Saturday 3 October 2009

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹிம்

S.P. பட்டணத்தில் பூதம் !

பாகம் - 3

பி.ஜெய்னுலாபிதீனும் அற்புத விளக்கமும் :


S.P. பட்டணம் பிரச்சினைக்கு அண்ணன் பி.ஜெ. முந்திக்கொண்டு உருவாக்கிய பிரம்மை இரண்டு :
1. சயீது ஹாஜியாரும் அவரது துணைவியாரும் சொந்தமாக செலவு செய்து கட்டிய பள்ளியை அண்ணன் பி.ஜெ.யின் தமிழ்நா(ட்)டு தவிஹீது ஜமாத்தினருக்கு எழுதி கொடுத்துவிட்டார். ஆதாரம் பத்திர நகலை தூக்கி காட்டும் அண்ணன் பி.ஜெ.யின் படம்.
2. அவ்வாறு தங்கள் வசம் ஒப்படைத்ததை ஊர் ஜமாத்தினர் (சுன்னத் வல் ஜமாத்தினர்) பலவந்தமாக அபகரிக்க நாடுகின்றனர். அதற்கு ஒத்தாசையாக ஊர் MLA, காவல்துறை அதிகாரிகள், ஆர்.டி.ஓ. போன்றவர்கள் நடந்துகொள்கிறார்கள். இது நியாயமா ? ஆனால் ஊர் ஜமாத்தினர் சார்பாக லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்த உண்மை நிலவரம் மற்றும் எதிர் கேள்விகளாலும் S.P. பட்டணம் பத்திர நகலை தூக்கி காட்டிய தனது மாவீரத்தனம் மாவாகிப் போனதாலும், சரியான பதில் சொல்ல முடியாமல் கேள்வி கேட்டவரையும், வெளியிட்டவரையும், சம்பந்தமில்லாதவரையும் ஏசியும் பேசியும் சம்பந்தமில்லாமல் பதில் சொல்லியிருப்பதன் மூலம் அவரது பலவேஷம் அம்பலம். அதனால்தான் ஆரம்ப போராட்டமாக அறிவிக்கப்பட்டது கடைசி போராட்டமாக மாறி அடக்கி வாசிக்கப்படுகிறது. தனது உயிரை பத்திரப்படுத்தி அடுத்தவர்களின் பல உயிர்களை கொடுப்போம் என கூறியவரும் இப்பொழுது உயிர்பலி கொடுக்காமல் இருப்பதும் அதனால்தான்.
ஊர் ஜமாத்தினர் சார்பு கேள்வியின் சாராம்சம் :

கேள்வி1 : மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான், கடையநல்லூர் மஸ்ஜிதுல் முபாரக், திருச்சி சிங்காரத்தோப்பு ஆகிய பள்ளிவாசல்களை பள்ளிவாசல்களின் பத்திர நகல்களுக்கு சொந்தக்காரர்களான ஜாக் ஜமாத்தினரிடம் ஒப்படைக்காமல், S.P.பட்டணம் ஊர் ஜமாத்தினர் போல்( ?!) அநியாயமாக அபகரித்து வைத்திருப்பது ஏன் ?

