Monday 5 November 2007


ஹஜ் செய்வோம் விரைவில் செய்வோம்!


ஹஜ்ஜூடைய காலம் நெருங்கி வருவதால் உடலாலும் பொருளாலும் வசதிபடைத்தோர் ஹஜ் செய்வது அவசியமும் அவசரமும் ஆகும். வயதான பிறகு ஹஜ் செய்யலாம் என்ற எண்ணம் ஷைத்தானின் சூழ்ச்சியாகும். இக்காலத்தில் உடல் வலிமையாய் இருக்கும்பொழுது பண வசதி ஏற்பட்டால் தீனுக்கு முன்னுரிமை (ஹஜ்) தராமல் துனியாவிற்க்கு முக்கியத்துவம் (வீடு கட்டுவது, சொத்துக்கள் வாங்குவது,..) கொடுக்கப்படுகிறது. இதனால் வயதான காலத்தில் பணவசதி இருந்தால் உடல்வலிமை இழக்கப்படுகிறது அல்லது பணவசதியின்மை ஏற்பட்டுவிடுகிறது. அல்லாஹ் இத்தகைய நிலையிலிருந்து நம் அனைவரையும் பாதுகாத்தருள்வானாக. மேலும் எல்லா அமல்களையும் அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றும் வலிமையையும் வசதியையும் நமக்கு ஏற்படுத்தி தருவானாக. ஆமீன்.

இதன் அடிப்படையில் ஹஜ் செய்ய ஆர்வமூட்டும் மற்றும் செய்யாததின் பேரில் எச்சறிக்கை செய்யும் அல்லாஹ் ரசூலின் அறிவிப்புகள் கீழே தரப்படுகின்றது. அதனடிப்படையில் ஹஜ் கடமையான அனைவரும் ஹஜ்ஜை துரிதப்படுத்துவோமாக.


அல்லாஹ் கூறுகின்றான் :

அன்றி ஹஜ்ஜையும் உம்ராவையும் அல்லாஹ்வுக்காக நீங்கள் (நிறைவேற்றிப்) பூரணமாக்குங்கள்.
அல்குர்ஆன் (2 :196)


இறையில்லம் கஃபா


நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள் :

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் திருவாய் மலர்ந்தருளியதாக ஹஜ்ரத் அபூஹூரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : எவர் அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜூ செய்து அதில் துர்வார்த்தை பேசாமலும் தீமையான காரியம் (அதாவது தீனுக்குப் புறம்பான செயல்) செய்யாமலும் ஹஜ்ஜிலிருந்து திரும்புவாரோ, அவர் தமது தாயுடைய வயிற்றிலிருந்து அன்று பிறந்த பாலகனைப் போன்று திரும்புகிறார்.
(நூல் : புகாரி-முஸ்லிம்-மிஷ்காத்)

ஹஜ்ரத் அபூஹூரைரா (ரலி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அருள் வாக்கை அறிவிக்கிறார்கள் : நன்மைகள் நிறைந்த ஹஜ்ஜின் பிரதிபலன் சுவர்க்கத்தைத் தவிர வேறில்லை.
(நூல் : புகாரி,முஸ்லிம்)

நபிகள் கோமான் (ஸல்) அவர்கள் நவின்றதாக ஹஜ்ரத் புரைதா (ரலி) அவர்கள் அறிவுக்கின்றார்கள் : ஹஜ்ஜில் செலவழிப்பதைப் போன்று ஒன்றுக்கு (ஒரு ரூபாய்க்கு) பதிலாக எழுநூறு (ரூபாய்களாக) கிடைக்கும்.
(நூல் : அஹ்மத், தப்ரானி, பைஹகீ, தர்கீப்)


ஹஜ்ஜூக்குப் போகாமலிருப்பது பற்றிய எச்சரிக்கை :

அல்லாஹ் கூறுகின்றான் :

(இவ்வுலகில், இறைவனை வணங்குவதற்கென) மனிதர்களுக்கு அமைக்கப்பெற்ற ஆலயங்களில் முதன்மையானது நிச்சயமாக " பக்கா"வில் (மக்காவில்) இருப்பதுதான். அது (ஆசீர்வதிக்கப்பட்டதாகவும்,) மிக்க பாக்கியமுள்ளதாகவும், உலகத்தாருக்கு நேரான வழியை அறிவிக்கக் கூடியதாகவும் இருக்கின்றது.
(அல்குர்ஆன் : 4 :3 :96)

அதில் தெளிவான அத்தாட்சிகளும் இருக்கின்றன. இப்ராஹீம் (தொழுகைக்காக) நின்ற இடமும் இருக்கின்றது. எவன் அதில் நுழைகின்றானோ அவன் (அபயம் பெற்று) அச்சமற்றவனாகிவிடுகின்றான். ஆகவே, எவர்கள் அங்கு பிரயாணம் செல்ல சக்தியுடையவர்களாக இருக்கின்றார்களோ, அத்தகைய மனிதர்கள் மீது ; அல்லாஹ்வுக்காக (அங்கு சென்று) அவ்வாலயத்தை ஹஜ்ஜூ செய்வது கடமையாகும். (இதை) நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்கு ஒன்றும் குறைந்துவிடுவதில்லை. ஏனென்றால்,)நிச்சயமாக அல்லாஹ் உலகத்தார் யாவரின் தேவையற்றவனாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 4 :3 :97)

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :

ஹஜ்ரத் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அருள் மொழி பகர்ந்ததாக ஹஜ்ரத் அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : எந்த ஒரு மனிதருக்கு ஏதேனும் உண்மையான வெளிப்படையான தவிர்க்கமுடியாத தேவையால் ஹஜ்ஜூ செல்ல விலக்கு இல்லாமலும், கொடுமைக்கார அரசனால் தடை ஏதும் ஏற்படாமலும், அல்லது ஹஜ்ஜிலிருந்து தடுத்துவிடக்கூடிய கடுமையான நோய் ஏதும் இல்லாமலும் இருக்க அவர் ஹஜ்ஜூ செய்யாமலே மரணிப்பாரானால் ; அவர் யூதனாகவோ, கிறிஸ்தவனாகவோ மரணமடைந்து கொள்ளட்டும்.
(நூல் : தாரமீ-மிஷ்காத்-இத்திஹாப்)


மேற்கண்ட ஹதீஸை சற்று சிந்திப்பது மிகவும் அவசியமாகும். ஏனெனில் நமது நாயகம் (ஸல்) அவர்கள் தமது உம்மத்தினர் மீது எவ்வளவு கருனையுள்ளம் கொண்டவர்கள் என்பதை அனைவரும் அறிந்ததே. அக்கருனையுள்ளம் கொண்ட நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜூக்கு செல்லாதவர்களின் விஷயத்தில் கூறிய எச்சரிக்கையின்படி ஹஜ்ஜூக்கு செல்வது எவ்வளவு அவசியமும் அவசரமும் ஆகும் என்பதை நாம் உணரலாம். அத்தகைய துர்பாக்கிய நிலையிலிருந்து நம் அனைவரையும் அல்லாஹ் பாதுகாத்தருள்வானாக. ஆமீன்.

