுக்கப்பட்டுள்ளேன். அல்லாஹ்வின் உதவி கொண்டே தவிர அதை நிறைவேற்ற எனக்கு சக்தியில்லை என்று சொன்னார்கள்.

பின்பு தன் வீட்டினுள் நுழைந்து குளித்துவிட்டு, வெளியேறிய போது, அவர்களின் தோழர்கள், அவர்களை பின் துயர்ந்து சென்றார்கள். அப்போது அவர்களை அகற்றி நீங்கள் மெதுவாக வாருங்கள். (எனக்கு பின்னால் வர வேண்டியதில்லை) என்று கூறிவிட்டார்கள்.

மேலும் பாதையில் செல்லும் போது மக்கள் அவர்களுக்கு முன் வந்து அவர்களை சந்தித்து நபி(ஸல்) அவர்களை பற்றி விசாரிப்பார்கள். அபூபக்கர்(ரலி) அவர்கள் அழுதுவிடுவார்கள். இவ்வாறு பைத்துல்லாஹ் வந்து சேர்ந்ததும், தன் மேல்துண்டால் இள்திபா செய்து (அதாவது இஹ்ராமின் மேல் துணியை வலது புஜம் வெளியே தெரியும் விதத்தில் போட்டுக் கொண்டு) தவாப் செய்தார்கள். பின்பு ஹஜ்ருல் அஸ்வதை முத்தமிட்டார்கள். ருக்னை இஸ்திலாம் செய்தார்கள். பின்பு 7 சுற்றுகள் சுற்றி தவாஃப் செய்து முடித்ததும், இரண்டு ரக்அத் தொழுதார்கள். அதற்குபின் தன் வீட்டுக்கு திரும்பினார்கள்.

லுஹர் நேரம் ஆனதும் சென்று பைத்துல்லாஹ்வை தவாஃப் செய்து விட்டு தாருன் நத்வா என்ற ஆலோசனைக் கூடத்தின் அருகில் அமர்ந்து, தன் அநீதத்தை முறையிடுபவர் எஙரும் உள்ளனரா ? அல்லது தன் தேவையை, உரிமையை கேட்பவர் எவரும் உள்ளார்களா ? என்று கேட்டார்கள். மக்களில் யாரும் அவர்களிடம் வரவில்லை. மக்கள் அனைவரும் தங்கள் பொருப்புதாரி அத்தாப் பின் அஸீதை பாராட்டினார்கள். பின்பு அங்கு அமர்ந்திருந்த மக்கள் அவர்களுக்கு விடையளித்தார்கள். பின்பு மதீனாவை நோக்கி திரும்பி விட்டார்கள்.

ஹிஜ்ரி 12-ம் ஆண்டு ஹஜ்ஜூடைய காலம் வந்ததும் மக்களுடன் சேர்ந்து அவ்வருடம் ஹஜ்ஜூ செய்தார்கள். அதை ஹஜ்ஜே இஃப்ராதாக செய்தார்கள். மேலும் ஹஜ்ரத் உஸ்மான் (ரலி) அவர்களை மதினாவில் தன் பிரதிநிதியாக விட்டுச் சென்றார்கள்.

நூல் : தபகாத், ஹ-ச – 180,181 – 2



இதுதான் எங்களின் உத்தம நபியின் அருமை தோழர், ‘சித்தீகுல் அக்பர்’ அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களின் எளிமை, பணிவு, இறையச்சத்துடன் கூடிய வாழ்க்கை முறையின் ஒரு பகுதி. ஜனாதிபதியாக பதியேற்ற பின்னும் ஒரு சிறுமிக்கு அவளின் விருப்பப்படி பால் கறந்து கொடுத்து அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி, துனியாவை தேவையாகவும் மறுமையை நோக்கமாகவும் கொண்ட அவர்களின் வாழ்க்கையின் எடுத்துக்காட்டு. அல்லாஹ் இவ்வுத் தமர்களின் வாழ்க்கை முறையை நம் அனைவருக்கும் தந்தருள்வானாக. மேலும் அல்லாஹ்வும், ரசூலும் கூறியவைகளை எவ்வாறு இவ்வுத்தமர்கள் விளங்கி அதன்படி அமல் செய்தார்களோ அவ்விளக்கத்தை அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்தருள்வானாக. ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன். வஆகிர தாவானா வஅனில் ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன். வஸ்ஸலாம்.

இவன்.
முஹம்மது பதுருதீன்.

Saturday 2 August 2008

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.



அருள்மறையின் அற்புதங்கள்.

இம்மனிதனின் அளவை சற்று கற்பனை செய்து பாருங்கள். உலகின் அதிகமான உயரமுடைய பலமிக்க மனிதர்கள் வாழ்ந்த நாட்டின் மக்களில் ஒருவர். செளதி அரேபியாவின் தென்கிழக்கு பாலைவனப் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு துரப்பணப் பணி மேற்கொள்ளப்பட்ட சமயம் இம்மனித உடல் கண்டெடுக்கப்பட்டது.



இப் பாலைவனப் பகுதியை ஆளில்லா வசிப்பிடம் என்று அழைக்கப்படுகிறது. இதுவே அரபு மொழியில் " RAB-UL-KHALEE " என்று சொல்லப்படும். மேற்கண்ட மனித உடல் ARAMCO என்ற செளதி அரேபியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு துரப்பணப் பணி குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டது.

மேற்கண்ட உடல் அல்லாஹ் குர்ஆனில் சொன்னதை உறுதிபடுத்தும் அடையாளமாகும். ஹூது நபியின்(அலை) கூட்டத்தாராகிய ஆது சமூகத்தினர் பற்றி அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடும்பொழுது, இச்சமூகத்தினர் அதிக உயரமும், அதிக பலசாலியாகவும் இருந்தனர்.

ஆது என்னும் ஜனங்களோ, பூமியில் நியாயமின்றிப் பெருமை கொண்டு, எங்களைவிட பலசாலி யாரென்று கூறினார்கள். அவர்களைப் படைத்தவன் நிச்சயமாக அவர்களைவிட பலசாலி என்பதை, அவர்கள் கவனித்திருக்க வேண்டாமா ? (எனினும்,) அவர்கள் நம்முடைய (இத்தகைய) அத்தாட்சிகளையும், தர்க்கித்து நிராகரித்துக் கொண்டே இருந்தார்கள்.

அல்குர்ஆன் : 41 :15

(நபியே !உயர்ந்த) ஸ்தம்பங்களைப் போன்ற 'இரம்' என்னும் ஆது ஜனங்களை உமது இறைவன் எவ்வாறு (வேதனை) செய்தான் என்பதை நீர் கவனிக்கவில்லையா ? அவர்களைப் போன்று, (பலசாலிகள் உலகத்திலுள்ள) நகரங்களில் (எங்குமே) படைக்கப்படவில்லை.

அல்குர்ஆன் : 89 : 6, 7,8

ஆனால் எப்பொழுது அல்லாஹ்வுக்கும் அவனது தூதராகிய நபி ஹூது(அலை) அவர்களுக்கும் மாறு செய்து வரம்பும் மீறினார்களோ அவர்களை அல்லாஹ் அழித்துவிட்டான்.

அன்றி, இவ்வாறே ஆது ; ஸமூது கூட்டத்தினரையும் (அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக) நாம் அழித்துவிட்டோம். (நீங்கள் போக வர உள்ள வழியில்) அவர்கள் இருந்த இடங்கள் உங்களுக்கு நன்றாகவே தென்படுகின்றன.

அல்குர்ஆன் 29 : 38

ஆத் என்னும் ஜனங்களோ, அதி வேகமாக விரைந்து (இரைந்து) செல்லும் (புயல்) காற்றைக் கொண்டு அழிக்கப்பட்டனர்.

அல்குர்ஆன் 69 : 6

செளதி அரேபியா உலமாக்களின் அபிப்பிராயப் படி இம்மனித உடல் ஆது சமூகத்தாரை சேர்ந்தது என்று கருதுகின்றனர். இப்பகுதியை செளதி இரானுவம் தனது முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. வெளியிலிருந்து யாரும் இப்பகுதிக்கு உள்செல்ல அனுமதியில்லை, ARAMCO நிறுவனத்தின் முக்கியஸ்தர்களைத் தவிர.

செளதி அரசு இப்பகுதியை மிகவும் இரகசியமாக பாதுகாத்து வருகிறது. இருப்பினும் இரானுவ ஹெலிகாப்டரிலிருந்து சில இரானுவத்தினர் இப்புகைப் படத்தை மேலிருந்து எடுத்துள்ளனர்.

இப்புகைப்படத்தின் மூலம் நாம் அடையும் நன்மைகள் ஏராளம். அல்லாஹ்வும் ரசூலும் கூறியவைகள் எந்தளவு நூற்றுக்கு நூறு உண்மையானது சத்தியமானது என்பதை பறைசாற்றும் ஆதாரங்கள்தான் இவை போன்றவைகள். ஒரு உண்மை முஸ்லிம் கண் பார்வையை கொண்டு ஈமான் கொள்வது கிடையாது. ஈமானின் பார்வையை கொண்டுதான் அவன் ஈமான் கொள்வான். அவ்வாறு அவன் ஈமானின் பார்வையை கொண்டு ஈமான் கொண்ட விஷயங்களை அல்லாஹ் அவனது கண் பார்வைக்கும் காட்டுவானேயானால் அது அவனுடைய ஈமானில் அபிவிருத்தியையும் இறைநேசத்தையும் ஏற்படுத்தும்.

மாறாக இப்படிப்பட்ட அத்தாட்சிகள் வெறுமனே கண்காட்சி பொருளாகவும், பத்தோடு பதினொன்று அத்தோடு இதுவும் ஒன்று என்ற கோணத்தில் பார்ப்போமேயானால் உண்மையிலேயே நஷ்டம் நமக்குத்தான். இதைத்தான் கண் இருந்தும் குருடர் என்பர்.

அருள்மறையின் அற்புதங்கள் தொடரும்…




இவன்.
முஹம்மது பதுருதீன்.

Wednesday 9 July 2008


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹிம்.


அண்ணன் பி.ஜெ. பின்பற்றுவது யூதரையா ? தூதரையா ?


சிரிப்போம் – சிந்திப்போம்.

சிரிப்போம்.

பெரியோர்களே ! தாய்மார்களே !

எங்கள் அண்ணன் பி.ஜெ. யாரெனில் நான்கு மாபெரும் இமாம்கள், சஹாபாக்கள், நபிமாரகள் மற்றும் குர்ஆனையும் ஒரு கை பார்த்து, ஹதீஸ்களை ஆய்வு செய்வதில் இவர் ஓர் அண்ணாமலை. ஹதீஸோடு நின்றுவிடாமல் விஞ்ஞானத்திலும் நபி(ஸல்) மற்றும் சஹாபாக்களைவிட தான் சிறந்தவர் என்றும் ஏனெனில் நபி(ஸல்) காலத்தில் சேட்டிலைட் எல்லாம் கிடையாது நம் கண் முன்னால் எல்லாம் தெரிய நபி(ஸல்) இப்படி சொல்லியிருக்க முடியுமா ? என்று சஹீஹான ஹதீஸ்களை தள்ளுபடி செய்து தனக்கே உரிய பாணியில் அதிரடியாய் கூறி அனைவரும் மூக்கின் உள்ளே விரல் வைக்கும் அளவு தனது விஞ்ஞானத்தை வளர்த்துள்ளார் எங்கள் பி.ஜெ.

யூத, கிறுஸ்துவ விஞ்ஞானிகளால் சொல்லப்படும் விஞ்ஞான கருத்திற்கு மாற்றமாக குர்ஆனிலோ ஹதீஸ்களிலோ கருத்துக்கள் இடம்பெற்றாலும் குற்றம் குற்றமே ! எனக்கூறும் பக்கீரன் பரம்பரையில் வந்தவர் எங்கள் குருநாதர் பி.ஜெ. அண்ணனின் பேச்சை கேட்டு யாருக்காவது உடல் fullஅரித்தால் நன்றாக சொரிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அண்ணனால் நியமிக்கப்பட்ட "செட்டப் செல்லாப்பா" இலங்கை மெளலவி கேட்ட கேள்விக்கு விஞ்ஞானி பி.ஜெ. தந்த விஞ்ஞான பதிலை மட்டும் கீழே தந்துள்ளோம் கேட்டு உங்களது விஞ்ஞானத்தை வளர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அண்ணனை வசைபாடுவோருக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறோம், அடுத்தவர்களை நோண்டி நொங்கு எடுப்பதில் எக்ஸ்பர்ட் ஆன எங்கள் அண்ணன் பி.ஜெ.-யை யாராவது நோண்ட நினைத்தால் அவர்களை போண்டியாக்குவோம். எங்கள் அண்ணன் பி.ஜெ. கற்றது கடல்அளவு கற்க வேண்டியது கைபிடி அளவுதான். விஞ்ஞானி பி.ஜெ. கையால் சுற்றி சுற்றி தந்த விளக்கத்தை பார்த்து தலை சுற்றாதவர்களே கிடையாது. எனவே அனைவரும் சுற்றி நின்று இவ்வீடியோ கிளிப்பை பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.




விஞ்ஞானி பி.ஜெ.

சிந்திப்போம்.



ஹதீஸ் : அபூதர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி(ஸல்) அவர்கள் சூரியன் மறைந்த நேரத்தில் என்னிடம், அது (சூரியன்) எங்கு செல்கிறது என்று உனக்குத் தெரியுமா ? என்று கேட்டார்கள். நான் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அறிவார்கள் என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள், அது அர்ஷுக்கு (இறை சிம்மாசனத்திற்கு) கீழே ஸஜ்தா (வணக்கம்) செய்வதற்காகச் செல்கிறது. அங்கு அது (கிழக்கிலிருந்து உதயமாகுவதற்கு இறைவனிடம்) அனுமதி கேட்கிறது. உடனே அதற்கு அனுமதியளிக்கப்படுகிறது. (இறுதியாக ஒரு நாள்) அது ஸஜ்தா செய்ய, அந்த ஸஜ்தா ஏற்கப்படாமல் போகவிருக்கிறது. அப்போது அது (வழக்கம் போன்று) கிழக்கிலிருந்து உதயமாவதற்கு அனுமதி கேட்கும் ; அதற்கு அனுமதியளிக்கப்படாது. மாறாக, வந்த வழியே திரும்பி விடு என்று அதற்கு உத்தரவிடப்படும் அதன்படி அது மேற்கிலிருந்து உதயமாகும் என்றார்கள். இதைத்தான், சூரியன் தான் நிலை கொள்ளும் ஓர் இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அது பேரறிவாளனான வல்லமை மிக்க (இறை)வனின் நிர்ணயமாகும் (திருக்குர்ஆன் 36 :38) என்னும் இறைவசனம் குறிக்கிறது என்றார்கள்.