கேள்வி2 : 1994-ம் வருடம் ஊர் மக்கள் சாட்சியாக இருக்க வக்ஃபு செய்து அதன் நிர்வாகத்தை ஊர் ஜமாத்திடம் ஒப்படைத்து வாய் மொழியாக வாக்கு தந்துவிட்டு பின் 2009-ம் வருடம் (ஜனவரி) அதனை எழுத்து மூலமாகவும் எழுதி வாக்கு கொடுத்தது இதே சயீது ஹாஜியார்தான். அப்பொழுதெல்லாம் தடுக்காமல் (தனது பெயரில் பத்திர நகல் இருந்தும்) மெளனம் சம்மதத்திற்கு அறிகுறி என்ற அடிப்படையில் இருந்துவிட்டு, இப்பொழுது இது எனது சொத்து நான் யாருக்கு வேண்டுமானாலும் கொடுப்பேன் என சயீது ஹாஜியாரின் துணைவியார் செய்வதும் அதற்கு அண்ணன் துணை போவதும் நபி வழியில் சரியா ? மேற்கண்ட கேள்விக்கு அண்ணன் பி.ஜெ. தந்த பதில் கீழே தரப்பட்டுள்ளது அதன் மேல் இரண்டு முறை கிளிக் செய்து பெரிதாக்கிப் பார்க்கவும்.
பி.ஜெ.யின் விளக்கத்தின் குழப்பம் அதற்கு விளக்கம் : அண்ணன் பி.ஜெ.யின் ஒப்பீடு உப்பு சப்பில்லாதது. ஒருவர் தனது சொந்த இடத்தில் தனது சொந்த செலவில் பள்ளிவாசல் கட்டி தருகிறேன் என்று கூறினால் எந்த ஊர் ஜமாத்தினரும் தனது உடலாலும் பொருளாலும் உதவிசெய்யமாட்டார்கள் அது தேவையுமில்லை. இது ஊர் அறிந்த உண்மை. இன்னும் சற்று விளங்க வேண்டுமெனில் தமிழ்நா(ட்)டு தவ்ஹீத் ஜமாத்தினருக்கு ஒருவர் தனது சொந்த செலவில் சொந்த இடத்தில் பள்ளியோ, மதரசாவோ கட்டி தருகிறேன் என்று கூறினால், மனோஇச்சை.COM-லோ அல்லது ஏ…கத்துவோம்.COM-லோ “இறைஇல்லம் எழுப்ப வாரி வழங்குவீர்” என்று விளம்பரம் செய்வார்களா ? அல்லது தனது சொந்த சல்லிகளை கொடுப்பார்களா ? அதுமட்டுமல்ல எவ்வாறு ஊர் ஜமாத்தினரின் சல்லிகாசும் இல்லையோ அதுபோல்தான் தமிழ்நா(ட்)டு தவ்ஹீதுனரின் சல்லி காசும் கிடையாது. எனவே இரு தரப்பினருமே சம அந்தஸ்து உடையவர்கள்.
தனது போராட்டத்திற்கு மூலக்கருவாகவும் தாங்கள்தான் அப்பள்ளியின் சொந்தக்காரர்கள் என்பற்கு ஆதாரமாகவும் தங்களுக்கு எதிரானவர்களை வசைபாடுவதற்கு உதவியாகவும் இருந்தது தமிழ்நா(ட்)டு தவ்ஹீது பெயரில் ரிஜிஸ்டர் செய்யப்பட்ட அப்பத்திரம்தான். அதனடிப்படையில் ஜாக் பெயரில் ரிஜிஸ்டர் செய்யப்பட்டிருக்கும் மேற்படி மூன்று பள்ளிகளையும் ஏன் ஜாக் அமைப்பிடம் திருப்பி தரவில்லை ? என கேட்ட கேள்விக்கு உள்ள பதிலா இது. நல்லோர்கள் நடுநிலையாய் நின்று பார்க்கட்டும்.
மேலும் ஜாக் பள்ளிவாசல் கட்டுவதற்கு தமிழ்நா(ட்)டு தவ்ஹீது சகோதரர்கள் தனது உடலாலும் பொருளாலும் பாடுபட்டுள்ளனர். அதனால்தான் அபகரித்துகொண்டேன் என சொல்லாமல் சொல்லியிருப்பதன் மூலம் அண்ணன் பி.ஜெ. தனது முகத்திரை கிழிந்த பாதிப்பால் மூலை குழம்பியுள்ளார் என்பது தெளிவு. மேற்படி மூன்று பள்ளிகளையும் அண்ணன் பி.ஜெ. தமிழ்நா(ட்)டு தவ்ஹீது சார்பாக பணம் வசூலித்து மேற்படி பள்ளிவாசல்களில் எங்களுக்கும் சம உரிமை உண்டு என்று ஜாக் ஜமாத்திடம் ஒப்பந்தம் செய்துகொண்டு தனது உடலையும் உழைப்பையும் கொட்டவில்லை. மேலும் அண்ணன் பி.ஜெ. ஜாக் ஜமாத்தில் இருக்கும்போது, ஜாக் ஜமாத்தின் பில் கட்டுகளை பயன்படுத்தி வசூல்செய்யப்பட்டது. மக்களும் ஜாக் ஜமாத் பள்ளி என்ற நிய்யத்தில்தான் பணமும் கொடுக்கப்பட்டது. அதுமட்டுமல்ல எவ்வாறு தமிழ்நா(ட்)டு தவ்ஹீது ஜமாத்தினர் உழைத்தார்களோ அதுபோல்தான் ஜாக் ஜமாத்தினரும் உழைத்துள்ளனர். எனவே இருவரும் சம அந்தஸ்து உடையவர்கள்.
அதைவிட முக்கியம் ஜாக் ஜமாத்திலிருந்து அண்ணன் வெளியேறியதற்கு ஜாக் பொருப்பாளியல். அண்ணன் பி.ஜெ.தான் ஜாக் ஜமாத்துக்கு தலாக் சொல்லிவிட்டு தனக்கு தேவையில்லை என தூ… என துப்பிவிட்டு வெளியே வந்தார். பார்க்க வீடியோ கிளிப்.