ஹாஜிகளின் சிறப்பு :

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் திருவாய் மலர்ந்தருளியதாக ஹஜ்ரத் அபூஹூரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள் : ஹஜ்ஜூ செய்பவரும் உம்ரா செய்பவரும் அல்லாஹ்வுடைய தூதுவர்கள் ஆவார்கள். அவர்கள் துஆக் கேட்பார்களாயின் அல்லாஹூதாலா அதனை ஏற்றுக் கொள்வான். அவர்கள் பாவ மன்னிப்பு கேட்பார்களாயின் அவர்களின் பாவங்களை மன்னித்து விடுவான்.

(நூல் : மிஷ்காத்)

இது மிகப்பெரிய பாக்கியமாகும். ஹாஜிகளின் துஆவில் நம்மையும் சேர்த்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்வது மிகவும் அவசியமாகும். மேலும் இச்சிறப்புக்குரிய ஹாஜிகளாக நமது பெற்றோர்கள் இருப்பார்களேயானால் இச்சிறப்பு இரட்டிப்பாகிவிடுகிறது. ஏனெனில் தனது பிள்ளைகளுக்காக கேட்கும் பெற்றோர்களின் துஆவை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான் என ஒரு ஹதீஸில் வந்துள்ளது. நமது பெற்றோர்கள் ஹஜ்ஜூக்கு இதுவரை செல்லாமல் இருப்பார்களேயானால் அவர்களுக்காக துஆ செய்துகொண்டு தஃவதும் கொடுத்துவரவேண்டும்.

நபி (ஸல்) அவர்களை ஜியாரத் செய்வதின் சிறப்பு :


ஹதீஸ்களை பலவீனப்படுத்துவதையே தனது தொழிலாக கொண்ட பலவீனக்கூட்டங்கள் தோன்றி நபி (ஸல்) அவர்களை ஜியாரத் செய்யதேவையில்லை எனக்கூறி வருவதை தூக்கியெறிந்துவிட்டு, நபி (ஸல்) அவர்களை ஜியாரத் செய்ய செல்கிறோம் என்ற மனத்தூய்மையோடு சென்று அன்னாரின் ஷபாஅத்தை பெறும் பாக்கியத்தை அடைவோமாக.

நபி (ஸல்) அவர்களின் ரெளலா ஷரீஃப்


நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :

ஹஜ்ரத் இப்னு உமர் (ரலி) அவர்களின் வாயிலாக அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அருள்வாக்கு அறியப்படுவதாவது : ‘எவர் என்னை தரிசிக்க வருவாரோ, மேலும் அஃதல்லாத வேறு எந்த நிய்யத்தும் அவருக்கு இல்லையானால், அவருக்காக சிபாரிஷ் செய்வது என்மீது கடமையாகி விட்டது.’

(அறிவிப்பவர் : தப்ரானி)

ஹஜ்ரத் இப்னு உமர் (ரலி) அவர்கள் மூலம் கிடைத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அருள்வாக்காவது : ‘எவர் என்னுடைய மரணத்திற்குப் பிறகு என்னை ஜியாரத்துச் செய்வாரோ, அவர் என் வாழ்நாளிலேயே என்னை ஜியாரத்துச் செய்தவர் போலாவார்.’
(அறிவிப்பவர் : தப்ரானி, தாருகுத்னி)

ஹஜ்ரத் இப்னு உமர் (ரலி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பொன் மொழியை எடுத்தியம்புகின்றார்கள் : எவர் ஹஜ்ஜூ செய்த பின்னர் என்னை ஜியாரத் செய்யவில்லையோ, அவர் என் மீது அநியாயம் செய்தவராவர்.
(அறிவித்தவர் : இப்னு அதிய்யா (ரலி) ; நூல் : இத்திஹாப்)

எனவே யாருக்கெல்லாம் ஹஜ் செய்வது கடமையாகிவிட்டதோ காலம் தாழ்த்தாமல் உடனே சென்றுவிடுவது அவசியமாகும். ஹஜ்ஜூக்கு செல்லும் ஹாஜிமார்கள் என்னையும் தங்களின் துஆவில் சேர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இச்சிறு முயற்சியின் மூலமாக அல்லாஹ் யாருக்காவது ஹஜ் செல்லும் பாக்கியத்தை தருவான் என ஆதரவு வைக்கின்றேன். வஆகிர தஃவானா வஅனில் ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன். வஸ்ஸலாம்.

இவன்.
முஹம்மது பதுருதீன்.

Wednesday 26 September 2007

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

அக்கால சஹாபிகளும் இக்கால ஆசாமிகளும்


தீன் தாவத் உழைப்புகள் நடைபெற்று அல்லாஹ்வின் உதவிகள் முஸ்லிம்களுக்கு கிடைத்த அக்கால நிலைகளையும், தீன் உழைப்பு நடைபெறாத இக்கால நிலைகனையும் சற்றே ஒப்பிட்டு பார்த்தால் நாம் எவ்வளவு பின்தங்கியுள்ளோம் என்பது விளங்கும்.

சகல அந்தஸ்துகளிலும் தாழ்ந்திருந்த அரபுகள் தீன் தஃவத் உழைப்பை மேற்கொண்டதின் காரணமாக உலகிலேயே உயர் அந்தஸ்துடையவர்களாக திகழ்ந்தனர். ஆனால் இன்றோ எவர்களை அல்லாஹ்வே "நீங்கள் தாம் உயர்ந்தவர்கள்" என்று கூறினானோ அந்த முஸ்லிம்கள் ; அல்லாஹ் யாரைப்பார்த்து பிற்பட்டவர்கள் எனக் கூறினானோ அந்த காபிர்களிடம் "எங்களை பிற்பட்ட சமுதாயத்தினர் பட்டியலில் சேர்த்து எங்கள் மீது கருணை காட்டுங்கள்" என்று தாழ்ந்து பணிந்து விண்ணப்பம் செய்கின்றனர்.