(நூல் : புகாரி)


இஸ்லாத்திற்கு கலங்கம் கற்பிக்க விரும்புவோர் குறிப்பாக முஸ்லிமல்லாதோர் சொல்லும் பல காரணங்களில் ஒன்று "இஸ்லாம் விஞ்ஞானத்திற்கு எதிரானது, இக்காலத்திற்கு ஒவ்வாதது" என்பதுதான். இதனையே அண்ணன் பி.ஜெ. சற்று மாறுதலாக இஸ்லாமிய சாயம் பூசி (அப்பொழுதுதான் அண்ணனை அடையாளம் காண முடியாது என்பதற்காக) நபி(ஸல்) இப்பொழுதுள்ள விஞ்ஞானத்திற்கு மாற்றமாக சொல்லியிருக்க முடியுமா ? என்று வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் கூறி புகாரியில் இடம்பெற்றுள்ள மேற்கண்ட சஹீஹான ஹதீஸை தள்ளுபடி செய்வதின் மூலம் "இஸ்லாம் (குர்ஆன், ஹதீஸ்) விஞ்ஞானத்திற்கு எதிரானது, இக்காலத்திற்கு ஒவ்வாதது" என்ற காபிர்களின் கொள்கையை மறைமுகமாக கூறுகிறார் அவ்வளவுதான். இருவரும் கூறும் விதம் வெவ்வேறாக இருந்தாலும் கருத்து ஒன்றுதான் என்பதை சற்று ஆழ்ந்து சிந்தித்தால் உண்மை நன்கு வெளிப்படும்.

அண்ணன் பி.ஜெ. எதனை அடிப்படையாகக் கொண்டு நபி(ஸல்) அவர்கள் கூறியதை நிராகரித்து தனது மனோஇச்சையை மார்க்க மாக்குகிறார் என்றால் அவர் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம். இக்காலம்தான் யூத, கிறிஸ்தவர்களின் விஞ்ஞான வனர்ச்சிமிக்க நவீன காலம், நபி(ஸல்) அவர்களின் காலம் மெளட்டீக காலம் (நஊதுபில்லாஹ்) என்பதை சொல்லாமல் சொல்கிறார். எதனையும் அண்ணன் பி.ஜெ. கண்ணால் பார்த்துதான் ஈமான் கொள்வார் போலும் அல்லாஹ், சுவர்க்கம், நரகம், மலக்குமார்களை எவ்வாறு ஈமான் கொண்டுள்ளார் என்பதை அல்லாஹ்வே நன்கு அறிந்தவன். சூரியன், சந்திரன் மற்றும் அண்ட சராசரங்களையும் படைத்த வல்ல ரஹ்மான் தனது ரசூலின் மூலம் சூரியனின் இயக்கம் பற்றி ஹதீஸாக சொன்ன விஷயம் பொய், யூத கிறிஸ்தவ விஞ்ஞானிகள் கூறுவதே மெய் என சொல்லாமல் சொல்லும் இம் மாபேதையின் கூற்றை நம்பியோரை என்னவென்று சொல்வது ? அல்லாஹ் பாதுகாப்பானாக.

இந்த சஹீஹான ஹதீஸ் சம்பந்தமாக விஞ்ஞானி பி.ஜெ.யிடம் கேட்கும் முதலாவது கேள்வி.

கேள்வி 1 : அண்ணன் பி.ஜெ. அவர்கள் கண்ணால் பார்த்து ஈமான் கொள்ள சேட்டிலைட் இல்லாத, சூரியன் பூமியை சுற்றி வருகிறது என்று நம்பும் காலத்தில் வாழ்கிறார் என வைத்துக்கொள்வோம் அப்பொழுது இந்த ஹதீஸை ஏற்றுக்கொள்வாரா ? அல்லது தள்ளுபடி செய்வாரா ? தள்ளுபடி செய்தால் வழிகேடர் என்பது பச்சையாக விளங்கும். சரி சஹீஹ் என்று அக்காலத்தில் நம்பிவிட்டு இக்காலத்தில் யூத, கிறிஸ்துவ விஞ்ஞானிகளின் கூற்றை உண்மைபடுத்தி, நபி(ஸல்) இப்படி கூறியிருக்க முடியுமா ? என்று எவ்வித ஆதாரமுமின்றி தனது யூகத்தை மட்டுமே ஆதாரமாக்கி இந்த ஹதீஸை தள்ளுபடி செய்வதன் மூலம், அண்ணன் பி.ஜெ. பின்பற்றுவது யூதரையா ? தூதரையா ? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

அல்லாஹ்வும் அவனது ரசூலும் கூறியவைகளில் தனது அறிவுக்கு எட்டாத விஷயங்களை பொய்யாக்குபவர்களைப் பற்றி அல்லாஹ் எச்சரிக்கும் பொழுது :

அவர்கள் தங்கள் அறிவால் தெரிந்து கொள்ள முடியாததையும் (நிகழுமென) அதில் கூறப்பெற்றவை நிகழாதிருக்கையில் அவற்றையும், (அதில் கூறப்பெற்ற மற்றவைகளையும்.) பொய்யென அவர்கள் கூறுகின்றனர். இவர்களுக்கு முன்னிருந்தவர்களும், இவ்வாறே (தங்கள் அறிவுக்கு எட்டாததையும், தாங்கள் காணாததையும்) பொய்யெனெக் கூறிக் கொண்டிருந்தனர். ஆகவே அந்த அநியாயக்காரர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதை (நபியே !) நீர் கவனியும்.

(அல்குர்ஆன் 10 :39)



கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதும் பொய். அல்லாஹ்வும் அவனது ரசூலும் எதைச் சொன்னார்களோ அதுமட்டுமே மெய் என நம்புவதுதான் ஒவ்வொரு முஸ்லிமின் அடிப்படைக் கோட்பாடாகும். அல்லாஹ்வும் தனது திருமறையில் இறையச்சம் உடையவர்களின் தன்மைகளில் ஒன்றை குறிப்பிடும்பொழுது :

அவர்கள் மறைவானவற்றை (உண்டென்று) விசுவாசம் கொள்வார்கள்.

(அல்குர்ஆன் 2 :3)


அல்லாஹ்வும் ரசூலும் சொன்னவைகள் நூறு சதம் உண்மையானது என்று நூறு சதம் ஈமான் கொள்வதுதான் ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும். அதனடிப்படையில் அல்லாஹ்வும் ரசூலும் சொன்ன விஷயங்களை ஆய்வு செய்வதினால் கிடைக்கும் விளக்கம் நமது ஈமானின் வளர்ச்சிக்கும், அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைப்பதிலும் பேருதவியாய் இருக்கும். இதற்கு மாற்றமாக அல்லாஹ்வும் ரசூலும் சொன்னவைகள் உண்மையா ? பொய்யா ? என்ற அடிப்படையில் ஒருவர் ஆய்வு செய்வாரானால் அது குஃப்ரில் கொண்டு போய் சேர்க்கும். அல்லாஹ் அத்தகைய நிலையிலிருந்து நம் அனைவரையும் பாதுகாப்பானாக. ஆமீன்.

இந்த ஹதீஸ் நூறு சதம் நபி(ஸல்) சொன்னதுதான் என்பதை நிரூபிக்கும் முன் அண்ணன் பி.ஜெ.யிடம் கேட்கும் இரண்டாவது கேள்வி.

கேள்வி 2 : நபி(ஸல்) இப்படி கூறியிருக்க முடியுமா ? என்று எவ்வித ஆதாரமுமின்றி யூகத்தின் அடிப்படையில் தங்களுக்கு தாங்களே கேள்வி கேட்டு, யூதர்களின் விஞ்ஞான கூற்றை உண்மை படுத்தி மேற்படி நபி(ஸல்) அவர்களின் சஹீஹான ஹதீஸை தள்ளுபடி செய்திருப்பதால், தங்களிடம் கேட்கும் இக்கேள்வியே தங்களுக்கு கேள்வியாகவும் பதிலாகவும் அமையும். நபி(ஸல்) இப்படி கூறியிருந்தால் தங்களின் நிலைப்பாடு என்ன ?

மனிதன் தன் மரணத்திற்குப் பின் மட்டுமே காணக்கூடிய, ஈமான் கொள்ளப்பட வேண்டிய மறைவான விஷயங்களை அல்லாஹ்வும் அவனது ரசூலும் அறிவித்தாலன்றி எந்த கண்ணும் எந்த சேட்டிலைட்டும் அதனை காண முடியாது. உதாரணத்திற்கு சுவர்க்கம், நரகம் மற்றும் கப்ருடைய வாழ்க்கை. அந்த தரத்தில் வரும் மறைவான விஷயத்தை அறிவிக்கும் விஞ்ஞானப் பூர்வமான சஹீஹான ஹதீஸ்தான் மேற்கண்டது.

இந்த ஹதீஸில் உள்ள வாசகத்தை சற்று கவனித்தாலே இந்த உண்மை நன்கு விளங்கும். நபி (ஸல்) மேற்கண்ட ஹதீஸில் தெரிவிப்பது "சூரியன் அர்ஷூக்கு கீழே ஸஜ்தா செய்ய செல்கிறது " என்பதுதான். இந்த ஹதீஸில் அல்லாஹ்வுடைய அர்ஷ் இடம்பெற்றிருப்பதால் இது மறைவான விஷயமும் மனிதனால் அவனுடைய மரணத்திற்கு முன் காண இயலாத ஒன்று என்பதும் தெள்ளத் தெளிவு. அப்படியிருக்க எந்த சேட்டிலைட், சூரியன் அல்லாஹ்வுடைய அர்ஷை ஸஜ்தா செய்வதை படம் பிடித்து நமக்கு காட்டும் ? சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்கக் கூடாதா ?

இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த ஹதீஸ் திருக்குர்ஆனின் 36 :38ம் வசனத்திற்கு விளக்கமளிக்கும் ஹதீஸ். குர்ஆனுக்கு நபியின் விளக்கத்தை நிராகரித்து, யூத விஞ்ஞானிகளின் கூற்றை திணித்திருப்பதன் மூலம் அண்ணன் பி.ஜெ. பின்பற்றுவது யூதரையா ?தூதரையா ?

அடுத்து சூரியன் மேற்கு திசையில் உதிக்க வேண்டுமெனில் பூமி திருப்பி சுற்றினால்தான்( ?!) அது சாத்தியமாகுமாம். இது சொன்னது யார் ? அல்லாஹ்வா ? அல்லது அவனது ரசூலா ? அடுத்தவர்களிடம் அனைத்திற்கும் குர்ஆனையும், ஹதீஸையும் ஆதாரமாகக் கேட்பவர்கள் தங்களுக்கு யூதர்களின் விஞ்ஞான கூற்றை ஆதாரமாக்குவது எவ்விதத்தில் நியாயம் ? சரி ஒரு வாதத்திற்கு விஞ்ஞானி பி.ஜெ.யின் யூத கூற்றை எடுத்துக்கொள்வோம். இது அண்ணனின் நம்பிக்கைக்கு நேர் மாறானது. இதனை விளங்கிக்கொள்ள நாமே சூரியன் மேற்கே உதிக்கும் நாளில் இருப்பதாக கற்பனை செய்வோம் அன்று காலை 6 மணி நம்முடைய எதிர்பார்ப்பு சூரியன் வழக்கப்படி கிழக்கில் உதிக்க வேண்டும். ஆனால் மாற்றமாக மேற்கில் உதயமாகும். இது சூரியன் தன் இடத்திலிருந்து இடம்பெயர்ந்தால்தான் இது சாத்தியமாகும். அப்படியின்றி அண்ணன் பி.ஜெ.யின் யூத கூற்றின் படி பூமி திருப்பி சுற்றுமேயானால் சூரியன் உதிக்காது மாறாக மறையும் எப்படியெனில் 6 மணி 5 மணியாக 4 மணியாக 3 மணியாக குறைந்துகொண்டு இருட்டாகுமே தவிர விடியாது. சூரியன் தன் இடத்தை விட்டு இடம்பெயர்ந்தால்தான் இது சாத்தியமாகும். இதைத்தான் நபி(ஸல்) தெளிவாகவும் விளக்கமாகவும் அறிவிக்கிறார்கள். இதனை பொய் என்று சொல்பவர்களை என்னவென்று சொல்வது ? நபி(ஸல்) தன் மீது பொய்யுரைப்பவரைப் பற்றி கூறியதை ஞாபகத்தில் வைத்துக்கொள்வது நல்லது.

ஹஜ்ரத் அலி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ' என் மீது பொய் சொல்லாதீர்கள் ! என் மீது பொய் சொன்னவன் நரகத்தில் நுழையட்டும்'

நூல் : புகாரி, முஸ்லிம்.


அண்ணன் பி.ஜெ. மற்றொரு யூத விளக்கத்தை தருகிறார் அதாவது சுற்றி கொண்டிருக்கும் பூமி திடீரென்று பிரேக் அடிப்பதால்தான்( ?!) கியாமத் நாளில் ஏற்படும் "ஜில்ஜிலத்" பூமி அதிர்ச்சி ஏற்படுகிறதாம் அதாவது பஸ்ஸில் போகும் பொழுது திடீரென்று பிரேக் போட்டால் நம்மை எவ்வாறு தூக்கியெறிகிறதோ அதுபோல் தூக்கியெறியுமாம் (அண்ணன் பி.ஜெ.யின் ஆதாரம்). அப்படியானால் இப்பொழுது நிகழ்ந்து கொண்டிருக்கும் பூகம்பங்கள், சுனாமிகள் போன்றவை பூமி போடும் 'திடீர்' பிரேக்கினாலா ? அல்லாஹ்வும் ரசூலும் கியாமத் நாளின் நிகழ்வு 'சூர்' எனும் எக்காலம் ஊதப்படுவதால் நிகழும் என அறிவித்திருக்க. அண்ணன் இப்படி பூமிக்கு திடீர் பிரேக் போடுவது சரியா ? சம்பந்தப்பட்டவர்கள் சிந்திப்பார்களாக.