இவராக வெளியேறியதற்கு ஜாக் பொருப்பாளியல்ல. இவர்தான் பொருப்பாளி. எனவே அண்ணனுக்கு கொஞ்சமாவது நீதி நேர்மை இருந்தால் பத்திர நகல் உள்ள ஜாக் ஜமாத்திடம் மேற்படி மூன்று பள்ளிகளையும் ஒப்படைக்கவேண்டும்.
அண்ணன் பி.ஜெ.யின் ஊர் ஜமாத் சார்பு இரண்டாவது கேள்விக்கான பதில் அவரது மூலைக்குழப்பத்தின் உச்சக்கட்ட வெளிப்பாடு. ஏற்கனவே வாய்மொழியாகவும் சமீபத்தில் எழுத்து மூலமாகவும் அப்பள்ளியின் நிர்வாகத்தை ஊர்ஜமாத்தினர் வசம் ஒப்படைத்ததை மீண்டும் அதில் (ஏற்கனவே அல்லாஹ்விற்காக வக்ஃபு செய்யப்பட்டது) உரிமை கொண்டாடி தனது கொடுத்த வாக்கை மீறியும் தானமாக கொடுத்ததை மீண்டும் பெரும் மூலமாகவும் சயீது ஹாஜியாரும் அவரது துணைவியாரும் நடந்து கொள்வது நபிவழிப்படி சரியா ? அதற்கு தமிழ்நா(ட்)டு தவ்ஹீது துணை போவது நபிவழிக்கு மாற்றமில்லையா ? என கருத்துப்பட கேட்ட கேள்விக்கு உள்ள பதிலா ? என்பதை உண்மையாளர்கள் சிந்திக்கட்டும்.
இன்னொரு அடிப்படையான விஷயமும் கவனிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் அண்ணன் பி.ஜெ.யின் போட்டி பள்ளிவாசல்கள் உள்ளது. அவற்றிலெல்லாம் தலையிடாத சுன்னத் வல் ஜமாத்தினர் S.P. பட்டிணம் பள்ளிவாசலில் உரிமை கொண்டாடுகிறார்கள் என்றால் அப்பள்ளியின் நிர்வாகத்தினர் ஊர் ஜமாத்தினர்தான் என்பது மறைமுக உண்மை. நேர்முக உண்மை இன்ஷா அல்லாஹ் கோர்ட் தீர்ப்பின் மூலம் வெளிப்படும்.
S.P.பட்டிணம் பள்ளிவாசல் நிலைப்பாட்டில் குர்ஆன் ஹதீஸ் அடுப்படையில் சயீது ஹாஜியாரும் அவரது துணைவியாரும் தான் எடுத்த வாந்தியை தானே சாப்பிடும் இழிநிலையில் உள்ளனர் (தவரை திருந்திக்கொண்டால் தவிர) அந்த வாந்தியைத்தான் அண்ணன் பி.ஜெ. சாப்பிட விரும்புகிறார். தனது கொள்கை சகோதரர்களையும் தனக்கு துணையாக அழைக்கிறார் என்பதுதான் உண்மை.
ஏமாற்றப்பட்ட கொள்கை சகோதரர்கள் :