தஃவத் உழைப்பு நடைபெற்ற அக்கால முஸ்லிம்களை கலிமா பாவங்களை விட்டு தடுத்தது தஃவத் உழைப்பு நடைபெறாத இக்கால முஸ்லிம்களின் கலிமா இவர்களை தீனை. விட்டே தடுத்துவிட்டது. அன்றைய முஸ்லிம்கள் ஈமானுக்காக அரச பதவியையும் உதறித் தள்ளினார்கள். ஆனால் இன்றைய முஸ்லிம்கள் ஒரு பியூன் வேலைக்காகவும் ஈமானையும் உதறித்தள்ள தயார். அன்று முஸ்லிம்கள் தீனுக்காக உயிர் கொடுக்கவும் துடித்தனர். ஆனால் இன்று முஸ்லிம்கள் தீன் உழைப்பிலிருந்து உயிரைக் காப்பாற்றிக் கொண்டு தப்பி ஓட்டம் பிடிக்கின்றனர்.

சஹாபாக்கள் இலைதழை சாப்பிட்டும் தீன் சேவை செய்தனர் ! இன்று வயிறு நிறைய சாப்பிட்டதை ஜீரணிக்க டீ இலை குடித்து வெற்றிலை மென்று தின்ற பிறகும் தீன் வேலைக்கு முன் வருவதில்லை. அன்றைய முஸ்லிம்கள் தீனை உலகெங்கும் பரத்தினார்கள். இன்றைய முஸ்லிம்கள் உலகெங்கும் தீனுக்கு அவச்சொல்லை பெற்றுத்தருகின்றனர். சஹாபாக்கள் பெறும் பெறும் நல்ல அமல்களைச்செய்துவிட்டு அல்லாஹ்வின் சந்நிதானத்தில் அஞ்சி அழுதனர். இன்று பெறும் பெறும் பாவங்களைச் செய்த பிறகும் முஸ்லிம்கள் சிரித்து சந்தோஷப்படுகின்றனர்.

அன்று சஹாபாக்கள் மெஹ்ராஜில் தொழுகை கடமையாக்கப்பட்டதை அறிந்து ஈத் பிறையைக் கண்ட சிறுவர்களை போல் சந்தோஷத்தால் குதித்தனர். இன்று கஷ்த் ஜமாஅத் பள்ளிக்கு அழைத்தும் ‘என்னையா மஸ்ஜிதிற்கு தொழுக அழைக்கிறீர் !’ என முஸ்லிம்கள் கோபத்தால் குதிக்கின்றனர்.

அக்காலத்தில் மக்கள் தீனைத்தேடி நாடு நகரம் என்று சுற்றி அலைந்தனர். இக்காலத்தில் தீனுக்காக கஷ்து ஜமாஅத் வீட்டு வாசலைத் தேடி வந்தாலும் முஸ்லிம்கள் ஓடி ஒளிந்து கொள்கின்றனர். அன்று தொழுகை பாவங்களை நீக்கி முஸ்லிம்களை பரிசுத்தப்படுத்தியது. இன்று முஸ்லிம்களின் பாவங்களே அவர்களை தொழுவதிலிருந்து தடுத்து விட்டது. சஹாபாக்கள் கடையிலும் அல்லாஹ்வை தியானித்தனர். இன்றைய முஸ்லிம்கள் தொழுகையில் கடைபற்றி நினைக்கின்றனர்.

அன்று சஹாபாக்கள் சபிக்கப்பட்ட பஜார்களையும் மஸ்ஜிதின் சூழ்நிலை போல் ஆக்கினார்கள். இன்று மஸ்ஜிதுகளையும் பஜார் போல் ஆக்கிவிட்டனர்.சஹாபாக்களுக்கு அல்லாஹ்விற்கு பிரியமான இடமாகிய மஸ்ஜிதிலேயே அதிகம் இருக்க ஆசை. இன்றோ நமக்கு ஷைத்தானுக்கு பிரியமான பஜாரில் அதிகம் இருக்க ஆசை. சஹாபாக்கள் வீட்டில் அல்லாஹ்வை பயந்த அளவு இன்று நாம் பள்ளியிலும் பயப்படுவதில்லை.

சஹாபாக்கள் பள்ளிக்கு போனால் எப்பொழுது திரும்ப வீட்டிற்கு வருவார்கள் என சொல்ல முடியாது. ஆனால் பஜாருக்கு போனால் உடன் திரும்பிவிடுவார்கள் என சொல்லி விடலாம். இன்று நாம் பஜாருக்கு போனால் எப்பொழுது திரும்ப வீட்டிற்கு வருவோம் என்பது தெரியாது. ஆனால் பள்ளிக்குப் போனால் உடன் திரும்பி விடுவோம் என்பது நிச்சயம்.

அன்று வனாந்தரத்திலிருந்த ஆட்டுடையன் கூட அல்லாஹ் என்னைப் பார்க்கிறான் என பயந்து மோசடியாக ஆட்டை விற்கவில்லை. இன்று மஸ்ஜிதில் செருப்புகளைத் திருடி அவற்றை விற்றுப் பிழைக்கின்றனர். அன்றைய ஆட்டிடையன் "அமானத்தார்" இன்றைய நாட்டை ஆள்பவர்கள் "அவனமானத்தார்" தீன் உழைப்பு நடைபெற்ற அக்காலத்தில் தருமத்தின் பணப்பையை ஏழைகளின் வாசலில் இரவின் இருட்டில் கொண்டு வந்து கொடுத்துச் சென்றவர் யார் என்பது தெரியாமலிருந்தது. இன்றோ பஸ் நிறைய ஆட்கள் இருக்கும் போது பட்டப்பகலில் பணப்பையை எடுத்துச் சென்றவன் (பிக்பாக்கெட் அடித்தவன்) யார் என்பது தெரியாது.

அன்று இரவின் இருட்டில் வீட்டின் தனிமையில் பாலில் தண்ணீர் கலக்குமாறு தாய் சொன்னாலும் அல்லாஹ் பார்க்கிறான் என ஒரு பெண்மணி பயந்தார். இன்று பட்டப்பகலில் பலர்பார்த்துக் கொண்டிருக்கும்போதே தண்ணீரில் பாலை எப்படியோ கலந்து விடுகின்றனர்.