இறுதியாக இந்த நவீன இமாமின் புதிய கான்செப்ட் அதாவது ஹதீஸ் கலையில் இவர் கண்டுபிடித்த நவீன உசூல் "சஹீஹான ஹதீஸ் குர்ஆனோடு மோதினால் ( ?!) நபி (ஸல்) இப்படி சொல்லியிருக்க முடியுமா ?" என்பதுதான். இது விஷயமாகவும் நவீன இமாம் அண்ணன் பி.ஜெ.யிடம் ஒரு கேள்வி.

கேள்வி 3 : " சஹீஹான ஹதீஸ் குர்ஆனோடு மோதினால் ( ?!) நபி (ஸல்) இப்படி சொல்லியிருக்க முடியுமா ?" என்று சஹீஹான ஹதீஸை லயீஃப் ஆக்கும் தங்களின் இந்த நவீன உசூலின் படி ; " லயீஃபான ஹதீஸ் குர்ஆனோடு மோதவில்லையெனில், நபி(ஸல்) இப்படி சொல்லியிருக்க முடியும் ! " என்று லயீஃபான ஹதீஸை சஹீஹாக மாற்றலாமா ? ஏனெனில் மனிதன் என்ற அடிப்படையில் சஹீஹ், லயிஃப் இருபக்கமும் தவறு நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது அல்லவா ?

எனவே இந்த ஹதீஸ் நபி (ஸல்) கூறிய சஹீஹான ஹதீஸ்தான் என்பதில் அனுவளவு கூட சந்தேகமில்லை. குர்ஆன் மற்றும் ஹதீஸின் உண்மையான அர்த்தங்களை உல்டா பன்னி பிழைப்பு நடத்தும் புருடா அண்ணன் பி.ஜெ. ஹதீஸ்களை குர்ஆனோடு மோதவிட்டு ஹதீஸ்களையும், குர்ஆனின் உண்மை அர்த்தங்களையும் சிதைப்பதன் மூலம் அண்ணன் பி.ஜெ. தனது புதிய TNTJ மார்க்கத்திற்காக "புதிய வேதம்" ஒன்றை உருவாக்குவார் என்று எதிர்பார்க்கலாம். இது அண்ணனின் வெறும் வெள்ளோட்டம்தான் போகப் போக பாரு இன்னும் கொஞ்சம் புரியும்.

இப்படிப்பட்டவர்களைப் பற்றி நபி(ஸல்) எச்சரித்த ஹதீஸ் ஒன்றை குறிப்பிட்டு விட்டு இக்கட்டுறையை நிறைவு செய்கிறேன். வ ஆகிர தாவானா வஅனில் ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.

இம்ரான் இப்னு ஹூசைன் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : எனக்குப்பின் நான் உங்கள் விஷயத்தில் மிகவும் அஞ்சுவது நாவண்மை மிக்க வேடதாரிகளைப் பற்றியே என்று நபி (ஸல்) கூறினார்கள்.

நூல் : தப்ரானி, பஸ்ஸார்



இவன்.
முஹம்மது பதுருதீன்.

Wednesday 4 June 2008

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹிம்

அருள்மறையின் அற்புதங்கள்.

இந்தியாவில் ஆந்திரா மாநிலத்தில் ஹைதராபாத் நகரின் தப்பச்சபுத்ரா என்ற ஊரில் வசிக்கும் முஹம்மது ஃபாருக் என்பவரது வீட்டில் இருந்த 100 வருட பழமையான திருக்குர்ஆனை கரையான் அரித்து தின்றது. குர்ஆன் வைக்கப்பட்டிருந்த பெட்டி, உறை மற்றும் உருது மொழிபெயர்ப்பு உள்பட அனைத்தையும் தின்ற கரையான், அல்லாஹ் எம்மொழியில் குர்ஆனை இறக்கினானோ அந்த அரபு மொழியிலுள்ள இறைவாசகத்தை கரையான் அரிக்கவில்லை. இந் நிகழ்வு " இவ்வேதத்தை நாமே பாதுகாப்போம் " என்ற அல்லாஹ்வின் வாசகத்தை உண்மைபடுத்தும் சம்பவமாகும்.

இத்திருக்குர்ஆன் பொதுமக்கள் பார்வைக்காக 3 நாட்கள் ஹைதராபாத் நகரின் சன்சல்குடா என்ற ஊரில் உள்ள மஜ்லிஸ் பாஷா தஹ்ரீக் (MBT) அலுவலகத்தில் வைக்கப்பட்டது.

கீழ்கண்ட புகைப்படத்தில் இத்திருக்குர்ஆனை மெளலானா சையத் ஷா பத்ருத்தீன் காதிரி அல் ஜீலானி, டாகடர் காயம் கான், அம்ஜத் உல்லா கான் மற்றும் பலர் பார்வையிடுகின்றனர். மேலும் இத்திருக்குர்ஆனை பரிசோதித்து இச்சம்பவம் உண்மைதான் என்று சாலர் ஜங் அரும்பொருட்காட்சியகத்தைச் சார்ந்த உயரதிகாரிகள் சான்றிதழும் வழங்கியுள்ளனர்.

படத்தை பெரிதாக்கிப் பார்க்க அதன் மேல் இரண்டு முறை "கிளிக்" செய்யவும்.






அருள்மறையின் அற்புதங்கள் தொடரும் ...


இவன்.
முஹம்மது பதுருதீன்.

Wednesday 28 May 2008

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

மத்ஹப்கள் மீதான அவதூறுகளுக்கு மெளலவி அப்துல்லாஹ் ஜமாலி அவர்கள் ஆதாரப்பூர்வமான பதில் தருகிறார். அவதூறை நம்பியோர் கேட்டு தெளிவு பெற வேண்டுகிறோம்.

பாகம் - 1


அவதூறு 1: தொழுகையில் பலவிதம்.


அவதூறு 2: தொழுகையில் காற்று விடுதல்.



அவதூறு 3: மத்ஹப்கள்


அவதூறு 4: நபி(ஸல்) மெளலிது



ஐயமும் தெளிவும் தொடரும்...


இவன்.
முஹம்மது பதுருதீன்.

Monday 26 May 2008

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் !

10 கேள்விகளுக்கு பதில் அளித்தால் 10 இலட்சம் பரிசு! பரிசு இங்கே! பதில் எங்கே?


அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) !

10 கேள்விகளுக்கு பதில் அளித்தால் 10 லட்சம் பரிசு என்று சவால் விடுகிறார் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கிய பேரவை தலைவர் மொளலவி ஷேக் அப்துல்லா ஜமாலி அவர்கள்.

விவரங்களுக்கு கீழேயுள்ள முகவரிகளை "கிளிக்" செய்து பாருங்கள்.

Part-1
http://www.youtube.com/watch?v=-lDSqDRLcMU

Part-2
http://www.youtube.com/watch?v=yZcoz-j-Lhc

Part-3
http://www.youtube.com/watch?v=VfzuReSuW4Q

Part-4
http://www.youtube.com/watch?v=uNb6QN1auBk

Part-5
http://www.youtube.com/watch?v=Sfs_StHd4YQ

Part-6
http://www.youtube.com/watch?v=WxYafYDk78k

Part-7
http://www.youtube.com/watch?v=_XcOrKUHbEg

Part-8
http://www.youtube.com/watch?v=XagaCY-ihkE

Part-9
http://www.youtube.com/watch?v=Qllk8jM780U

Part-10
http://www.youtube.com/watch?v=wqfe8GfMtUM

Part-11
http://www.youtube.com/watch?v=VAl8H4uUcjw

Part-12
http://www.youtube.com/watch?v=eLyNFThhUdE



இவன்.
சகதுல்லாஹ்
துபை.

Wednesday 14 May 2008

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்


ஹயாத்துஸ் ஸஹாபா

சயீது பின் ஆமிர் பின் ஜித்யம் அல்ஜூமஹிய்யி ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களின் சம்பவம். அன்னார் ஹிம்சினுடைய கவர்னராக இருந்த போது அவர்களின் வாழ்வின் நிலை.

காலித் பின் மஃதான் என்பவர் அறிவிப்பதாவது : உமர் (ரலி) அவர்கள் எங்களுக்கு ஹிம்சில் சயீத் பின் ஆமிர் பின் ஜித்யம் அல்ஜூமஹிய்யி (ரலி) என்ற ஸஹாபியை கவர்னராக்கினார்கள். உமர் (ரலி) அவர்கள் ஹிம்சுக்கு வந்த சமயம் ஹிம்சுவாசிகளே ! உங்கள் கவர்னரை எப்படி பெற்றுக் கொண் டீர்கள் என்று கேட்டதும், அவர்களிடம் தம் கவர்னரை பற்றி முறையிட்டார் கள். ஹிம்சு மக்களுக்கு சிறிய கூஃபாவாசிகள் என்று சொல்லப்படும். அவர் களும் கூபாவாசிகள் போன்று தங்கள் அமீரை முறையிடுபவர்களாக இருந்ததால் இவ்வாறு பெயர் வந்தது.

ஹிம்சு வாசிகள் நாங்கள் நான்கு குறைகளை முறையிடுகிறோம் என்று சொன்னார்கள். பகலில் வெகு நேரம் கழிந்த பின்பே தன் பணிக்கு வருகிறார் என்று சொன்னார்கள். பெறும் தவறு இது என்று உமர் (ரலி) அவர்கள் கூறி வேறென்ன ? என்று கேட்டார்கள். இரவில் யாருடைய அழைப்பையும் கேட்பதில்லை என்று கூறினார்கள். அதற்கு இது ஒரு பெரிய தவறு என்று சொல்லி, இன்னும் என்ன குற்றச்சாட்டு என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் மாதத்தில் ஒரு நாள் அவர் எங்களிடம் வருவதில்லை என்று கூறினார்கள். இதுவும் பெரிய குற்றம் என்று கூறி, அடுத்து என்ன என்று கேட்டார்கள். அதற்கவர்கள் சில நேரங்களில் மவுத் ஆனது போன்று சுயநினைவற்று இருக்கிறார்கள் என்று கூறினார்கள்.

உடனே உமர் (ரலி) அவர்கள் அந்தக் கவர்னரையும், மக்களையும் ஒன்று கூட்டி, யா அல்லாஹ் ! என்னுடைய கணிப்பை தவறாக்கி விடாதே என்று துஆ செய்து விட்டு இவரைப் பற்றி என்ன முறையிடுகிறீர்கள் என்று கேட்டார்கள்.

அதற்கவர்கள் பகலில் வெகுநேரம் கழிந்த பின்பே எங்களிடம் வருகிறார் என்று கூறினார்கள். அதற்கு ஸயீத் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமாக ! இதற்குறிய காரணத்தைச் சொல்ல நான் விரும்பவில்லை தான். எனினும் நிர்பந்தத்தின் காரணமாக கூறுகிறேன் என்று சொல்லி என் வீட்டினருக்கு வேலைக்காரர் யாருமில்லை எனவே நானே மாவு பிசைந்து பின்பு, ரொட்டி தயார் செய்து சாப்பிட்டு விட்டு, ஒளு செய்தவனாக இவர் களிடம் வருவேன். என்பதைக் கூறினார்கள்.

மேலும் இவரைப் பற்றி என்ன முறையிடுகிறீர்கள் என்று உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள் இரவில் யாருடைய அழைப்பையும் ஏற்பதில்லை என்று கூறினார்கள். இதற்கு என்ன காரணம் என்று கேட்டார்கள். அக்கார ணத்தை கூற நான் வெறுத்தாலும், சொல்கிறேன். நான் பகல் பொழுதை இவர்களுக்காகவும், இரவுப்பகுதியை அல்லாஹ்வுக்காகவும் ஒதுக்கி விட்டேன் என்று கூறினார்கள்.

மேலும் என்ன முறையிடுகிறீர்கள் என்று கேட்டார்கள். அதற்கவர் கள், மாதத்தில் ஒரு நாள் தன் பணிக்கு வரமாட்டார் என்று கூறினார்கள். இதற்கென்ன காரணம் என்று உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். என் ஆடைகளைத் துவைக்க வேலைக்காரர்கள் யாருமில்லை, மேலும், மாற்றிக் கொள்வதற்கு வேறு ஆடை இல்லை. எனவே (அந்நாளில்) நான் துவைக்க உட்காருவேன். பின்பு அது காய்ந்ததும் (அது முரட்டு ஆடை என்பதால்) அதில் ஏற்பட்ட சுருக்கங்களை தேய்த்துத் தேய்த்து சரி செய்வேன். பின்பு மாலையில் தான் அவர்களிடம் வருவேன் என்று கூறினார்கள்.

வேறு என்ன இவரைப் பற்றிக் குறை கூறுகிறீர்கள். என்று உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள் சில நேரங்களில் சுயநினைவற்று பைத்தியம் போன்று இறுக்கிறார் என்று கூறினார்கள். இதற்கு என்ன கூறுகிறீர்கள் என்று உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். உமைர் (ரலி) அவர்கள் நான் ஒரு நாள் குபைப் அன்சாரி (ரலி) என்ற ஸஹாபி மரணமான இடத்தில் மக்காவில் இருந்தேன். குரைஷியர்கள் அந்த சஹாபியின் உடலிலுள்ள சதையை வெட்டி, வெட்டி, எடுத்தார்கள். பின்பு அவர்கள் ஈச்ச மரத்தின் சிலுவையில் அறைந்தார்கள். மேலும் உன்னுடைய இந்த இடத்தில் முஹம்மதை நிருத்தி சிலுவையில் அறைவதை விரும்புகிறீரா என்று கேட்டார்கள்.