அண்ணன் பி.ஜெ.யை எப்பவும்போல் நம்பி மழையென்றும் பாராமல் தனது குடும்பங்களோடு வீதியில் இறங்கி அவரது நபிவழிக்கெதிரான விஷயத்தில் கொள்கை சகோதரர்கள் அவருக்கு (அறியாமல்) ஆதரவளித்துள்ளார்கள் என்றால் அது மிகையாகாது.
நடுநிலையாளர்கள் இனி செய்ய வேண்டியது என்ன ? மேற்படி மூன்று மஸ்ஜிதுகளையும் அதன் உரிமையாளர்களும் அதன் பத்திர நகலை உடையவர்களுமான ஜாக் ஜமாத்திடம் ஒப்படைக்கவேண்டும். S.P.பட்டணம் பள்ளியை வாய் மொழியாகவும் எழுத்து மூலமாகவும் ஊர் ஜமாத்திடம் நிர்வாகத்தை ஒப்படைத்து வாக்கு கொடுத்துவிட்டு கொடுத்த பிறகு கொடுத்த வாக்கை மீறி தானமாக கொடுத்ததை திரும்பப் பெற்று அதனை தமிழ்நா(ட்)டு தவ்ஹீது வசம் ஒப்படைப்பது, நபிவழிபடி “தான் எடுத்த வாந்தியை தானே சாப்பிடுவதற்கு சமம்” என்ற அடிப்படையில் சயீது ஹாஜியாரும் அவரது துணைவியாரும் செய்யும் இச்செயலுக்கு நாம் துணைசென்றால் அப்பாவத்தில் நமக்கும் பங்குன்டு எனவே S.P. பட்டணம் பள்ளிவாசலையும் (பள்ளிவாசல் சயீது ஹாஜியார் மனைவி பெயரில் இருந்தாலும்) திரும்ப ஊர் ஜமாத்திடமே திரும்ப கொடுத்துவிட வேண்டும் என அவ்விருவருக்கும் தவ்ஹீதை எடுத்து சொல்லி புத்திமதி சொல்லவேண்டும் என அண்ணன் பி.ஜே.க்கு தவ்ஹீதை எடுத்து சொல்லும் பொருட்டு அவரது வீட்டை முற்றுகையிட்டால்தான் ஊர் ஜமாத்தினருக்கு எதிராக அநீதமாக நடந்துகொண்டதற்கு அல்லாஹ்விடத்தில் செய்யப்படும் பாவமன்னிப்பாகும். எது எப்படியோ இன்ஷா அல்லாஹ் “S.P.பட்டணத்தில் அண்ணன் பி.ஜெ. பொட்டலம்” ஆவது உறுதி. ஓசியில் கிடைக்கின்றது என்பதற்கு அண்ணன் பி.ஜெ. பினாயிலையும் குடிக்க விரும்புவது சரியல்ல.வஸ்ஸலாம்.
நீங்கள் மெய்யை அறிந்து கொண்டே, அதனை மறைத்துப் பொய்யை மெய்யெனெப் புரட்டிவிட வேண்டாம். (அல் குர்ஆன் : 1 :2 :42)
இவன்
M.முஹம்மது பதுருதீன்.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹிம்