அக்காலத்தில் பால் விற்கப்பட்டால், பால் விற்கப்படும் பொருளா ? என்று ஆச்சரியப்பட்டார்கள். இன்று பால் இலவசமாக வினியோகிக்கப்பட்டால் ‘இலவசமா ?’ என எல்லோரும் ஆச்சரியப்படுவார்கள்.

அன்றைய முஸ்லிம்களை பார்த்ததும் அல்லாஹ்வின் நினைவு வந்துவிடும், இன்றைய முஸ்லிம்களைப் பார்த்ததும் துன்யா நினைவுக்கு வந்து விடும்.

அன்று சஹாபாக்கள் தீன் சாதனைகளைக் கொண்டு - இவர் பதரீன், இவர் உஹதில் கலந்து கொண்டவர் என அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று முஸ்லிம்கள் உலக அந்தஸ்துகளைக் கொண்டு – இவர் ஜமீன்தார், பெரிய வியாபாரி, பெரிய அதிகாரி, டாக்டர், வக்கீல் என – அறிமுகப்படுத்தப்படுகிறார்கள்.

அன்று தங்கம் வெள்ளியாலான நாணயங்களின் மீதும் முஸ்லிம்களுக்கு நம்பிக்கை இருக்கவில்லை. அல்லாஹ்வைக்கொண்டே சகலதும் ஆகும் என நம்பிக்கை இருந்தது. இன்று வெறும் காகித நோட்டுகளின் மீதும் முஸ்லிம்களுக்கு பலமான எகீன் உண்டாகிவிட்டது.

சஹாபாக்கள் இஸ்லாத்தைத் தழுவியபின் அவர்களின் பெயர்கள் மாற்றி வைக்கப்படவில்லை. ஹஜ்ரத் அபூபக்கர், ஹஜ்ரத் உமர் இஸ்லாத்திற்கு முன்பும் அதே பெயர்தான். ஆனால் அவர்களின் செயல்கள் மாறிவிட்டன. இன்று புதிதாக இஸ்லாத்தை ஏற்ற ஒருவருடைய பெயரை மாற்றி முஸ்லிம் பெயராக வைத்துவிட்டால் பெரிய காரியம் செய்துவிட்டதாக நினைக்கப்படுகிறது. அவர் பழைய செயல்களை செய்து கொண்டிருந்தாலும் ஏதும் கவலைப்படுவதில்லை.

சஹாபாக்களுக்கு தீன் இனிமையாக தோன்றியது. காரணம் அவர்களின் ஈமான் ஆரோக்கியமாக வலுவாக இருந்தது. இன்று நம்மவருக்கு தீன் கசப்பாக இருக்கிறது. காரணம் நமது ஈமானில் வியாதி ஏற்பட்டு பலஹீனமாக உள்ளது. காய்ச்சல் காரனுக்கு லட்டு, ஜிலேபி போன்ற இனிப்பும் கசப்பாய் தெரியும். பிரியானியும் சாப்பிட பிடிக்காது.

சஹாபாக்கள் உலகப்பொருட்கள் தம்மிடம் திரண்டு வருவதைக்கண்டு தீன் உழைப்பிற்கான பிரதிபலன் உலகிலேயே கிடைத்துவிட்டதோ என அஞ்சி அழுதனர். ஆனால் இன்று நாமோ தீன் உழைப்பிற்கான பிரதிபலன் நமது வியாபாரத்திலும் விவசாயத்திலும் பரக்கத்தாக வெளிப்பட வேண்டுமென ஆசைப்படுகிறோம். அதற்காக கடையில் யாசீன் ஓதப்படுகிறது.

அக்காலத்தில் தனது சொத்து, செல்வம், பணங்காசு அனைத்தும் பறி போனாலும் பாதகமில்லை. தனது மானம் காக்கப்பட வேண்டுமென்ற தன்மான உணர்ச்சி மிகைத்திருந்தது. ஆனால் இக்காலத்தில் மக்கள் தனது மானத்தை விற்றேனும் பணங்காசு சம்பாதிக்கும் இழிநிலைக்கு தாழ்ந்து விட்டனர்.

அன்று தன்னந்தனியாக ஒரு பெண் தனது அழகு ஆபரணங்களுடன் ஹீரா நகரிலிருந்து ஹஜ்ஜூக்கு சென்று திரும்பினாலும் அவளை ஏறிட்டுப் பார்க்கவும் எவருக்கும் துணிவில்லை. ஆனால் இன்றோ அடுத்த முஹல்லாவுக்குக் கூட ஒரு பெண் பாதுகாப்பாக போக முடியாது.

அன்று ஒரு தாய் இறந்துபோன தனது சின்னஞ்சிறு மகனையும் தொழுகையின் வாயிலாக உயிர்ப்பித்து ஜனாஸாவிலிருந்து எழுப்பி உட்காரவைத்துக் காட்டினார். ஆனால் இன்றுள்ள தாய்மார்களோ சுப்ஹூ தொழுகையை விட்டுவிட்டு தூங்கும் தம் பிள்ளைகளை தொழுக எழுப்புமளவு கூட ஈமானில் சக்தியற்றவர்களாக இருக்கின்றனர்.

சஹாபாக்களின் வியாபாரம் நம்முடைய தொழுகையைக் காட்டிலும் மிக மேலானதாக இருந்தது. ஏனெனில் அவர்களுடைய வியாபாரத்தில் அல்லாஹ்வின் தியானம் நிறைந்திருந்தது. ஆனால் இன்று நம்முடைய தொழுகையில் வியாபாரத்தின் தியானம் நிரம்பியுள்ளது. சஹாபாக்கள் வியாபாரத்திற்காக சென்ற இடமெல்லாம் தீனை பரப்பினார்கள். இன்று நாம் தீனுக்காக செல்லும் இடங்களிலெல்லாம் வியாபார தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு திரும்புகிறோம். சஹாபாக்கள் சிறு தொகையினராக இருந்தும் கைசர், கிஸ்ரா போன்ற சாம்ராஜ்யங்கள் அவர்களின் காலடியில் வீழ்ந்து கிடந்தன. ஆணால் நாம் இன்று பெருந்தொகையினராக இருந்தும் இஸ்ரேல் போன்ற சிறிய நாட்டிற்கும் பயந்து நடுங்குகிறோம்.