அதற்கு அந்த சஹாபி அல்லாஹ்வின் மீது சத்தியமாக ! நான் என் மனைவி மக்களுடன் சந்தோஷமாக இருக்க முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் உடலில் ஒரு முள் தைப்பதைக் கூட பிரியப்பட மாட்டேன் என்று சொல்லிவிட்டு, முஹம்மதே ! என்று சப்தமிட்டு அழைத்தார். அந்த நாளை நான் நினைத்துப் பார்த்து, மேலும் அந்நிலையில் அந்த சஹாபிக்கு நான் உதவி செய்யாமலிருந்ததையும் நினைத்துப் பார்ப்பேன். நிச்சயமாக அத்தவறுக்காக ஒரு போதும் அல்லாஹ் என்னை மன்னிக்க மாட்டானோ என்று நினைப்பேன். உடனே அவ்வாறு சுயநினைவற்ற நிலை எனக்கு ஏற்பட்டு விடும் என்று கூறினார்கள்.

இதைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள் நான் கணித்து முடிவு செய்ததை தவறாக்கி விடாத அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்று சொல்லி 1000 தீனார்களை அவருக்குக் கொடுத்தனுப்பி உங்கள் தேவைகளுக்கு இதன் மூலம் உதவி பெற்றுக் கொள்ளவும் என்று கூறினார்கள்.

உடனே அவர்களின் மனைவி உங்களுக்குப் பணிவிடை செய்யும் வேலையை நம்மை விட்டும் நீக்கினானே அந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்று கூறினார்கள். அப்போது ஸயீத் (ரலி) அவர்கள் தன் மனைவியிடம் உனக்கு இதைவிட சிறந்த வழி முறையை சொல்லட்டுமா ? என்று கூறி, நமக்கு அதிகமான தேவை வரும் சமயத்தில் அந்த தீனார்களை நம்மிடம் தந்து விடுவாரே அந்த மனிதரிடம் கொடுத்து வைப்போமா ? என்று கேட்டார்கள். அவர்கள் சரி என்று கூறினார்கள்.

உடனே தன் குடும்பத்தினரில் நம்பிக்கையான ஒரு மனிதரை அழைத்து அந்த தீனார்களை சிறிய சிறிய பைகளில் போட்டு இதைக் கொண்டு சென்று இன்னாரின் குடும்பத்தாரில் உள்ள விதவைப் பெண்களுக்கும், இன்ன குடும்பத்திலுள்ள ஏழைகளுக்கும், இன்ன குடும்பத்தில் சோதனைகளில் சிக்கிய வர்களுக்கும் கொடுத்து வருவாயாக. அதில் சில தங்கக்காசுகள் மீதமானது அவைகளை உன் தேவைக்கு வைத்துக்கொள். என்று தன் மனைவியிடம் கூறிவிட்டு தன் பணிக்குத் திரும்பி விட்டார்கள். அவர்களின் மனைவி அந்தப் பணம் என்ன ஆனது ? நமக்கு வேலைக்காரர்களை வாங்கவில்லையா என்று கேட்டார்கள். அதற்கு, நீ அதிகத் தேவையுள்ளவளாக இருக்கும் போது உன்னிடம் வருவாள் என்பதாக கூறினார்கள்.

நூல்:அல்ஹில்யா, ஹ.ச-185,186-2


இதுவே நமது முன்னோர்களாகிய ஒவ்வொரு உத்தம சத்திய சஹாபாக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் சம்பவமாகும். ஒவ்வொரு சஹாபாக்களின் வாழ்க்கை முறையும் அல்லாஹ்வின் பொருத்தத்திற்குரியதாகவும் மறுமையை நோக்கமாகவும் கொண்டதாகவே அமைந்திருந்தது. அவ்வுத்தமர்களின் வாழ்க்கை முறையையும் நமது வாழ்க்கை முறையையும் ஒப்பிட்டு நாம் நல்லுணர்வு பெறவேண்டும். அவ்வுத்தமர்கள் பெற்ற நேர்வழியை நாமும் அடைய எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்வோமாக !

இவன்.
முஹம்மது பதுருதீன்.

Monday 21 April 2008

بِسۡمِ ٱللهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ١

குவைத்திலிருந்து ஒரு நோட்டீஸ்!


கீழ்கண்ட தகவல் எமது ஈ மெயிலுக்கு அனுப்பப்பட்டது. இதன் மூலம் குழப்பவாதிகளை இனம் கண்டு அவர்களிடம் எச்சரிக்கையாய் இருந்து கொள்ள உதவிடும் சிறு முயற்சி. நேர் வழியை அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்தருள்வானாக .ஆமீன்.





இவன்
முஹம்மது பதுருதீன்.

Tuesday 8 April 2008

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

தொழுகையின் சிறப்புகள்!

தொழுகையின் அவசியத்தைப் பற்றியும் அதன் சிறப்புகளைப் பற்றியும் ஹதீஸ் புத்தகங்களில் ஏராளமாகக் கூறப்பட்டுள்ளன. அவை அனைத்தையும் திரட்டிவிடுவது இயலாத காரியம். எனவே, பரக்கத்திற்காக (நாற்பது) ஹதீஸ்களுடைய மொழி பெயர்ப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நாற்பது ஹதீஸ்கள் :


  1. திரு நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அருளினார்கள் : " உம்மத்தினர் மீது முதன் முதலாகத் தொழுகையைத்தான் அல்லாஹ் கடமையாக்கினான். கியாமத் நாளில் முதன்முதலாகத் தொழுகையைப் பற்றித்தான் விசாரிக்கப்படும்."


  2. தொழுகையின் விஷயத்தில் அல்லாஹ்வைப் பயப்படுங்கள். தொழுகையின் விஷயத்தில் அல்லாஹ்வைப் பயப்படுங்கள். தொழுகையின் விஷயத்தில் அல்லாஹ்வைப் பயப்படுங்கள்.


  3. மனிதனுக்கும், ஷிர்க்கிற்கும் (இணை வைத்தலுக்கும்) இடையில் தொழுகைதான் தடுப்பாக உள்ளது.


  4. இஸ்லாத்தின் அடையாளம் தொழுகையாகும். தூய்மையான மனதுடன் முஸ்தஹப்புகளைப் பேணி அந்தந்த நேரங்களில் தொழுது வருபவர் முஃமினாவார்.

  5. ஈமானையும் தொழுகையையும்விடச் சிறந்த ஒன்றை அல்லாஹ் கடமையாக்கவில்லை. அல்லாஹ் தொழுகையைவிடச் சிறந்த ஒன்றைக் கடமையாக்கியிருந்தால், அதைச் செய்யும்படி மலக்குகளுக்குக் கட்டலையிட்டிருப்பான். மலக்குகளோ இரவு பகலாகச் சிலர் ருகூவிலும், சிலர் ஸஜ்தாவிலும் இருக்கிறார்கள்.


  6. தொழுகை இஸ்லாத்தின் தூண்.


  7. தொழுகையினால் ஷைத்தானின் முகம் கறுத்து விடுகிறது.


  8. தொழுகை முஃமினுக்கு ஒளியாகும்.


  9. தொழுகை சிறந்த மார்க்கப் போராகும்.


  10. ஒருவர் தொழ ஆரம்பித்தவுடன் அல்லாஹ் அவரிடம் கவனத்தைச் செலுத்துகிறான். அவர் தொழுது முடித்தவுடன் அல்லாஹ் தனது கவனத்தைத் திருப்பிக் கொள்கிறான்.


  11. வானத்திலிருந்து ஒரு துன்பம் இறங்கினால் பள்ளி வாசலைச் செழிப்பாக்கி வைப்பவர்களை அது பாதிப்பதில்லை.


  12. ஏதேனும் ஒரு (பாவத்தின்) காரணத்தால் ஒருவர் நரகத்திற்குச் சென்றால், ஸஜ்தாவின் போது பூமியில் பட்ட உறுப்புகளை நரக நெருப்புத் தீண்டுவதில்லை.


  13. ஸஜ்தாவின் போது பூமியில் பட்ட உறுப்புகளை தீண்டக் கூடாதென்று நரக நெருப்புக்கு அல்லாஹ் தடை விதித்திருக்கிறான்.


  14. அந்தந்த நேரத்தில் நிறைவேற்றப்படும் தொழுகையே எல்லாவற்றையும் விட அல்லாஹ்வுக்கு மிகப் பிரியமான அமலாகும்.


  15. மனிதன் தன்னுடைய நெற்றியைப் பூமியில் வைத்து ஸஜ்தா செய்யும் நிலையே எல்லா நிலைகளையும் விட அல்லாஹ்வுக்கு மிகப் பிரியமானதாகும்.


  16. ஸஜ்தாவிலிருக்கும் போது மனிதன் அல்லாஹ்வுக்கு மிக நெருக்கமாகி விடுகிறான்.


  17. தொழுகை சொர்க்கத்தின் சாவி ஆகும்..


  18. மனிதன் தொழுகைக்காக நின்று விட்டால் சொர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன. அல்லாஹ்வுக்கும் அவனுக்கும் இடையில் திரைகள் விலகுகின்றன ; அவன் இருமல் போன்றவற்றில் ஈடுபடாத வரை.


  19. தொழுகையாளி அரசனான அல்லாஹ்வின் கதவைத் தட்டுகிறார். தட்டுபவர்களுக்குக் கதவு திறக்கப்படுவது இயல்பே.


  20. உடலுக்குத் தலை எவ்வளவு முக்கியமோ அந்த அளவு தீனில் தொழுகை முக்கியமானதாகும்.


  21. தொழுகை உள்ளத்தின் ஒளியாகும். தன் உள்ளத்திற்கு ஒளியூட்ட விரும்புபவர் (தொழுகையின் மூலம்) அதைச் செய்து கொள்ளட்டும்.


  22. ஒருவர் நல்ல முறையில் உளூச் செய்து, உள்ளச்சத்துடன் பர்லான அல்லது நபிலான தொழுகை இரண்டு அல்லது நான்கு ரக்அத்துகள் தொழுதுவிட்டுத் தன்னுடைய பாவங்களை மன்னிக்கும்படிக் கேட்டால், அல்லாஹ் மன்னித்து விடுகிறான்.


  23. பூமியின் எந்தப் பகுதியின் மீது தொழுகையின் மூலம், அல்லாஹ்வை நினைவுகூரப்படுகிறதோ, அது பூமியின் மற்ற பகுதிகளிடம் பெருமை பேசுகிறது.


  24. ஒருவர் இரண்டு ரக்ஆத் தொழுதுவிட்டு அல்லாஹ்விடம் தமது தேவையைக் கேட்டால் அல்லாஹ் அதை ஒப்புக்கொண்டு உடனே கொடுக்கிறான். அல்லது ஏதாவது நன்மையைக் கருதிச் சிறிது பிற்படுத்தித் தருகிறான். ஆயினும், உறுதியாக துஆ ஏற்றுக்கொள்ளப்படும்.


  25. அல்லாஹ்வையும் அவனது மலக்குகளையும் தவிர வேறு வேறு யாருக்கும் தெரியாமல் ஒருவர் இரண்டு ரக்அத் தொழுதால், அவருக்கு நரகத்திலிருந்து விடுதலை அளிக்கும் சீட்டுக் கிடைத்து விடுகிறது.


  26. பர்ளான ஒரு தொழுகைக்குப் பிறகு ஒரு துஆ ஒப்புக் கொள்ளப்படுகிறது.


  27. நல்ல முறையில் உளூச் செய்து, ருகூவையும் சுஜூதையும் பேணுதலாகச் செய்தவாறு ஐந்து நேரத் தொழுகைகளை நிறைவேற்றி வருபவருக்குச் சொர்க்கம் கிடைப்பது உறுதியாகும், அவருக்கு நரகம் ஹராமாகிவிடும்.


  28. ஒரு முஸ்லிம் ஐந்து நேரங்களும் பேணுதலாகத் தொழுது கொண்டிருக்கும் வரையில் ஷைத்தான் அவருக்குப் பயப்படுகிறான். அவர் தொழுகையில் அசட்டை செய்ய ஆரம்பித்தால் ஷைத்தானுக்குத் துணிச்சல் உண்டாகி, அவரைக் கெடுக்க நினைக்கிறான்.


  29. நேரம் வந்த உடனேயே தொழுது கொள்வது எல்லாவற்றினும் மிகச் சிறந்த அமலாகும்.

  30. தொழுகை பயபக்தியாளர்களின் தியாகமாகும்.


  31. ஆரம்ப நேரத்தில் தொழுது கொள்வது அல்லாஹ்வுக்கு மிகப் பிரியமான அமலாகும்.


  32. காலையில் எழுந்ததும் தொழுகைக்காகச் செல்பவர், ஈமானின் கொடியைப் பிடித்துக் கொண்டு செல்கிறார். கடைவீதிக்குச் செல்பவர் ஷைத்தானின் கொடியைப் பிடித்துக் கொண்டு செல்கிறார்.


  33. லுஹருடைய பர்ளுக்கு முன்பு, நான்கு ரக்அத்துகள் (சுன்னத்) தொழுதால் நான்கு ரக்அத்துகள் தஹஜ்ஜூத் தொழுத நன்மை கிடைக்கிறது.


  34. லுஹருக்கு முன்புள்ள (சுன்னத்) நான்கு ரக்அத்துகளும் தஹஜ்ஜூத்துடைய நான்கு ரக்அத்துகளுக்குச் சமமாகும்.


  35. மனிதன் தொழ நின்றுவிட்டால் அல்லாஹ்வின் அருள்மாரி (ரஹ்மத்) அவன் மீது பொழிகிறது.


  36. நடு இரவுத் (தஹஜ்ஜூத்) தொழுகையே மிகச் சிறந்த தொழுகையாகும். ஆனால், மிகக் குறைவானவர்களே அதைத் தொழுகிறார்கள்.