S.P. பட்டணத்தில் பூதம் !

பாகம் – 2

சயீது ஹாஜியார் மற்றும் அவரது துணைவியார் செய்வது நபி முறைப்படி சரியா ?:

சயீது ஹாஜியார் மற்றும் அவரது துணைவியார் 11.8.2009 இமயம் டி.வி.யில் பேட்டி அளித்ததை மனோஇச்சை.com-ல் வெளியிட்டுள்ளனர்.அதில் எதிர் தரப்பினரை தரக்குறைவாக பேசியும், தான் செய்தது நபி முறைப்படி சரி என்பது போலவும் பேசியுள்ளார்கள்.

ஆனால் அவ்விருவரும் ஊர் ஜமாத்தினருக்கு கொடுத்த வாக்கும், எழுதி கொடுத்ததையும் தவறான வழிகாட்டுதலின் பேரில் மறைத்துள்ளனர் என்பது தெளிவாகின்றது.

வாய்மொழியாக தந்த வாக்கு :

1994 ஆம் வருடம் திறப்பு விழா நடத்தி ஊர் ஜமாத்தினர் பலநூறு மக்கள் முன்பு இப்பள்ளியை வக்ஃபு செய்வதாக அறிவித்தும், ஊர் ஜமாத்திடம் ஒப்படைத்தும் உள்ளார் சயீது ஹாஜியார்.

எழுத்து மூலமாக தந்த வாக்கு :

2009 ஜனவரி மாதம் பள்ளியின் பொருளாதாரத்திற்கு தான் பொருப்பு அதன் மற்ற காரியத்திற்கு ஊர் ஜமாத் பொருப்பு என எழுத்து மூலமாக வாக்கு தந்துள்ளார் சயீது ஹஜியார்.

1994 ஆம் வருடம்முதல் மெளனம் சம்மதத்திற்கு அறிகுறி என மெளனமாக இருந்துவிட்டு இது எனது இடம் எனது இஷ்டப்படி யாருக்கு வேண்டுமானாலும் கொடுப்பேன் என இப்பொழுது கூறுவது நபி வழியா ? மனோஇச்சையா ?

இங்கு கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் வக்ஃபு செய்யப்படும்வரை அப்பள்ளியின் நில உரிமையாளராக ஹாஜியா அம்மத்தூர் ரஹீமாவும் கட்டிடம் கட்டிய கட்டிட உரிமையாளராக சயீது ஹாஜியார் என்பதில் மாற்று கருத்து இல்லை.ஆனால் எப்பொழுது வக்ஃபு செய்யப்பட்டுவிடுமோ (வக்ஃபு என்பது அல்லாஹ்விற்காக தானமாக கொடுத்து விடுவது) இப்பொழுது அது அல்லாஹ்வின் இல்லமாக அதாவது அதன் உரிமையாளனாக அல்லாஹ் ஆகிவிடுகின்றான். இப்பொழுது அது வக்ஃபு சொத்தாகவும் மாறிவிடுகிறது. அதன்பிறகு எனது சொத்து என்றோ, நான் கட்டிய பள்ளி என்றோ உரிமைகொண்டாட எவ்வித உரிமையும் இல்லை. அவ்வாறு அல்லாஹ்விற்காக தானமாக கொடுத்த பின் அதில் உரிமை கொண்டாடும் பட்சத்தில்,

யார் அல்லாஹ்வுக்காக பள்ளிவாசல் ஒன்றை கட்டுகிறாறோ அவருக்கு அல்லாஹ் சுவர்க்கத்தில் அதேபோன்று ஒன்றை கட்டுகிறான்.
நபிமொழி நூல் :முஸ்லிம்

என்ற நன்மையை இழப்பதோடு இம்மையிலும் மறுமையிலும் நமக்கு நாமே நஷ்டத்தை ஏற்படுத்திக் கொண்டதாகிவிடும். அதுமட்டுமின்றி ஒரு முஸ்லிம் வாக்கு தந்தால் அதனை நிறைவேற்றுவது அவரின் மீது கடமையாகும். அது விஷயத்தில் அல்லாஹ்வும் அவனது ரசூலும் சொன்ன எச்சரிக்கையையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

(உண்மை) அவ்வாறன்று. எவர்கள் தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றி, (இறைவனுக்கு) பயந்து நடக்கின்றார்களோ, அவர்கள்தான், (குற்றம் பிடிக்கப் படமாட்டார்கள்.) நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) பயபக்தியுடையவர்களை நேசிக்கின்றான்.