சஹாபாக்கள் காபிர் முஷ்ரிகுகளின் அவ்லாதுகளாக இருந்தும் மிக உயர்ந்த ஈமானை அடைந்து கொண்டனர். நாமோ பரம்பரை பரம்பரை முஸ்லிம்களின் அவ்லாதுகளாக இருந்தும் ஈமானின் மிக பலஹீனமான நிலையை அடைந்து கொண்டோம். சஹாபாக்களும் கஷ்டத்தை சகித்தனர் இன்றும் நாமும் கஷ்ட நஷ்டத்தை சகிக்கத்தான் செய்கிறோம். ஆனால் சஹாபாக்கள் தமது ஆன்மாக்களை பரிசுத்தப்படுத்திக் கொள்ளும் புனித பாதையின் கஷ்டங்களை சகித்தனர். இன்றுள்ள முஸ்லிம்கள் தாம் செய்யும் பாவங்களின் காரணமாக இறங்கும் கஷ்டங்களை சகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். சஹாபாக்களின் பேச்சைக்கேட்டு காட்டு மிருகங்களும் காட்டைவிட்டு வெளியேறின. ஆனால் இன்றுள்ள முஸ்லிம்களின் பேச்சை "மிருகங்களை விட கேவலமானவர்" என அல்லாஹ் எவர்களை குறிப்பிட்டானோ அந்த இறை மறுப்பாளர்களும் கேலி கிண்டல் செய்து சிரிப்பதுடன் முஸ்லிம்களை நாட்டை விட்டே வெளியேறுங்கள் என சப்தமிடுகின்றனர். சஹாபாக்கள் தீனின் மீது உழைத்ததினால், எவ்வித சாதனங்களும், வாகனங்களும் இன்றியே உலகெங்கும் தீனுக்காக பரவிச் செல்வது அவர்களுக்கு எளிதாக இருந்தது. ஆனால் நாம் இன்று தீனின் உழைப்பை விட்டதினால் வீட்டிலிருந்து பள்ளிவரை செல்வதும் கஷ்டமாக தோன்றுகிறது. சைய்யிதினா அபூபக்கர்(ரலி) அறியாமைக் காலத்திலும் ஷைத்தானை பின்பற்றியதில்லை. ஆனால் நாமோ ஹிதாயத்தின் காலத்திலும் ஷைத்தானை பின்பற்றுகிறோம்.

அன்று ஒரு முஹத்திஸ் மையை உலர்த்த தான் வாடகைக்கு இருந்த வீட்டின் சுவற்றிலிருந்து ஒரு சிட்டிகை மண்ணைக்கூட எடுக்க பயந்தார். இன்று வாடகை வீட்டில் வந்ததும் வீடு எனக்கே சொந்தம் என்கின்றனர். எப்படியும் வெளியேற்ற வேண்டுமானால் பகிடி கொடுக்காமல் ஒரு அடி கூட வெளியில் எடுத்து வைக்கமாட்டேன் என்கின்றனர்.

ஹஜ்ரத் தல்ஹா(ரலி) அவர்களுக்கு நபில் தொழுகையில் பைரஹா தோட்டத்தின் நினைவு வந்ததும் அத்தோட்டத்தை வக்பு செய்து விட்டார்கள். இன்று நமக்கு பர்ளு தொழுகையில் நமது கடை அல்லது தோட்டம் நினைவுக்கு வருமேயானால் அதை வக்பு செய்ய துணிவோமா ?

சஹாபாக்கள் பைத்துள் முகத்திஸை பார்வையை தாழ்த்தி நடக்கும் ஒரு சுன்னத்தை உயிர்ப்பித்ததின் பேரில் இரத்தம் சிந்தாமல் வெற்றி கொண்டனர். இன்று பல லட்சம் பேர் இரத்தம் சிந்தி பயங்கர ஆயுதங்களை பயன்படுத்தி போர்புரிந்தும் அதை வெற்றிகொள்ள முடியவில்லை.

ஆரம்பத்தில் சஹாபாக்கள் பசியின் காரணமாக தொழுகை சப்புகளில் நிற்கும்பொழுது மயங்கி விழுந்தார்கள். இன்று நாம் வயிறு நிறம்ப சாப்பிட்டதினால் உண்டான மயக்கத்தில் படுத்துறங்கி தொழுகையை விட்டுவிடுகிறோம்.

நெஞ்சின் மீது பாறாங்கல்லை வைத்தபின்னரும் சஹாபாக்கள் தீனை விட்டு மாறவில்லை இன்று யாராவது நெஞ்சிற்கு பாரமான ஏதேனுமொரு சொல்லை சொல்லிவிட்டாலும் நாம் தீன்வேலையை விட்டே தூரம் விலகி விடுகின்றோம்.

மெளலானா யூசுப் சாஹிப் (ரஹ்) கூறினார்கள் இன்று நாம் பார்க்கும் தீனின் நிலைமை இது சஹாபாக்களின் தியாகத்தின் பிரதிபலன் ஆகும். அதே சமயம் நாம் இன்று பார்க்கும் பத்-தீன் (தீன் அற்ற நிலை) இது நம்முடைய ஙப்லதின் (மறதியின்) பிரதிபலிப்பு ஆகும்.

சஹாபாக்கள் தாவதுடைய வேலை செய்தது தீனை உலகில் பரத்துவதற்காகவே இன்று நாம் தாவத் வேலை செய்வது தீனை நம்மிடம் காப்பாற்றிக் கொள்ளவேயாகும்.
மஸ்ஜிதே நபவியில் 9 வருடங்கள் விளக்கு எரியவில்லை. மஸ்ஜிது இருட்டு. ஆனால் சஹாபாக்கள் தீன் விளக்கம் பெற்ற ஒளி விளக்குகளாக திகழ்ந்தார்கள். அவர்களின் உள்ளங்களில் ஹிதாயத்தின் ஒளி மிளிர்ந்து கொண்டிருந்தது அந்த ஒளியை உலகம் முழுவதும் பரப்பினார்கள்.

இன்று மஸ்ஜிதுகள் மின்சார விளக்கு வெளிச்சத்தால் ஜகஜோதியாக பிரகாசிக்கின்றன. ஆனால் நமது உள்ளங்கள் இருண்டு கிடக்கின்றன. அந்த இருட்டை உலகம் முழுவதும் பரத்துகிறோம்.