  37. ஹஜ்ரத் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் என்னிடம் வந்து " முஹம்மத் ! (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) நீங்கள் எவ்வளவு காலம் வாழ்ந்தாலும் ஒருநாள் மரணமடைய வேண்டும். நீங்கள் யாரைப் பிரியப்பட்டாலும், ஒரு நாள் அவர்களை விட்டுப் பிரிய வேண்டும். நிச்சயமாக உங்கள் செயல்களுக்குரிய பிரதிபலனை நீங்கள் பெறுவீர்கள். ஒரு முஃமினின் சிறப்பு தஹஜ்ஜூத் தொழுவதில்தான் இருக்கிறது. முஃமினின் கண்ணியம் பிறரிடம் தேவைப்படாமல் வாழ்வதில் இருக்கிறது. இதில் எந்தச் சந்தேகமும் இல்லை" என்று கூறிச் சென்றார்கள்.


  38. " கடைசி இரவில் இரண்டு ரக்அத் (தஹஜ்ஜூத்) தொழுவது முழு உலகத்திலிருக்கும் செல்வத்தைவிடச் சிறந்ததாகும். எனது உம்மத்தினருக்குச் சிரமம் ஏற்படும் என்றில்லாவிட்டால், தஹஜ்ஜூத் தொழுகையை நான் கடமையாக்கி இருப்பேன் ".


  39. தஹஜ்ஜூத் தொழுகையைக் கடைப்பிடுத்து வாருங்கள். அது ஸாலிஹீன்களின் (நல்லவர்களின்) வழியாகும். அல்லாஹ்வை நெருங்கச் செய்யும் சாதனமாகும். தஹஜ்ஜூத் தொழுகை பாவங்களைத் தடுக்கிறது ; பாவங்கள் மன்னிக்கப்படக் காரணமாக ஆகிறது. அத்துடன் உடலுக்கு ஆரோக்கியத்தையும் கொடுக்கிறது.


  40. அல்லாஹ் கூறுகிறான் ; " ஆதமுடைய மகனே ! பகலின் ஆரம்பத்தில் நான்கு ரக்அத் தொழுவதில் அசட்டையாக இருக்காதே. ஏனென்றால் (அதன் காரணமாக) அன்றைய நாள் முழுவதும் உன்னுடைய வேலைகளை நான் கவனித்துக் கொள்கிறேன் ".


ஹதீஸ் நூல்களில் தொழுகையின் சிறப்புகளைப் பற்றி ஏராளமாகக் கூறப்பட்டுள்ளன, நாற்பது என்ற எண்ணிக்கைக்காக இவை எழுதப்பட்டன. ஏனெனில், ஒருவர் இவற்றை மனப்பாடம் செய்தால் நாற்பது ஹதீஸ்களை மனனம் செய்த சிறப்பைப் பெற்றுக்கொள்வார்.

தொழுகை உண்மையிலேயே மிகப் பெரும் செல்வமாகும். அல்லாஹ் யாருக்கு அதன் இன்பத்தை அனுபவிக்கச் செய்தானோ, அவர்தாம் அதன் மதிப்பைப் புரிந்து கொள்ள முடியும். இத்தகைய செல்வத்தின் மதிப்பை விளங்கியே வள்ளல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் " தொழுகை என் கண்களுக்குக் குளிர்ச்சி அளிக்கிறது ", என்று கூறினார்கள். மேலும் இந்த இன்பத்தில் மூழ்கியே இரவின் பெரும் பகுதியைத் தொழுகையில் கழித்தார்கள். தங்களின் உயிர் பிரியும் நேரத்திலும்கூடத் தொழுகையைப் பற்றியே வலியுறுத்திக் கூறினார்கள்.

(தொகுப்பு நூல் :" அமல்களின் சிறப்புகள்" தலைப்பு : "தொழுகையின் சிறப்புகள்")

இவ்வளவு சிறப்பும் பரக்கத்தும் நிறைந்த தொழுகை இக்காலத்தில் அலட்சியத்தினாலும் உலக காரியங்களில் மூழ்கிவிடுவதாலும் பாழாக்கப்படுகிறது. இது குறித்து யாரையும் ஏசவோ அல்லது குறைகூறவோ உள்ள விஷயமல்ல. மாறாக இத்தொழுகையின் பக்கம் மக்களை அழைப்பது ஒவ்வொரு தொழுகையாளியின் மீதும் கடமையாகும். நபி (ஸல்) அவர்களின் உம்மத்தினர்களுக்கும் மற்ற நபிமார்களின் (அலை) உம்மத்தினர்களுக்கும் உள்ள வேறுபாடு, தானும் நல்லமல்கள் புரிந்து மற்ற மக்களையும் நன்மையின் பக்கம் அழைப்பதுதான். அல்லாஹ்வும் நபி (ஸல்) அவர்களின் உம்மத்தினரின் சிறப்பைக் குறிப்பிடும்பொழுது :

(விசுவாசிகளே !) நன்மையான காரியங்களை(ச் செய்யும்படி) ஏவி, பாவமான காரியங்களிலிருந்து (அவர்களை) விலக்கி, மெய்யாகவே அல்லாஹ்வை விசுவாசிக்கின்ற நீங்கள்தாம் மனிதர்களில் தோன்றிய சமுதாயத்தார்களிலெல்லாம் மிக்க மேன்மையானவர்கள்.

(அல்குர்ஆன்: 4 : 3 : 110)


ஒருவர் தொழாமல் இருப்பதே பெரும்பாவமாகும். மேலும் இத்தொழுகையின் பக்கம் மக்களை அழைப்பதும் மிகப் பெரிய நன்மையுமாகும்.
உலக முஸ்லிம்களின் மக்கள் தொகையில் தொழுகையாளிகளின் எண்ணிக்கையை கணக்கிட்டால் மிகவும் சொற்ப சதவிகிதமே, இதில் இக்லாஸோடும் உள்ளச்சத்தோடும் தொழும் தொழுகையாளிகளை கணக்கிட்டால் நிலைமை இன்னும் மோசம். இது மிகவும் கவலைக்குறிய விஷயமாகும். இன்று முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் ஆபத்து என்றும் முஸ்லிம்கள் தாக்கப்படுகிறார்கள் என்றும் கோஷங்கள் எழுப்பப்படுகின்றது. அதற்காக ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடத்தப்படுகின்றது. ஆனால் உண்மை நிலையோ இத்தகைய நிலைமைக்கு இறைவணக்க வழிபாடுகளில் குறையுடைய முஸ்லிம்களாகிய நாமே காரணமாக இருக்கிறோம் என்பதை அறியாமல் இருப்பதுதான்.

இந்நிலைக்கு என்ன காரணம் என்பதை அல்லாஹ் சுபுஹானஹூத்தஆலா அருள்மறையில் குறிப்பிடும்பொழுது :

"உனக்கு யாதொரு நன்மை ஏற்பட்டால் அது அல்லாஹ்வினால் ஏற்பட்டது" என்றும், " உனக்கு யாதொரு தீங்கேற்பட்டால், அது (நீ இழைத்த குற்றத்தின் காரணமாக,) உன்னால்தான் வந்தது" என்றும், (கூறுவீராக ! நபியே !)

(அல்குர்ஆன் : 5 : 4 : 79)


மனிதர்களின் கைகள் தேடிக்கொண்டதன் காரணமாகக் கடலிலும், தரையிலும் அழிவு வேலைகள் (அதிகமாகப்) பரவிவிட்டன. அதிலிருந்து அவர்கள் விலகிக்கொள்ளும்பொருட்டு, அவர்களின் தீவினைகளில் சிலவற்றின் தண்டனையை அவர்கள் (இம்மையிலும்) சுகிக்கும்படி அவன் செய்ய வேன்டியதாகிறது.

(அல்குர்ஆன் : 21 : 30 : 41)


ஒருவர் தொழாமல் இருப்பதே மிகப்பெரிய கேடுதான். அல்லாஹ்வின் கட்டளைகளை புறக்கனித்துவிட்டு அல்லாஹ்வின் உதவியை எதிர்பார்க்கும் போக்கு இக்காலகட்டத்தில் சர்வ சாதாரணமாகிவிட்டது. நோய்க்கு மருந்து கொடுக்கும் முன் நோயின் மூல காரணத்தை கண்டரிவதுதான் ஒரு நல்ல மருத்துவரின் அடையாளமாகும். அதுபோல் ஒரு நல்ல முஸ்லிமிற்கு அடையாளம் தனது கஷ்டத்திற்கு எந்த அல்லாஹ்வின் கட்டளையும் நபியின் சுன்னத்தும் விடுபட்டுள்ளது என்பதை கண்டறிந்து அதனை தனது வாழ்வில் அமலில் கொண்டுவருவதுதான்.

நமக்கு ஏற்படும் கஷடங்களுக்கு, நாம் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும், எவ்வாறு அல்லாஹ்விடம் உதவி தேடவேண்டும் என்பதை அல்லாஹ்வும் அவனுடைய ரசூலும் காட்டி தந்த வழிமுறையை பார்ப்போம்.

(எத்தகைய கஷ்டத்திலும்) நீங்கள் பொறுமையைக் கைக்கொண்டு, தொழுது (இறைவனிடத்தில்) உதவிதேடுங்கள். ஆனால் நிச்சயமாக இது, உள்ளச்சமுடையோர்களுக்கே அன்றி, (மற்றோருக்கு) மிகப் பளுவாகவே இருக்கும்.

(அல்குர்ஆன் 1 : 2 : 45)


ஹஜ்ரத் ஹூதைஃபா ரலியல்லாஹூ அன்ஹூ அறிவிக்கின்றார்கள் : " நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஏதாவது சிரமம் ஏற்பட்டால், உடனே தொழுகையின் பக்கம் விரைவார்கள்."

(நூல் : துர்ருல் மன்ஃதூர்)


இதற்கு மாற்றமாக மார்க்க அறிஞர்கள் என்ற பெயரில் நடமாடும் போலிகள் தாங்கள்தான் அல்லாஹ்வையும் ரசூலையும் பின்பற்றுபவர்கள் எனக் கூறிக்கொண்டு, அல்லாஹ்வை மறந்து ஆர்ப்பாட்டம் போராட்டம் என்ற பெயரில் அரசாங்கங்களிடம் உதவி தேடுகிறார்கள். தாங்கள் மட்டுமின்றி மற்றவர்களையும் தங்களுக்கு கூட்டம் சேர வேண்டும் என்பதற்காக அழைக்கின்றனர். இதனை அறியாத சிலரும் ஆன் பெண் வித்தியாசமின்றி கலந்து கொள்கின்றனர். இதில் தாங்கள்தான் ஏகத்துவவாதிகள் என்று அடிக்கடி வாந்தி வேறு.

அல்லாஹ் எந்த தொழுகையை அனைத்து பிரச்சினைக்கும் தீர்வு காணும் சாதனமாக ஆக்கித் தந்தானோ, எந்தத் தொழுகை நபியின் கண்களுக்கு குளிர்ச்சி தந்ததோ, மறுமையில் எந்த விஷயத்தைப்பற்றி முதலாவதாக கேள்வி கேட்கப்படுமோ அந்த தொழுகை நம்முடைய வாழ்க்கையில் எந்த நிலைமையில் உள்ளது என்பதை சற்றே சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். நம்முடைய இம்மை மறுமையின் வெற்றி அல்லாஹ்வின் கட்டளைகளையும் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறையையும் பின்பற்றுவதில்தான் இருக்கிறது என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் உறுதியாக ஈமான் கொள்ளவேண்டும். ஈமான் கொள்வது என்பது நமது வாழ்க்கையில் அமலில் கொண்டுவருவதில்தான் உள்ளது.

இப்படிப்பட்ட பாக்கியம் நிறைந்த மேலான தொழுகையை பேணி பாதுகாத்து நாமும் நமது சந்ததிகளும் தொழ அல்லாஹ்விடமே உதவி தேடுவோம்.

" என் இறைவனே ! என்னையும், என் சந்ததிகளையும் (உன்னைத்) தொழுது வருபவர்களாக ஆக்கிவை. எங்கள் இறைவனே ! என்னுடைய பிரார்த்தனையை அங்கீகரித்துக் கொள்வாயாக !"

(அல்குர்ஆன் 13 : 14 : 40)


இவன்.
முஹம்மது பதுருதீன்.



Tuesday 19 February 2008

வெளிச்சத்திற்கு வந்த உண்மை

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

வெளிச்சத்திற்கு வந்த உண்மை !

வியாழன், அக்டோபர் 25, 2007 அன்று விடாது கருப்பு இணையத்தில் சுபுஹான மெளலிதில் தவறில்லை ! பி.ஜைனுலாபிதீன் தலைமையிலான (ததஜ) அணி பகிரங்கமாக ஏற்றுக்கொண்டது ! களியக்காவிளை விவாதத்தின்போது ! என்ற ஒரு கட்டுரையை பதிப்பித்தேன் (பார்க்க இங்கு கிளிக் செய்யவும்) அதற்கு பல சகோதரர்கள் கருத்தும் பதிவு செய்திருக்கிறார்கள். சகோதரர் கா.அ.முஹம்மது பஸ்லுல் இலாஹி என்பவருக்கும் மெயில் அனுப்பியிருந்தேன். அதற்கு கா.அ. பஸ்லுல் இலாஹி எனக்கு பல ஸலாம்கள் சொல்லி பதில் மெயில் அனுப்பி, அதை அவருடைய பிளாக்கிலும் பதிவு செய்திருக்கிறார். என்னுடைய கட்டுரையை பதிவு செய்தால் உண்மை விளங்கிவிடும் என்று அஞ்சி அவருடைய பதிலை மட்டும் பதிவு செய்திருக்கிறார் (பார்க்க இங்கு கிளிக் செய்யவும்). ஆனால் நான் திரும்ப மெயில் அனுப்பவில்லை.