எவர்கள் அல்லாஹ்விடத்தில் செய்த வாக்குறுதிகளையும், தங்களுடைய சத்தியங்களையும் சொற்ப விலைக்கு விற்று விடுகின்றார்களோ அவர்களுக்கு ;மறுமையில் நிச்சயமாக யாதொரு (நற்) பாக்கியமுமில்லை. அன்றி, அல்லாஹ் மறுமையில் அவர்களுடன் (விரும்பிப்) பேசவுமாட்டான். (அன்புடன்) அவர்களை இறுதிநானில் திரும்பிப் பார்க்கவுமாட்டான். அவர்களைப் புனிதப் படுத்தவுமாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையுமுண்டு.
அல்குர்ஆன் : 3 :3 :76,77)


அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அறிவிக்கிறார்கள். நான்கு குணங்கள் எவனிடம் குடிகொண்டுள்ளனவோ அவன் வடிகட்டிய நயவஞ்சகன் ஆவான். பேசும்போது பொய் பேசுவதும், வாக்குறுதியளித்தால் (அதற்கு) மாறு செய்வதும், ஒப்பந்தம் செய்தால் (நம்பிக்கை) மோசடி செய்வதும், வழக்காடினால் அவமதிப்பதும்தான் அவை. எவனிடம் இவற்றில் ஒரு குணம் குடிகொண்டுள்ளதோ அவன் அதைவிட்டுவிடும் வரை அவனுள் நயவஞ்சகத்தின் ஒரு குணம் குடியிருக்கும். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூல் :புஹாரி)

அதுமட்டுமல்ல ஒருபொருளை அல்லாஹ்விற்காக தானமாக கொடுத்துவிட்டு அதனை திரும்பப் பெற முயற்சிப்பதோ அல்லது அதில் உரிமை கொண்டாடுவதோ எவ்வளவு கேவலமான செயல் என்பதையும் நபி (ஸல்) எச்சரித்துள்ளார்கள்.

உமர் இப்னு கத்தாப் (ரலி) அறிவிக்கிறார்கள் : ஒரு குதிரையின் மீது ஒருவரை நான் இறைவழியில் (போரிடுவதற்காக) ஏற்றியனுப்பினேன். (அவருக்கே அதை தர்மமாக கொடுத்து விட்டேன்) அதை வைத்திருந்தவர் அதை (சரியாகப் பராமரிக்காமல்) பாழாக்கிவிட்டார். எனவே, அந்த குதிரையை அவரிடமிருந்து வாங்க விரும்பினேன். அவர் அதை விலை மலிவாக விற்று விடுவார் என்று எண்ணினேன். எனவே, நபி(ஸல்) அவர்களிடம் அது குறித்துக் கேட்டேன். அவர்கள் “ நீங்கள் அதை வாங்காதீர்கள், அவர் உங்களுக்கு அதை ஒரேயொரு திர்ஹமுக்குக் கொடுத்தாலும் சரியே ! ஏனெனில், தன் தருமத்தைத் திரும்பப் பெறுபவன், தன் வாந்தியைத் தானே திரும்பத் தின்கின்ற நாயைப் போன்றவன் ஆவான்” என்று கூறினார்கள்.
(நூல் :புஹாரி)

இந்த ஹதீஸில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் உமர்(ரலி) அவர்கள் தான் தானமாக கொடுத்த குதிரையை கொடு என்று கேட்கவில்லை. அவரின் பராமரிப்பு சரியில்லாததால் அது அவருடைய குதிரைதான் என கருதி அதனை பணம் கொடுத்து வாங்கத்தான் நபி(ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்கிறார்கள். ஆனால் நபி(ஸல்) அதனையும் தடை செய்து மேற்படி இது இழிவான செயல் என்றும் சுட்டிக் காட்டுகிறார்கள். தான் கொடுத்த வாக்கை மீறுவது மட்டுமின்றி தான் தானமாக அல்லாஹ்விற்காக கொடுத்த பள்ளிவாசலில் உரிமை கொண்டாடுவது நபி வழியா ? மனோஇச்சையா ? என்று இருவரும் அல்லாஹ்விற்காக யோசித்து ஒரு நல்ல முடிவை எடுப்பது இருவருக்கும் நல்லது.