சஹாபாக்கள் காலத்தில் மதீனாவில் இருந்த 12 பள்ளிகளிலிருந்து உலகெங்கும் தீன் பரவியது. இன்று உலகில் உள்ள கோடிக்கணக்கான பள்ளிகளிலிருந்து தீன் பரவவில்லை.

சஹாபாக்கள் தொழுகை சப்பில் சிறிது நேரம் நின்று விரிவான ரிஸ்கைப் பெற்றுக் கொண்டார்கள். இன்று நாம் ரேஷன் கியூவில் பலமணி நேரம் நின்றும் ஒரு கிலோ சர்க்கரை இரண்டு லிட்டர் மண்ணெண்ணை பெறுகிறோம். தொழுகை சப்பில் நிற்க தயாரில்லை.

இன்றைய முஸ்லிம்கள் சம்பாதித்து சம்பாதித்து வறியவர்கள் (ஏழைகள்) சஹாபாக்கள் செலவழித்து செலவழித்து செல்வத்தில் பெரியவர்கள்.

நாம் ஆயுள் முழுவதும் மனைவிக்குப் பக்கத்திலேயே இருந்துங்கூட இரண்டு மூன்று குழந்தைகள். அதிலும் இரண்டிற்கு மேல் வேண்டாம். ஒன்றே போதும், நாமே குழந்தை நமக்கேன் குழந்தை என்ற சுலோகங்களைப் பாடுகிறோம். சஹாபாக்கள் ஆயுளின் பெரும்பகுதி ஜிஹாதில் அல்லாஹ்வின் பாதையில் கழித்தார்கள். ஆனால் வீடு நிறைய குழந்தைகளை பெற்றனர்.

இன்றைய முஸ்லிம்கள் காகிதப்புலிகள் மாதிரி இருக்கின்றனர். அந்த காகிதத்தில் புளி கூட கட்டலாம். உண்மை புலி ஊருக்குள் வந்துவிட்டால் ஊரே கதிகலங்கிப் போகும். சஹாபாக்கள் உண்மையான புலிகளைப் போன்றிருந்தார்கள். அவர்களைக் கண்டு பெரிய பெரிய வல்லரசுகளும் நடுங்கின.

அன்று புலியும் ஆடும் ஒரே ஆற்றுநீரை அருகில் நின்றே குடித்தன. ஆட்டைபுலி அடிக்கவில்லை. இன்று ஒரே நாட்டை சேர்ந்த மக்கள் ஒரே ஆற்று நீருக்காக அடித்துக் கொல்கின்றனர். (காவிரி நீர்த்தகராறில் தமிழர்கள் கர்னாடகாவில் அடித்துக் கொல்லப்பட்டனர்)

மதீனாவில் ஒரு ஆட்டுத்தலை ஏழு வீடுகளுக்கு மாறிமாறிச் சென்று, திரும்ப முதல் வீட்டிற்கே வந்துவிட்டது. இக்காலத்தில் முதல் வீட்டிலிருந்தே வெளிப்படுமா என்பது சந்தேகம் !

சஹாபாக்கள் காலத்தில் ஜகாத் வாங்குவோர் யாருமில்லை. தேடி கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இன்று ஜகாத் சரியாக கணக்கிட்டு தருபவர்களை தேடி கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

ஹஜ்ரத்ஜீ மெளலானா யூசுப் சாஹிப் (ரஹ்) கூறினார்கள் : சஹாபாக்கள் நான்கு பைசா சம்பாதிக்க நாலாயிரம் மஸ்அலாக்களை விசாரித்தறிவார்கள். நாங்களோ நாலாயிரம் ரூபாய் சம்பாதிக்க நான்கு மஸ்அலாவைக் கூட விசாரிப்பதில்லை.

சஹாபாக்களின் ஈமான் மலையைப் போன்று உறுதியாக இருந்தது. அதனுடன் மோதிய பெரிய உலக சக்திகள் உடைந்து தூள்தூளாக சிதறின. இன்று நமது ஈமான் சிறியது உதிறியாக உள்ளது. இதனுடன் உலக சக்திகள் வந்து மோதும் போது நம் ஈமான் தூள்தூளாக சிதறிப் போகிறது. அக்காலத்தில் தஸ்பீஹ் ஓதியதால் உள்ளங்கள் பிரகாசமடைந்தன. இக்காலத்தில் தஸ்பீஹ் ஓதப்படுவதால் அந்த தஸ்பீஹ்யே பிரகாசமாகிவிடுகிறது. ஏனெனில் அது ரேடியம் தஸ்பீஹ். உள்ளம் என்னவோ இருண்டே இருக்கிறது.

தாவதுடைய உழைப்பு முழு உம்மத்திலும் நடைபெற்ற அக்காலத்தில் சாந்தி, சமாதானமும், பாசமும், நேசமும் மனிதர்களில் இருந்தன. அது இல்லாத இக்காலத்திலோ குரோதமும், விரோதமும், கலகமும், குழப்பமும், பதட்டமும், பரிதவிப்பும் பரவி மனித குலத்தின் உயிர் பொருளுக்கு எவ்வித பாதுகாப்பில்லாத அவல நிலை குவலயம் (உலகம்) முழுவதும் பரவியுள்ளது. தப்லீக் தஃவதுடைய உழைப்பை கை விட்டதினால் உண்டான நஷ்டம் எத்தகையது என்பதை மேற்கூறிய சில உதாரணங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

(நன்றி நூல் : கஷ்தின் சிறப்பு வெளியீடு : இஸ்லாமிய பதிப்பகம்)

அல்லாஹ்வின் நல்லடியார்களே ! மேற்கூறப்பட்ட ஒப்பீடு நமது உண்மை நிலையை அறிய உதவும் ஓர் அளவுகோல். எப்பொழுது நாம் அல்லாஹ்வின் பொருத்தம் பெற்ற அந்த உத்தம சத்திய சஹாபாக்களின் நிலையை அடைய முயற்சிப்போமோ, அப்பொழுது நம் ஈமானில் வலிமையும், அல்லாஹ்வின் உதவியும் மற்றும் நபி(ஸல்) அவர்களின் சுன்னத்துகளை உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை பின்பற்ற துடிக்கும் ஆர்வமும் நம்மிடையே ஏற்படும்.