பஸ்லுல் இலாஹி எனக்கு அனுப்பிய மெயிலிலிருந்து சில வரிகள் :−

(ரகசிய கூலி பதில் சொல்லவில்லை என்பதனால் மவ்லிது ஓதுவது மார்க்கமாக ஆகி விடாது. இது மாதிரிதான் சேக் அப்துல்லா ஜமாலியிடம் பி.ஜெ. ரகசிய கூலி வாங்கி இருப்பார். அதனால்தான் வாங்கிய ரகசிய காசுக்காக வாய் மூடி இருந்திருப்பார். எங்களிடம் ரகசியமாக சம்பளம் பேசி தவ்ஹீது பிரச்சார வேலைக்கு வந்த வேலைக்காரர்தான் பி.ஜெ. (கா.அ.பஸ்லுல் இலாஹியின் முழு வாக்குமூலம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்) எனவே ரகசிய கூலி பி.ஜெ. பதில் சொல்லவில்லை என்பதைப் பற்றி ஆச்சரியப்படவில்லை. ரகசிய கூலி பதில் சொல்லவில்லை என்பதனால் மவ்லிது ஓதுவது மார்ர்கமாக ஆகி விடாது.) இதுபோல அனுப்பியிருந்தார்.

அவர்கள் எனக்கு சொன்ன அனைத்து ஸலாம்களுக்கும் பதில் சொல்லிக்கொண்டேன்.

33 தடவை திரும்பத் திரும்ப ஸலாம் சொல்லப்படுகிறது. எனவே இது முதல் தவறு என்று பஸ்லுல் இலாஹி சொல்ல வருகிறார். புரிந்துதான் சொன்னாரா என்பது எனக்கு தெரியவில்லை.ஆனால், யார் ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து சொல்வார்களோ அவர்கள் மீது 10 முறை அல்லாஹ் ஸலவாத்து சொல்வதாக வருகிறது.

அப்படியானால், அஸ்தஃபிருல்லாஹ், அல்லாஹ் பைத்தியக்காரனா ? இந்த ஸலாம் பைத்தில் இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு 33 தடவை திரும்பத் திரும்ப ஸலாம் சொல்லப்படுகிறது. எனவே இது முதல் தவறு என்று பஸ்லுல் இலாஹி சொல்ல வருகிறாரே.

அப்படியானால், அல்ஹம்துலில்லாஹ் என்று 33 தடவை சொல்கிறோம் எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே என்று 1 தடவை சொன்னால் போதாது ! அதில் என்ன சந்தேகம் நமக்கு வந்தது ! திரும்ப திரும்ப ஏன் சொல்ல வேண்டும். அது போல அல்லாஹூ அக்பர், சுபுஹானல்லாஹ் இன்னும் இது போல உள்ள வாசகங்களை திரும்ப திரும்ப ஏன் சொல்ல வேண்டும் ? இதையெல்லாம் பைத்தியக்காரத்தனம் என்றா சொல்ல முடியும் ? லாயிலாஹா இல்லல்லாஹூ என்று சொன்னால் மட்டும் போதாது, (இதை சொல்லித்தந்தவரையும் ஏற்கிறேன் என்று) முஹம்மதுர்ரஸூலுல்லாஹ் என்பதையும் சேர்த்து சொல்வதுதான் கலிமத்து தவ்ஹீதாகும். எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எத்தனை தடவை ஸலாம் சொல்கிறோமோ அவைகளெல்லாம் நமக்கு 10 மடங்காக அல்லாஹ்வால் சொல்லப்படுகிறது என்பதை அறிய வேண்டும். இப்போது நம்முடைய செய்தி இதுவல்ல.

இந்த மெயிலில் வெளிச்சத்திற்கு வந்த உண்மைதான் இப்போது ஆராயவேண்டியவை.


எங்களிடம் ரகசியமாக சம்பளம் பேசி தவ்ஹீது பிரச்சார வேலைக்கு வந்த வேலைக்காரர்தான் பி.ஜெ. (முழு வாக்குமூலம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்) எனவே ரகசிய கூலி பி.ஜெ. பதில் சொல்லவில்லை என்பதைப் பற்றி ஆச்சரியப்படவில்லை என்று பஸ்லுல் இலாஹி சொல்கிறார்.

ஜாக் ஜமாஅத்தும் தவ்ஹீது ஜமாஅத்தும் பித்தலாட்டம், நயவஞ்சகம், போக்கிரித்தனம் மற்றும் பொருக்கித்தனம் மிகுந்த ஜமாஅத் என்பதை அவருடைய மெயிலைப்பார்த்த பின்புதான் தெரிந்துகொண்டேன். ஜாக் ஜமாஅத்தில் பி.ஜெ. இருக்கும்போதுதான் சுன்னத் ஜமாஅத் அறிஞர்கள் சம்பளம் பேசுகிறார்கள், இஸ்லாமியப்பணி செய்வதற்கு காசு வாங்குகிறார்கள் என்று கூட்டாக பிரச்சாரம் செய்த இந்த கூட்டம், அதைக்கொண்டு யோக்கியவான்கள் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட இந்த கூட்டத்தின் மோசடித்தனம் என்ன தெரியுமா ? சுன்னத் ஜமாஅத் அறிஞர்கள் சம்பளம் பேசுகிறார்கள் என்று வீர வசனம் பேசிய இந்த கபோதிகளின் அயோக்கியத்தனம் என்ன தெரியுமா ? இஸ்லாமியப்பணி செய்வதற்கு காசு வாங்குகிறார்கள் என்று கூட்டாக பிரச்சாரம் செய்த இந்த கூட்டத்தின் பின்பக்க செயல், பொம்பலைத்தனம் என்னவென்று தெரியுமா ?

ததஜ மற்றும் ஜாக் ஜமாஅத்தும் சம்பளம் பேசி இஸ்லாமியப்பணி செய்வதுதான். பைசா இல்லையென்றால் இஸ்லாமியப்பணி கிடையாது. எதையும் நேரடியாக பெறமாட்டார்கள். பின்பக்கமாகத்தான். மார்க்கப்பணி செய்வதற்கு காசு வாங்கலாமா ? கூலி பேசலாமா ? என்று ததஜ மற்றும் ஜாக் ஜமாஅத்தினர் மேடைகளிலே வீரத்தோடு பயான் செய்வார்கள், மற்றவர்கள் மீது குறைகளை அள்ளிவீசுவார்கள் ததஜ மற்றும் ஜாக் ஜமாஅத்தைச்சேர்ந்த தறுதலைவாதிகள் அனைவரும் அடிமைப்போல வாய் பிளந்து கேட்பார்கள். இதையெல்லாம் பேச இவர்களுக்கு ஏது பணம், இவர்களின் குடும்பம் எப்படி நடக்கிறது சிந்திக்க மாட்டார்கள். பகுத்தறிவோடு சிந்திக்க வேண்டும் இல்லையென்றால் மிருகத்திற்கும் மனிதனுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.

சரி விஷயத்திற்கு வருவோம்.


ஜாக் ஜமாஅத்தில் அந்நஜாத் பத்திரிக்கையில் பணி புரிய பி.ஜைனுலாபிதீன் சம்பளம் பேசி பணிபுரிந்தார் என்று ஜாக் ஜமாஅத்தைச்சேர்ந்த பஸ்லுல் இலாஹி சொல்கிறார். என்னங்கடா இது… ? ததஜ மற்றும் ஜாக் ஜமாஅத்தும் கூலி பெற்று இஸ்லாமியப்பணி செய்வது மார்க்கமா ? மற்றவர்கள் செய்வதுதான் தவறா ? திருடாதே என்று சொல்லும் தகுதி திருடனுக்கு கிடையாது. இது தவறு என்று ஜாக்கில் பி.ஜைனுலாபிதீன் இருக்கும்போது பஸ்லுல் இலாஹிக்கு தெரியவில்லையா ? இல்லை இஸ்லாமியப்பணி செய்வதற்கு கூலி கொடுக்கும் உயர்ந்த நிலையில் இருப்பதாக நினைத்துக்கொண்டாரா ?

சுன்னத் ஜமாஅத் அறிஞர்கள் பற்றி பேச, கூலி பெற்று இஸ்லாமியப்பணி செய்த ததஜவைச்சார்ந்த பி.ஜைனுலாபிதீனுக்கும், கூலி கொடுத்த ஜாக் ஜமாஅத்திற்கும் என்ன தகுதி இருக்கிறது ? மற்றவர்களை இப்படி பேசி பிழைப்பு நடத்துவதைவிட ததஜ அறிஞர்களும் ஜாக் ஜமாஅத் அறிஞர்களும் திருவோட்டை கையில் எடுத்து பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தியிருந்தால் அது எவ்வளவோ மேலானதாக இருந்திருக்கும். இஸ்லாமியப்பணிக்கு கூலி கொடுத்தது தவறா ? இல்லை கூலியைப்பெற்றது தவறா ? ததஜ மற்றும் ஜாக் ஜமாஅத்தைச்சேர்ந்த தறுதலைவாதிகள் இதற்கு பதில் சொல்லட்டும். இல்லையென்றால் அறியாமையில் மூழ்கியிருந்த முட்டாள்களின் வாரிசு என்று சொல்லிக்கொள்ளட்டும். இனிமேலாவது சுன்னத் ஜமாஅத் அறிஞர்கள் பற்றி பேசும் முன்பு ததஜ அறிஞர்கள் பற்றியும் ஜாக் ஜமாஅத் அறிஞர்கள் பற்றியும் அவர்களின் யோக்கியத்தைப்பற்றியும் தறுதலைவாதிகள் அறிய முற்படவேண்டும். சுன்னத் ஜமாஅத் அறிஞர்களிடம் ததஜ அறிஞர்களும் ஜாக் ஜமாஅத் அறிஞர்களும் உண்மை முஸ்லிமாக இருப்பார்களானால் மன்னிப்பு கேட்பார்கள்.

வஸ்ஸலாம்.

சகதுல்லாஹ்
துபை.

Monday 18 February 2008

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

சுபுஹான மெளலிதில் தவறில்லை !பி.ஜைனுலாபிதீன் தலைமையிலான (TNTJ) அணி பகிரங்கமாக ஏற்றுக்கொண்டது !களியக்காவிளை விவாதத்தின்போது !


அன்பிற்குரிய இஸ்லாமியர்களே !
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தைச்சார்ந்த அதன் தலைவர் பி.ஜைனுலாபிதீன் தலைமையில் ஒரு அணியும் சுன்னத் ஜமாஅத்தைச் சேர்ந்த மெளலவி எம்.ஷைக் அப்துல்லாஹ் ஜமாலி அவர்களின் தலைமையில் ஒரு அணியும் கடந்த ஆண்டு களியக்காவிளையில் மக்கள் மத்தியில் நான்கு தலைப்புகளில் விவாதம் செய்ததை அனைவரும் அறிவர்.

அதில் பி.ஜைனுலாபிதீன் தலைமையிலான (TNTJ) அணி எந்த அளவுக்கு அநாகரிகமாக நடந்து கொள்ள முடியுமோ அந்த அளவுக்கு ஆரம்ப முதலே நடந்து கொண்டனர் என்பதையும் அனைவரும் அறிவர். அதை அறியாதவர்கள் இரு தரப்பினரிடமும் உள்ள அந்த CDயை பெற்று பார்த்துக்கொள்ளலாம்.

முதலில் மெளலிது பற்றிய விவாதம் நடைபெற்றது. சுன்னத் ஜமாஅத்தைச் சேர்ந்த மெளலவி எம்.ஷைக் அப்துல்லாஹ் ஜமாலி அவர்களின் தலைமையிலான அணி விவாதத்தை தொடங்கியது.

பி.ஜைனுலாபிதீன் அவர்களால் எழுதப்பட்ட சுபுஹான மெளலிது ஒரு ஆய்வு மற்றும் இஸ்லாம் அடிப்படைக்கல்வி என்ற நூற்களை அடிப்படையாக வைத்து, அந்த புத்தகங்களிலிருந்து சில கருத்துக்களை சொல்லி, சுபுஹான மெளலிது ஒரு ஆய்வு என்ற புத்தகத்தை கையில்வைத்துக்கொண்டு இப்போது உள்ள மெளலிதில் என்ன தவறு இருக்கிறது ? என்று ஒரு கேள்வியை முதலில் வைத்தது. ஒப்பந்தப்படி இதற்கு பதில் சொல்லும் விதமாக இன்னென்ன தவறு சுபுஹான மெளலிதில் இருக்கிறது என்று பி.ஜைனுலாபிதீன் தலைமையிலான (TNTJ) அணி சொல்லி, பிறகு சாகுல் ஹமிது மெளலிதில் உள்ள பெரிய பொண்ணு சிறிய பொண்ணு சம்பந்தமான கேள்வியை கேட்டிருக்க வேண்டும். ஏன் என்றால் சுன்னத் ஜமாஅத் அறிஞர் மெளலிதில் என்ன தவறு இருக்கிறது ? என்று கேள்வி கேட்கும்போது கையில் எடுத்து காட்டிய புத்தகம் "சுபுஹான மெளலிது ஒரு ஆய்வு" எனவே அதிலிருந்து கருத்துக்களை எடுத்துவைத்திருக்க வேண்டும். அதை விடுத்து விட்டு, பி.ஜைனுலாபிதீன் எழுதிய புக்கிற்கு தனியாக விவாதம் வைப்போம், நாங்கள் என்ன கேள்வி கேட்கிறோமோ அதற்கு பதில் சொல்லுங்கள் என்று தன் அணிக்கே உரித்தான அகங்காரத்தோடு பதில் சொன்னது தவ்ஹீது ஜமாஅத் அணி.

விவாதம் நடைபெறும் இடத்தில் இரு அணியினரும் கேள்வி கேட்கவும், பதில் சொல்லவும் கடமைபட்டவர்கள் என்ற சிறிய அறிவுகூட TNTJ அணியினருக்கு இல்லாததுதான் இந்த அகங்காரத்திற்கு காரணம்.

முதலில் அவர்கள் கேள்வி கேட்டு, பதில் சொல்லும் நிலையில் நாம் இருப்பதா ? இது நம்முடைய கவுரவத்திற்கு ஏற்பட்ட இழுக்கல்லவா ? என்று பி.ஜைனுலாபிதீன் தலைமையிலான அணி கருதியிருந்தால், டாஸ் வென்ற அணி பி.ஜைனுலாபிதீன் தலைமையிலான தவ்ஹீது ஜமாஅத் அணிதானே, விவாதத்தை தொடங்கியிருக்க வேண்டியதுதானே, சுன்னத் ஜமாஅத் அணியினரைப்பார்த்து விவாதத்தைத்தொடங்குங்கள் என்று ஏன் வேண்டுகோள்விடுக்க வேண்டும் ?