சயீது ஹாஜியார் மற்றும் அவரது துணைவியாரின் செயல்பாட்டை இன்னும் சற்று தெளிவாக புரிந்துகொள்ள ஒரு உதாரணத்தைக் குறிப்பிடலாம். ஒருவர் பள்ளிவாசலுக்கு அல்லாஹ்விற்காக 4 டியூப்லைட்டுகள் மற்றும் 4 மின் விசிறிகள் தானமாக போடுகிறார். ஒருமாதம் கழித்து அதில் ஒரு டியூப்லைட்டையும் ஒரு மின் விசிறியையும் கழற்றி எடுத்துச் செல்கிறார் அதனைப் பார்த்த அப்பள்ளியின் நிர்வாகி ஏனப்பா இவ்வாறு செய்கிறாய் ? இது பள்ளிவாசலுக்குரியதாயிற்றே ? இவ்வாறு செய்வது கூடாது என தடுக்கிறார். ஆனால் அந்த நபரோ இது நான் வாங்கியது, எனக்கு சொந்தமானது இதோ எனது பெயரில் நான் வாங்கியதாக ரசீது உள்ளது. எனவே இதை நான் யாருக்கு விரும்புகின்றேனோ அவருக்கு இப்பொழுது கொடுப்பேன். என்று சொன்னால் அவரை என்னவென்று சொல்வது ? மேலும் அவர் செய்வது சரிதான் அவர் வாங்கியதாக அவர் பெயரில்தான் ரசீதும் உள்ளதே ! என்று அருகிலுள்ள மற்றொருவர் அந்நபருக்கு ஆதரவாக சொல்வாரானால் அவரையும் என்னவென்று சொல்வது ? இதைப்போன்றதுதான் சயீது ஹாஜியார்,அவரது துணைவியார் மற்றும் அண்ணன் பி.ஜெ.யின் செயல்பாடுகள் உள்ளது.

அல்லாஹ் ரசூலின் தவ்ஹீதுபடி ஒரு முஸ்லிம் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவார். மேலும் நபி(ஸல்) கூறியபடி தனது வாந்தியை தானே சாப்பிடும் இழுநிலைக்கும் செல்லமாட்டார். எனவே சயீது ஹாஜியாரும் அவரது துணைவியாரும் அல்லாஹ் ரசூலின் தவ்ஹீதை பின்பற்றுவார்களா ? அல்லது அண்ணன் பி.ஜெ.யின் தமிழ்நா(ட்)டு தவ்ஹீதை பின்பற்றுவார்களா ? என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

தொடர்ச்சி பாகம் – 3…

இவன்.
M.முஹம்மது பதுருதீன்.

Friday 2 October 2009

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

S.P. பட்டணத்தில் பூதம் !

பாகம் - 1


தமிழ்நாட்டில் அண்ணன் பி.ஜெ.யின் புண்ணியத்தால் பிரபலமாகியுள்ள ஊர் தொண்டி அருகிலுள்ள S.P. பட்டணம். ஆரம்பத்தில் ஒரு தரப்பினரின் (அண்ணன் பி.ஜெ.யின் தமிழ்நா(ட்)டு தவ்ஹீத் ஜமாத்) வாதத்தை மட்டும் பார்த்து நிலைமையை கணிக்க வேண்டிய ஒரு சூழ்நிலை. ஆனால் இப்பொழுது ஊர் ஜமாத்தினரின் விளக்கமும் வந்துள்ளதால், இரண்டையும் ஒப்பிட்டு பார்க்கும்பொழுது ஓர் உண்மையை அவதானிக்கமுடிகிறது. அதனடிப்படையில் இப்பிரச்சினையை இஸ்லாமிய ஒளியில் ஆய்வு செய்து யார் பக்கம் உண்மை உள்ளது என்பதை விரிவாக ஆய்வு செய்வோம்.