அதற்கான முயற்சிதான் இக்கால கட்டத்தில் அல்லாஹ் நமக்கு ஏற்படுத்தி தந்த தப்லீக் தஃவத் உழைப்பாகும். நபிமார்களின் இந்த மேலான உழைப்பை நமது வாழ்க்கையின் ஒரு அங்கமாக ஆக்கிக்கொள்வமேயானால், அல்லாஹ்வின் உதவிகொண்டு இம்மை மறுமையில் வெற்றி பெற்றவர்களாகலாம். ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான் :

"மக்களை நன்மையின் பக்கம் அழைத்து, நல்லதை ஏவித் தீயதை விலக்கும் ஒரு கூட்டம் உங்களில் இருப்பது அவசியம். அவர்கள் தாம் வெற்றி அடைந்தவர்கள்".

(அல்குர்ஆன் 3 :104)


"மனிதர்களில் தோன்றிய சமுதாயத்தினர்களில் நீங்கள்தாம் சிறந்த சமுதாயத்தினர். (ஏனெனில்) நீங்கள் நன்மையை ஏவித் தீமையைத் தடுக்கிறீர்கள். மேலும் அல்லாஹ்வை ஈமான் கொள்கிறீர்கள்".

(அல் குர்ஆன் 3 :110)


மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :

"அல்லாஹூதஆலாவின் பாதையில் எவருடைய முகம் புழுதிபடிந்ததாக ஆகிவிட்டதோ, அவருடைய முகத்தை அல்லாஹூதஆலா கியாமத் நாளில் நிச்சயம் (நரக நெருப்பைவிட்டும்) பாதுகாப்பான். அல்லாஹூதஆலாவின் பாதையில் எவருடைய பாதங்கள் புழுதி படிந்ததாக ஆகிவிட்டதோ, அவருடைய இருபாதங்களையும் அல்லாஹூதஆலா இறுதித் தீர்ப்பு நாளன்று நரக நெருப்பைவிட்டும் (நிச்சயமாகப்) பாதுகாப்பான்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஉமாமா பாஹிலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(நூல் : பைஹகீ)



"அல்லாஹூதஆலாவின் பாதையில் ஒரு நாள் இருப்பது ஏனைய நாட்களில் ஆயிரம் நாட்களை விட மேலானது" என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதைத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் உஸ்மானிப்னு அஃப்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(நூல் : நஸாயி)



எனவே அல்லாஹுடைய பாதையாகிய தஃவத் தப்லீகில் சென்று மேலே கூறப்பட்ட அல்லாஹ் மற்றும் அவனுடைய ரஸூலின் அறிவிப்பிற்க்கு உடையவர்களாக நம் அனைவரையும் அல்லாஹ் ஆக்கித்தந்தருள்வானாக. மேலும் மார்க்கத்தில் தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பும் கூட்டத்தாரில் சேர்க்காமல் அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாத்தருள்வானாக.ஆமீன். என துஆ செய்தவனாக இச்சிறு கட்டுரையை நிறைவு செய்கிறேன். வஆகிற தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன். வஸ்ஸலாம்.

இவன்
முஹம்மது பதுருதீன்.

Thursday 2 August 2007

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

தஸ்பீஹ் மணி பித்அத்தா… ?!


அல்லாஹ்வை திக்ரு செய்யும்பொழுது எண்ணிக்கைக்காக பயன்படுத்தப்படும் தஸ்பீஹ் மணி பித்அத் என்றும், ஏனெனில் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் தஸ்பீஹ் மணியெல்லாம் கிடையாது என காரணம் கூறி நிராகரிக்கின்றனர். இதற்கு ஆதாரமாக இவர்கள் எடுத்துவைக்கும் நபிமொழிகளை முதலில் காண்போம்.

ஹதீஸ் 1 : நபி (ஸல்) அவர்கள் தமது கரத்தால் தஸ்பீஹ் எண்ணுவதை நான் பார்த்திருக்கிறேன். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி). நூல் : திர்மிதீ, நஸயீ.

ஹதீஸ் 2 : உங்கள் விரல்களால் எண்ணுங்கள் ! அந்த விரல்களும் (மறுமையில்) விசாரிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : புஸ்ரா (ரலி) நூல் : திர்மிதீ, அபூதாவூத்.

ஆகிய இந்த ஹதீஸ்களில் எந்த குழப்பமும் இல்லை. குழப்பமெல்லாம் இவர்கள் புரிந்துகொண்டதில்தான். நமது முன்னோர்களாகிய ஸஹாபாக்கள், தாபியீன்கள் மற்றும் தப்அதாபியீன்கள் எவ்வாறு குர்ஆனையும் ஹதீஸ்களையும் புரிந்துகொண்டார்களோ அவ்வாறு புரிந்துகொள்ளாமல், அவரவர் தத்தமது மனோஇச்சையின்படி புரிந்துகொள்ளும்பொழுதுதான் மார்க்கத்தில் பிரச்சினைகள், குழப்பங்கள் மற்றும் பிளவுகள் ஏற்படுகின்றது. உதாரணமாக ஷியாக்கள், காதியானிகள், ளாகிரியாக்கள் மற்றும் பலர். அல்லாஹ் அத்தகைய நிலையிலிருந்து நம் அனைவரையும் பாதுகாப்பானாக. ஆமீன்.

மேற்கண்ட ஹதீஸ்களிண்படி திக்ரை எண்ணுவதற்காகத்தான் நபி (ஸல்) தனது கரத்தை பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதை அறியலாம். ஏனெனில் எந்த ஒரு அமலும் உள்ளத்தோடு சம்பந்தப்பட்டது உடல் அதற்கு ஒத்துழைக்கவேண்டும் அவ்வளவே. உதாரணத்திற்கு நபி(ஸல்) அவர்கள் சிறிய ஷிர்க்கைப்பற்றி எச்சரித்துள்ளார்கள், அதாவது ஒருவர் தொழுவார் அது அல்லாஹ்விற்கின்றி அடுத்தவர் பார்ப்பதற்காக இருக்கும். ஏனெனில் அல்லாஹ் நம்மிடத்தில் பார்ப்பது நமது உள்ளத்தைத்தான், அது எந்த அமலாக இருந்தாலும் சரியே. அதுமட்டுமல்ல தஸ்பீஹ் மணி கொண்டு கை மற்றும் விரல்களால்தான் திக்ருகளை எண்ணுகிறோம் கால்களால் அல்ல என்பதும் இங்கு கவனிக்கப்படவேண்டிய ஒன்று.

மேற்கண்ட ஹதீஸ்களை ஸஹாபா பெருமக்கள் எவ்வாறு புரிந்துகொண்டார்கள் என்பதை பார்ப்பதற்கு முன் பித்அத் என்றால் என்ன ? என்பதை முதலில் அறிவோம்.