பி.ஜைனுலாபிதீன் அவர்கள் எழுதிய புத்தகங்கள் அனைத்தையும் வைத்து கேள்வி கேட்டிருந்தால், பி.ஜைனுலாபிதீன் புத்தகங்களுக்கு தனியாக விவாதம் வைப்போம் என்று சொல்வதில் நியாயம் உண்டு. விவாதத்தில் தலைப்புக்குட்பட்ட புத்தகம் "சுபுஹான மெளலிது ஒரு ஆய்வு" பி.ஜைனுலாபிதீன் எழுதிய இந்த புத்தகத்தில்தானே இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்கள் மெளலிதில் உண்டு என்று சொல்லப்பட்டிருக்கிறது. மற்றும் எந்த செயலுக்குமே அடிப்படை கல்வி வேண்டும் அந்த அடிப்படையில் எடுத்த புத்தகம் "இஸ்லாம் அடிப்படைக்கல்வி" இதுவும் பி.ஜைனுலாபிதீன் என்பவரால் எழுதப்பட்டது. இஸ்லாத்தின் அடிப்படைக்கொள்கையை வைத்துத்தானே செயல்பட முடியும்.

தவ்ஹீத் ஜமாஅத் அணியினருக்கு இந்த கேள்வி தலையில் இடி விழுந்ததுபோல் இருந்தது போலும். கடைசிவரை இதற்கு பதில் சொல்லவில்லை. தவ்ஹீது ஜமாஅத் அணியினருக்கு இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறி, கோபம் பீறிட்டு முகமெல்லாம் வெளிறிப்போய்விட்டதை அவர்கள் வெளியிட்ட CD யில் தெளிவாக பார்க்க முடிந்தது. சுன்னத் ஜமாஅத் தன் விவாதத்தை சுபுஹான மெளலிதில் தொடங்கியது இதை கண்டுகொள்ளாத தவ்ஹீது ஜமாஅத் சாகுல் ஹமீது மெளலிதில் கேள்வியை தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறது. கடைசி வரை சுபுஹான மெளலிதை தவ்ஹீது ஜமாஅத் தொடவும் இல்லை, கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவும் இல்லை. இந்த விவாதத்தில் தவ்ஹீது ஜமாஅத்தின் வாய்சவாடல் நன்றாக வெளிப்பட்டது.

தமிழகத்தில் எல்லா இடங்களிலும் ஓதப்படும் சுபுஹான மெளலிதை விவாதத்தில் துணிந்து எடுத்து வைத்த சுன்னத் ஜமாஅத்தினருக்கு பதில் சொல்ல முடியாத தவ்ஹீது ஜமாஅத், கிணற்றுக்குள் வாழும் தவளையைப்போல ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஓதப்படும் சாகுல் ஹமீது மெளலிதில் உள்ள கருத்தை எடுத்து வைத்து தோல்வியை சந்தித்தது.

ஆனால் அந்த தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம்தான் இல்லாமல் விவாதத்தில் உளறி, தவ்ஹீது ஜமாஅத் அறிஞர்களுக்கு "அரபி மொழி தெரியாது" என்று அணியின் தலைவரான பி.ஜெய்னுலாபிதீனே "சுன்னத் ஜமாஅத்" அறிஞர்களிடம் அன்றைய தினம் நடைப்பெற்ற இரண்டாவது தலைப்பில் நடந்த விவாதத்தில் வாக்குமூலம் கொடுத்தார். சுன்னத் ஜமாஅத் அணி முன்னிலையில், தன் அணியான தவ்ஹீத் ஜமாஅத் அணியினரை கேவலப்படுத்த இதைவிட வேறு வார்த்தை அணியின் தலைவரான பி.ஜைனுலாபிதீனுக்கு கிடைக்கப்போவது இல்லை. அந்த அவலத்தையும் CD யில் பார்க்கமுடிகிறது. ஒரு வேலை இது பி.ஜெய்னுலாபிதீன் அவர்களால் ஆய்வு செய்து, அறிவுப்பூர்வமாக முடிவு செய்து உண்மையை ஒத்துக்கொண்டுவிடுவோம் என்று நினைத்துக்கூட வாக்குமூலம் கொடுத்திருக்கலாம்.

15 அல்லது 20 வருடங்களாக சுபுஹான மெளலிதில் தவறு இருக்கிறது, அதை ஓதுவது "ஷிர்க்" என்றெல்லாம் மேடைதோறும் முழங்கி வந்த தவ்ஹீது ஜமாஅத், அதை கிண்டலடித்து பிழைப்பு நடத்திய தவ்ஹீது ஜமாஅத், இதனை குர்ஆன் மற்றும் ஹதிஸ்கள் மூலம் எதிர்க்க முடியாமல் அப்துல் ரஹ்மான் பிர்தெளஸி(தவ்ஹீது ஜமாஅத்தின் காமெடி நடிகர்) என்ற சினிமா பைத்தியம் பிடித்தவரைக்கொண்டு சுபுஹான மெளலிதுக்கு சினிமா பாட்டு ராகம் அமைத்துக்கொடுத்து தவ்ஹீது மேடைகளிலே பாட வைத்த தவ்ஹீது ஜமாஅத் மெளலிது பற்றிய விவாதத்தில் சுன்னத் ஜமாஅத் அறிஞர்கள் சுபுஹான மெளலிதை நினைவுபடுத்தியும்கூட தவ்ஹீது ஜமாஅத்தால், விவாதத்தில் பங்கேற்ற சுன்னத் ஜமாஅத் அறிஞர்களிடம் சுபுஹான மெளலிதில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்ட பயந்தது ஏன் ? "ஷிர்க்" என்ற பெருங்குற்றத்தை சுபுஹான மெளலிது மீது சுமத்திய தவ்ஹீது ஜமாஅத், விவாதத்தில் பங்கேற்ற சுன்னத் ஜமாஅத் அறிஞர்களிடம் சுட்டிக்காட்ட பயந்து கேவலப்பட்டு போனது ஏன் ?

மார்க்க அறிவு இல்லாத மாட்டு மந்தை கூட்டம் போல கூடியிருக்கும் கூட்டங்களில் சுபுஹான மெளலிதைப்பற்றி பேசி, இதெல்லாம் "ஷிர்க்" அல்லவா ? இது கூடுமா ? இது மார்க்கத்தில் உண்டா ? என்றெல்லாம் அறியாதவர்கள் மத்தியில் வீர வசனம் பேசிய தவ்ஹீது ஜமாஅத் அணியின் தலைவரான பி.ஜெய்னுலாபிதீன், சுபுஹான மெளலிதை ஆய்வு செய்து "சுபுஹான மெளலிது ஒரு ஆய்வு" என்று புத்தகமே வெளியிட்ட பி.ஜெய்னுலாபிதீன், விவாதத்தில் பங்கேற்ற சுன்னத் ஜமாஅத் அறிஞர்கள் முன்னிலையிலே, மெளலிதில் என்ன தவறு இருக்கிறது ? நேரடியாக விவாதத்தில் கேட்ட சுன்னத் ஜமாஅத் அறிஞர்கள் மத்தியிலே, இரு தரப்பைச்சேர்ந்த மக்கள் முன்னிலையிலே, நடைப்பெற்ற விவாதத்தில் பங்கேற்ற தவ்ஹீது ஜமாஅத் அணியின் தலைவரான பி.ஜெய்னுலாபிதீன், மெளலிது பற்றிய விவாதத்தில் ஒரு வார்த்தைக்கூட மெளலிதைப்பற்றி எடுத்து வைக்காமல் பயந்து நடுங்கி, ஒடுங்கியிருந்தது ஏன் ? தவ்ஹீது ஜமாஅத் அணியின் சார்பாக தம்மோடு விவாதத்தில் பங்கேற்ற அரபி தெரியாதவர்களுக்கு துண்டுச்சீட்டு எழுதிக்கொடுத்து, அவர்களால் பேசமுடியாமல் திணறி, கோபப்படுவதைப்பார்த்து ரசித்துக்கொண்டிருந்தது ஏன் ? மெளலிது பற்றிய விவாதத்தில் பேச முடியாமல் தவ்ஹீது ஜமாஅத் அணியின் தலைவரான பி.ஜெய்னுலாபிதீன் நாக்குக்கு பூட்டு போட்டவன் யார் ? மெளலிது பற்றிய விவாதத்தில் ஒரு வார்த்தைக்கூட பேசாமல் பயந்தது ஏன் ? முகமூடி கிழிந்து விடும் என்றா ? இல்லை பின்னங்கால் பிடறியில் பட ஓட வேண்டிய நிலை ஏற்படும் என்றா ? பேச வேண்டிய நேரத்தில், பேச வேண்டிய இடத்தில் பேச பயந்தது ஏன் ? மற்ற இடங்களில் வாய் கிழிய பேசி என்ன பிரயோஜனம் ? பி.ஜைனுலாபிதீன் மெளலிது பற்றிய விவாதத்தில் ஏன் பேச பயந்தார் என்று எந்த தவ்ஹீது ஜமாஅத்தினராவது அவரிடம் கேள்வி கேட்டார்களா ? தவ்ஹீது ஜமாஅத் அணியின் தலைவரான பி.ஜைனுலாபிதீனிடம் கேள்வி கேட்கும் துணிவுதான் தவ்ஹீது ஜமாஅத்தினருக்கு உண்டா ?

விவாதத்தில் பேசாமல் மெளனம் சாதித்ததின் மூலம் "சுபுஹான மெளலிதில் தவறில்லை" என்று தவ்ஹீது ஜமாஅத் அணியின் தலைவரான பி.ஜைனுலாபிதீன் அவர்கள் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டதற்கான அர்த்தமாகத்தான் கொள்ள முடியும். இதை விடுத்து பதில் சொல்லும் விதமாக சப்பைக்காரணங்களைக் கொடுத்தால் சுன்னத் ஜமாஅத்தினரின் பல கேள்விகளுக்கு பதில் சொல்லும் மோசமான நிலைமை தவ்ஹீது ஜமாஅத்தினருக்கு ஏற்படும்.

வஸ்ஸலாம்.

சகதுல்லாஹ்
துபை.

Wednesday 23 January 2008



بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

உமைர் பின் சஃது அல் அன்சாரி (ரலி) அவர்களின் சம்பவம்.

அப்துல் மலிக் பின் ஹாருன் (ரஹ்) அறிவிப்பதாவது. உமர் (ரலி) அவர்கள் உமைர் பின் சஃது அல் அன்சாரி (ரலி) அவர்களை ஹிம்ஸின் கவர்னராக்கி அனுப்பியிருந்தார்கள். ஒரு வருடம் அங்கு தங்கியிருந்தார்கள். அவரை பற்றிய எந்த செய்தியும் வந்து சேரவில்லை. எனவே உமர் (ரலி) தன் எழுத்தாளருக்கு கூறினார்கள். நிச்சயமாக அவர் நமக்கு மோசடி செய்து விட்டார் என்றே நினைக்கிறேன். என்னுடைய இந்த தபால் உங்களுக்கு கிடைத்து அதை படித்து பார்த்ததும், புறப்பட்டு வரவும். வரும்போது முஸ்லிம்களின் பொதுச்சொத்திலிருந்து என்னென்னெ ஒன்று சேர்த்துள்ளீரோ அதையும் கொண்டு வரவும் என்று உமைருக்கு தபால் எழுதச் சொன்னார்கள்.

தபால் பார்த்த உமைர் (ரலி) அவர்கள், தன் தோல்துறுத்தியை எடுத்து, அதில் உணவையும், தன்னுடைய தட்டையும் வைத்துக் கொண்டார்கள். தன் ஒரு கூஜாவை தொங்கவிட்டுக் கொண்டார்கள். இன்னும் கைத்தடியையும் எடுத்துக் கொண்டு, ஹிம்ஸிலிருந்து மதீனாவரை நடந்தே வந்து சேர்ந்தார்கள். நிறமெல்லாம் மாறி, முகம் தூசிபடிந்து (பல நாட்கள் வெட்டாமல்) முடி நீண்டு இருந்த நிலையில் மதீனா வந்து சேர்ந்தார்கள். உமர் (ரலி) அவர்களிடம் வந்ததும் அமீருல் முஃமினீனே ! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ என்று கூறினார்கள்.

உமர் (ரலி) அவர்கள் உங்கள் நிலை என்னவென்று கேட்டார்கள். அதற்கு உமைர் (ரலி) என் நிலையை தான் தாங்கள் பார்க்கிறீர்களே, ஆரோக்கியமான உடல், சுத்தமான இரத்தம் உள்ளவனாக என்னை தாங்கள் காண்கிறீர்கள் அல்லவா ? என்னுடன் துன்யா உள்ளது. அதன் ஓரத்தை பிடித்து அதை இழுத்து வந்துள்ளேன் என்று கூறினார்கள்.

உமர் (ரலி) அவர்கள் அதிக பொருட்கள் கொண்டு வந்திருப்பார் என்றெண்ணி, உங்களுடன் என்ன ? உள்ளது என்று கேட்டார்கள். என்னுடன் என் தோல் துறுத்தியுள்ளது, அதில் என் தட்டும், உணவும் வைத்திருக்கிறேன். அதிலேயே சாப்பிடுவேன். அதிலேயே குளிப்பேன், துவைப்பேன். என் கூஜாவில் ஒளுவுடைய தண்ணீர் மற்றும் குடிநீர் வைத்திருப்பேன். என்னுடைய அஸாவில் சாய்ந்து கொள்வேன். தேவைப்பட்டால் விரோதியை எதிர்த்து போராடுவேன். அல்லாஹ் மீது சத்தியமாக, என் உலகம் இந்த சாமான்கள் தவிர வேறில்லை என்று கூறினார்கள்.