அண்ணன் பி.ஜெ.யின் “பில்ட் அப்புகள்” :

தமிழ்நா(ட்)டு தவ்ஹீத் ஜமாத்தினர் தந்த விளக்கத்தையும், போட்டோக்களையும், வீடியோ கிளிப் (முழு வீடியோ பார்க்க அண்ணன் பி.ஜெ.யின் மனோஇச்சை.com செல்லவும்) போன்றவைகளை அவர்களே தத்தமது இணையதளங்களில் வெளியிட்டுள்ளனர். அதனை அப்படியே கீழே பதியப்பட்டுள்ளது. அதன்மீது இரண்டு முறை ‘கிளிக்’ செய்து பெரிதாக்கி அவை அனைத்தையும் கவனமாக படிக்கவும், கேட்கவும்.






மேற்படி பார்க்கும்பொழுதும் கேட்கும்பொழுதும் நமக்கு விளங்கும் உண்மை என்ன ? ஹாஜியா அம்மத்தூர் ரஹிமா அம்மையார் பெயரில் பள்ளிவாசலின் நில பட்டா உள்ளது. அவரது கணவர் சயீது ஹாஜியார் தனது சொந்த செலவில் பள்ளிவாசளை கட்டிமுடித்து பராமரித்தும் வருகிறார். அவர் அப்பள்ளியை நிர்வகிக்கும் பொருப்பை தமிழ்நா(ட்)டு தவ்ஹீது ஜமாத் வசம் கொடுக்கிறார். இதில் என்ன தவறு இருக்கிறது அது அவர்களின் உரிமையும் கூட. ஊர் ஜமாத்தினர் அதனை அபகரிக்க நினைப்பது அநியாயம் இல்லையா ? என்று தான் சாமானியரும் விளங்குவர்.

அதனை நம்பிய தமிழ்நா(ட்)டு தவ்ஹீது ஜமாத்தினரும் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் என்ற பெயரில் மழையென்றும் பாராமல் ஆண்களும் பெண்களும் வீதியில் இறங்கினர். செய்திகளை முந்தித்தருவதில் முன்னனியில் இருக்கும் அண்ணன் பி.ஜெ. தான் சொல்வதுதான் உண்மை உண்மையைத் தவிர வேறில்லை என்ற பிரம்மையை உண்டுபண்ணி அடுத்தவர்களை உசுப்பி விட்டு குசும்பு பன்னுவதில் அவரை அடிக்க ஆளில்லை.

ஆனால் இவரது பில்ட்அப்புகளை தவிடுபொடியாக்கும் விதமாக ஊர் ஜமாத்தினரின் விளக்கம் இப்பொழுது வெளியாகியுள்ளது. இதன்மூலம் அண்ணன் பி.ஜெ.யின் உண்மை மற்றும் நேர்மை வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளது. அதனை கீழேயுள்ள படத்தின் மீது இரண்டு முறை ‘கிளிக்’ செய்து பெரிதாக்கி பார்க்கவும்.

வெளிச்சத்திற்கு வந்த உண்மை :


அண்ணன் பி.ஜெ.யின் செயல்பாட்டை ஆய்வு செய்யும் முன் சயீது ஹாஜியார் மற்றும் அவரது துணைவியாரின் செயல்பாடுகள் அல்லாஹ் ரசூலின் தவ்ஹீதிற்கு உகந்ததா ? என்பதை முதலில் ஆய்வு செய்வோம்.
தொடர்ச்சி பாகம் -2…
இவன்.
M.முஹம்மது பதுருதீன்.