உமர் (ரலி) அவர்கள் நடந்தே வந்தீர்களா ? என்று கேட்டார்கள். அவர்கள் ஆம் என்றதும், ஒருவரும் உங்களுக்கு பயணம் செய்யும் வாகனம் ஏற்பாடு செய்து தரவில்லையா ? என்று கேட்டார்கள். அவர்கள் யாரும் அதை செய்யவில்லை, நானும் அவர்களிடம் கேட்கவில்லை என்று சொன்னார்கள். உடனே உமர் (ரலி) அவர்கள் நீங்கள் யாரிடமிருந்து வந்தீர்களோ அவர்கள் மிக கெட்ட முஸ்லிம்கள் என்று கூறினார்கள். உமைர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் உமரே ! புறம் பேசுவதை விட்டும் அல்லாஹ் உங்களை தடுத்துள்ளான். அவர்கள் (அம்மக்கள்) சுபுஹுடைய தொழுகை தொழுவதை நான் பார்த்துள்ளேன். (அதாவது நல்லோர்களே சுபுஹு தொழுகையை நிறைவேற்றுவார்கள். எனவே நீங்கள் கூறுவது போன்று அவர்கள் கெட்டவர்கள் அல்ல என்று கூறினார்கள்.)

ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் உங்களை எங்கே அனுப்பினேன், தப்ரானியுடைய அறிவிப்பில் வந்துள்ளது, நான் உங்களை எதற்கு அனுப்பினேன். என்ன செய்துவிட்டு வந்துள்ளீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், உங்கள் கேள்வியின் அர்த்தமென்ன ? அமீருல் முஃமினீனே ! என்று கேட்டார்கள். உடனே உமர் (ரலி) அவர்கள் சுப்ஹானல்லாஹ் (இது கூட புரியவில்லையா) என்று கேட்டார்கள். எனவே உமைர் (ரலி) அவர்கள் நான் உங்களை கவலையாக்கிடுவேன் என்று பயப்பட வில்லையானால், உங்களுக்கு இச்செய்தியை சொல்லமாட்டேன்.

நீங்கள் என்னை அனுப்பியதும், அந்த நாட்டிற்கு சென்றேன். அந்நாட்டின் நல்லோர்களை ஒன்று கூட்டி மக்களுடைய கணீமத் பொருட்களை ஒன்று சேர்த்து வர அவர்களுக்கு பொறுப்பு கொடுத்தேன். அவர்கள் அதை ஒன்று சேர்த்ததும் அதற்கு தகுதியான (மக்களிடம்) அதை கொடுத்து விட்டேன். அதற்கு நீங்கள் உரிமையுடையவராக இருந்தால் கொண்டு வந்திருப்பேன் என்று கூறினார்கள்.

நம்மிடம் நீங்கள் எதனையும் கொண்டு வரவில்லையா ? என்று கேட்டார்கள். இல்லை என்றதும் உமைருக்காக மீண்டும் புதிதாக பதவி ஒப்பந்தத்தை கொடுங்கள் என்று கூறினார்கள். அப்போது உமைர் (ரலி) அவர்கள் அது இவ்வளவு நாள் இருந்தது. இனி உங்கள் சார்பாகவோ, உங்களுக்கு பின் வேறொருவரின் சார்பாகவோ பதவி பொருப்பேற்க மாட்டேன் என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் மீது சத்தியமாக ! அப்பதவியிலிருப்பதால் (தவறைவிட்டு) பாதுகாப்பு பெறவில்லை, இனியும் பாதுகாப்பு பெற முடியாது. ஏனெனில் நான் ஒரு நஸ்ரானியை பார்த்து அல்லாஹ் உன்னை இழிவுபடுத்துவானாக என்று ஒரு சமயம் சொல்லி விட்டேன். உமரே ! நீங்கள் தான் எனக்கு இந்நிலையை ஏற்படுத்தி விட்டீர்கள். உமரே என் வாழ்நாளில் மோசமான நாள் உங்களுடனே கலீஃபா ஆன நாள்தான் என்று கூறி, வீட்டுக்கு செல்ல அனுமதி கேட்டார்கள். அனுமதியளித்ததும் தன் வீடு திரும்பினார்கள். அது மதீனாவிலிருந்து சில மைல்கள் தூரத்திலிருந்தது.

உமைர் (ரலி) அவர்கள் திரும்பி சென்றதும், அவர் நமக்கு மோசடி செய்து விட்டார் என்றே கருதுகிறேன் என்பதாக உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். பின்னர் ஹாரிஸ் என்பவரிடம் 100 தீனார்களை கொடுத்தனுப்பி, உமைரிடம் சென்று விருந்தாளி போன்று தங்கி இருப்பாயாக. அங்கு சந்தேகத்திற்குரிய ஏதேனும் அடையாளத்தைக் கண்டால், அப்படியே வந்து விடுவாயாக மேலும் கடுமையான வறுமை நிலையை கண்டால், இந்த 100 தீனாரை அவருக்கு கொடுத்து விடுவாயாக என்று கூறினார்கள். எனவே ஹாரிஸ் அங்கு சென்ற போது உமைர் (ரலி) அவர்கள் ஒரு சுவரோரம் உட்கார்ந்து தன் சட்டையில் உள்ள பேன்களை அகற்றிக் கொண்டிருந்தார்கள்.

அந்த மனிதர் அவர்களுக்கு சலாம் சொல்லியதும், உமைர் (ரலி) அவர்கள் அந்த மனிதரைப் பார்த்து அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக ! உள்ளே வருவீராக என்று கூறினார்கள். அவர் உள்ளே வந்ததும் எங்கிருந்து வருகிறாய் என்று கேட்டார்கள். மதீனாவிலிருந்து என்று கூறியதும், அமீருல் முஃமினீனை எவ்வாறு விட்டு வந்தாய் என்று கேட்டார்கள். அதற்கு அவர் நல்ல நிலையில் விட்டு வந்தேன் என்று சொன்னார்கள். முஸ்லிம்களை எந்த நிலையில் விட்டு வந்தாய் என்று கேட்டார்கள். அதற்கும் அவர்களை நல்ல நிலையில் விட்டு வந்தேன் என்று கூறினார்.

மேலும் உமர் (ரலி) அவர்கள் இஸ்லாமிய தண்டனைகளை நிலை நாட்டுகிறாரா என்று கேட்டார்கள். அதற்கு அவர் “ஆம்” ஒரு கெட்ட செயல் செய்த தன் மகனைக் கூட சாட்டையால் அடித்தார்கள். அதனால் அவர் இறந்து விட்டார் என்று பதில் கூறினார். உடனே உமைர் (ரலி) அவர்கள் யா அல்லாஹ் ! உமருக்கு உதவி செய்வாயாக ! அவர் உன்னை நேசிப்பதுதான் இவ்வாறு கடுமையாக நடந்து கொள்ளச் செய்கிறது என நான் நினைக்கிறேன். என்று கூறினார்கள்.

பின்பு அந்த மனிதர் மூன்று நாட்கள் அவர்களுடனே தங்கி இருந்தார். கோதுமை ரொட்டியை தவிர வேரொன்றும் அவர்களிடம் சாப்பிடுவதற்கில்லை. அதை விருந்தாளியான இவருக்கு சாப்பிட கொடுத்துவிட்டு, வீட்டில் உள்ள அனைவரும் பசித்திருந்தார்கள். கடைசியாக (இருந்த உணவும் தீர்ந்து) அவர்களுக்கு கஷ்டம் வந்ததும், உமைர் (ரலி) அவர்கள் அந்த மனிதரைப் பார்த்து நீர் நம்மை விட்டு திரும்பி விட நாடினால் சென்று விடலாம் என்று கூறினார்கள்.

உடனே அவர் 100 தீனாரை எடுத்து அவரிடம் கொடுத்து அமீருல் முஃமினீன் உங்களுக்கு கொடுத்து அனுப்பியுள்ளார்கள். உங்கள் தேவைகளுக்கு இவைகளை உதவியாக வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியதும், அவர்கள் ஒர் சப்தமிட்டு எனக்கு இது தேவையில்லை இதை திரும்ப கொண்டு செல்வாயாக என்று கூறினார்கள்.உடனே அவர்களுடைய மனைவி அவர்களைப் பார்த்து உங்களுக்கு அது தேவைப்பட்டால் அதை வைத்துக் கொள்ளுங்கள். இல்லையானால் அவைகளை சதக்கா செய்திடலாமே என்று கூறினார்கள்.

உடனே உமைர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமாக இந்த தீனார்களை வைத்துக்கொள்ள என்னிடம் ஒன்றுமில்லை என்றார்கள். உடனே அன்னாரின் மனைவி தன் மேலாடையின் கீழ்பகுதியை கிழித்து அந்த கிழித்த துணியை அன்னாரிடம் கொடுத்து, அதில் அதை வைத்துக் கொள்ளச் சொன்னார்கள். பின்பு உமைர் (ரலி) அவர்கள் அதை எடுத்துக் கொண்டு வெளியே சென்று ஷஹீதானவர்களின் குழந்தைகளுக்கும், ஏழைகளுக்கும் பிரித்துக் கொடுத்து விட்டு வீட்டிற்கு திரும்பி வந்தார்கள்.

அந்த தூதுவர் தனக்கும் அதிலிருந்து ஏதேனும் கொடுப்பார்கள் என எண்ணினார். உமைர் (ரலி) அவர்கள், அவரிடம் அமீருல் முஃமினுக்கு என் சலாம் சொல்லுங்கள் என்று கூறி அனுப்பி விட்டார்கள்.

ஹாரிஸ் என்ற அந்த மனிதர் உமர் (ரலி) அவர்களிடம் திரும்பச் சென்றார். அப்பொழுது என்ன பார்த்துவிட்டு வந்தாய் என்று கேட்டார்கள். அதற்கு அவர் அமீருல் முஃமினீனே ! கடுமையான கஷ்ட நிலையைக் கண்டேன் என்று கூறினார்கள். அந்த தீனார்களை என்ன செய்தார் என்று கேட்டார்கள். அது எனக்குத் தெரியாது என்று பதில் கூறினார்கள்.

உடனே உமர் (ரலி) அவர்கள் ஒரு கடிதம் எழுதி இந்த கடிதம் உங்களுக்கு கிடைத்ததும் உங்கள் கையில் இருந்து அதை கீழே வைக்காமல் நேரடியாக இங்கு வரவும். என்று எழுதி அனுப்பினார்கள். உடனே அவரும் புறப்பட்டு உமர் (ரலி) அவர்களிடம் வந்ததும், அந்த தீனார்களை என்ன செய்தீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்தேன். அதை பற்றி நீங்கள் ஏன் கேட்கிறீர்கள் என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் உங்களிடம் சத்தியமிட்டுக் கேட்கிறேன். அவைகளை என்ன செய்தீர்கள் என்று நிச்சயம் எனக்கு சொல்ல வேண்டும் என்று கூறினார்கள். அவைகளை நான் என் மறுமை வாழ்வுக்காக வேண்டி முற்படுத்தி விட்டேன் என்று கூறினார்கள்.

உடனே உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக என்று கூறி 60 படி உணவு தானியமும், இரண்டு ஆடைகளும் அவருக்கு கொடுக்குமாறு ஏவினார்கள். அப்பொழுது அவர்கள் இந்த உணவு தானியம் எனக்கு தேவைப்படாது. ஏனெனில் நான் என் வீட்டில் இரண்டு படி கோதுமை வைத்துள்ளேன். அதை சாப்பிட்டு முடிப்பதற்குள் அல்லாஹூத்தஆலா அடுத்த உணவை கொண்டு சேர்த்து விடுவான் என்று கூறி அந்த உணவு தானியங்களை வாங்கவில்லை. மேலும் இவ்விரு ஆடைகளும் இன்னாருடைய தாய் (என்னுடைய மனைவி) ஆடையில்லாமல் இருக்கிறாள். என்று கூறி அவ்விரண்டையும் வாங்கிக் கொண்டார்கள். பின்பு தன் வீட்டிற்கு திரும்பி சென்றார்கள். அங்கு சென்ற சிறிது நேரத்தில் அன்னார் இறந்து விட்டார்கள். அல்லாஹ் அவர்களுக்கு ரஹ்மத் செய்வானாக. இச்செய்தி உமர் (ரலி) அவர்களுக்கு கிடைத்ததும் அவர் மீது இரக்கப்பட்டு மேலும் வருத்தப்பட்டு பகீயே கர்கத் என்ற கபர்ஸ்தானுக்கு சென்றார்கள். அப்பொழுது தன் தோழர்களிடம் உங்களில் ஒவ்வொருவரும் தங்களுடைய ஆசைகளை சொல்லுங்கள் என்று கூறினார்கள்.

அப்பொழுது ஒரு மனிதர் அமீருல் முஃமினீனே ! என்னிடம் அதிகமான செல்வம் இருக்க வேண்டும் அதைக் கொண்டு பல அடிமைகளை வாங்கி அல்லாஹ்விற்காக உரிமை விட வேண்டும் என ஆசைப்படுகிறேன் என்று கூறினார். மற்றொரு மனிதர் அமீருல் முஃமினீனே ! என்னிடம் அதிகமான செல்வம் இருக்க வேண்டும் அவை அனைத்தையும் நான் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று சொன்னார். மற்றொரு மனிதர் எனக்கு அதிக சக்தி இருக்க வேண்டும் அதைக் கொண்டு ஜம்ஜம் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து பைத்துல்லாஹ்வை ஹஜ் செய்யும் ஹாஜிகளுக்கு நீர் புகட்ட ஆசைப்படுகிறேன் என்று கூறினார்.

பின்பு உமர் (ரலி) அவர்கள், எனக்கு உமைர் பின் சயீதை போன்று ஒரு மனிதர் கிடைக்க வேண்டும் அவரைக் கொண்டு முஸ்லிம்களுடைய பொறுப்புகளை நிறைவேற்றுவதில் உதவி பெற்றுக்கொள்ள ஆசைப்படுவதாக கூறினார்கள்.

நூல் : ஹில்யா, ஹ.ச-185-2.


இது தான் நமது உத்தம சத்திய ஸஹாபாக்களின் வாழ்க்கை முறையாகும். இவ்வுத்தமர்கள் மார்க்கத்தை விளங்கிய பிரகாரம் நாமும் விளங்கி அமல் செய்ய அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லுதவி புரிவானாக. ஆமின். வாகிர தஃவானா வஅனில் ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன். வஸ்ஸலாம்.

இவன்.

முஹம்மது பதுருதீன்.