பித்அத் என்றால் என்ன ?

குர்ஆன் அல்லது நபி (ஸல்) அவர்களின் சொல், செயல் அல்லது அங்கீகாரம் இல்லாமல் செய்யப்படும் ஒரு அமலைத்தான் (இபாதத்) பித்அத் என்று கூறப்படும். அமல்களுக்கு உதவிபுரியும் பொருட்களெல்லாம் பித்அத் ஆகாது. இவ்வாறு கூறுவதுதான் பித்அத் ஆகும். ஏனெனில் மார்கத்தில் ஒரு விஷயம் கூடும், கூடாது என்று கூற அல்லாஹ் அல்லது ரசூலின் ஆதாரம் வேண்டும். உதாரணமாக கந்தூரி, கூடு போன்றவற்றை பித்அத் என்கிறோம். ஏனெனில் இது ஒரு இபாதத்தாக செய்யப்படுவதால். தஸ்பீஹ் மணி இபாதத் அல்ல அது திக்ர் என்னும் அமலுக்கு துனைபோகும் ஒரு பொருள் அவ்வளவே.

ஸஹாபா பெருமக்களின் புரிதல் :

இதற்குமுன் ஒரு விஷயத்தை தெரிந்துகொள்வது நல்லது. ஒரு ஹதீஸ் அதுவும் பலமான ஹதீஸ்களில் முதல்தரத்தில் உள்ளதே இவர்களின் மனோஇச்சைக்கு ஒத்துவரவில்லையென்றால் குர்ஆனோடு மோதவிட்டு (?!) அதனை தூக்கியெறிய சொல்பவர்கள், அறிவிப்பாளர்கள் வரிசையில் உள்ள ஒருவரை யாராவது ஒரு இமாம், அவர்களின் கோணத்தில் ஆய்வு செய்ததில் ஒரு குறையை சொல்லிவிட்டால் அது இவர்களுக்கு சொல்லவே தேவையில்லை, அல்வா சாப்பிடுவதுபோல். இங்கு கவணிக்கப்படவேண்டிய விஷயம் என்னவென்றால் ஒரு ஹதீஸை, நன்கு ஆய்வு செய்யாமல் மற்றவர்களின் ஆய்வுகளெல்லாம் தவறு ; தான் சொல்வதுதான் சரி என்று, ஹதீஸை பலவீனப்படுத்தி நிராகரித்தால் அது நபி(ஸல்) அவர்களின் சொல்லை நிராகரிக்க வேண்டி வருமே என்ற சிறிதளவு இறையச்சம்கூட இவர்களுக்கு கிடையாது. மற்றவர்களுக்கு பலமானதாக தெரிய இவர்களுக்கு மட்டும் பலவீனமானதாக தெரிந்தது ஆச்சரியமே. மற்ற மார்க்க அறிஞர்கள் ஆய்வு செய்து பலமானதாக சொன்னதால் நாமும் அவ்வாறே எடுத்துக்கொள்வோம்.

ஹதீஸ் : நான் தஸ்பீஹ் செய்வதற்கு நான்காயிரம் பேரீச்சம்
பழக்கொட்டைகளை குவித்து வைத்திருந்தபொழுது என்னிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்பொழுது அவர்கள் நீ செய்து கொண்டிருக்கும் தஸ்பீஹைவிடச் சிறந்ததை நான் உனக்குக் கூறட்டுமா ? என கேட்டார்கள். உடனே எனக்கு கூறுங்கள் என்று நான் கூறினேன். அப்போது நபி(ஸல்)அவர்கள் ஸூப்ஹானல்லாஹி அதத கல்கிஹி என்று கூறு என்றார்கள்.
அறிவிப்பவர் : சஃபியா (ரலி) நூல் : திர்மிதீ


இந்த ஹதீஸின்படி ஸஹாபா பெருமக்கள் புரிந்துகொண்டது, நபி(ஸல்) திக்ருக்கு கரத்தை பயன்படுத்த சொன்னது எண்ணிக்கைக்காகத்தான். இதனை நபி(ஸல்) அவர்களும் தடுக்காமல் அங்கீகரித்தும் உள்ளனர். நாமும் சிந்தித்தால் இது உண்மையாகவேபடும். குறைந்த எண்ணிக்கையில் திக்ர் செய்ய தஸ்பீஹ் மணி தேவையில்லை வெறும் கையினாலேயே செய்யலாம். ஆனால் 1000 அல்லது 2000 என பெரிய எண்ணிக்கையில் திக்ர் செய்யவேண்டுமெனில் வெறும் கையினால் செய்யமுடியாது என்று நம்மை விட பித்அத் என்று கூறுபவர்களுக்கு நன்றாகவே விளங்கும். அவர்கள் தஸ்பீஹ் மணியை தவிர வேறு எதை பயன்படுத்தினாலும் (நோட்புக், பேனா,பென்ஸில்,மெக்கானிக்கள் கெளன்டர்,எலக்ட்ரானிக்ஸ் கெளன்டர்) முதலியவைகள் இவர்களின் விளக்கத்தின்படி பித்அத் ஆகும். அல்லது கைவிரலைக்கொண்டு எண்ணுகின்ற அளவுக்குத்தான் திக்ர் செய்யவேண்டும் என்றும் பொருள்படும். எனவே இவர்கள் புரிந்துகொள்வதை ஒதுக்கிவிட்டு ஸஹாபா பெருமக்கள் புரிந்து கொண்டதை எடுத்துக்கொண்டால் வெற்றி பெறலாம்.

இவர்கள் கூறும் மற்ற கற்பனைகள் :

எப்பொழுதும் அல்லாஹ்வின் நினைவில் இருப்பதாக தம்பட்டம் அடிக்கும் போக்கை இது ஏற்படுத்திவிட்டது.

தம்பட்டம் அடிக்கவைப்பது அவர்களது உள்ளம்தான். வெறும் கை விரல்களால் எண்ணும்பொழுது கூட மற்றவர்கள் பார்க்கும்பொழுது இவர் திக்ர் செய்கிறார் என்று அறியமுடியும். தம்பட்டம் இப்பொழுதுகூட வர வாய்ப்புண்டு. எனவே சரிசெய்யப்படவேண்டியது உள்ளம்தான் தஸ்பீஹ் மணியல்ல.

தஸ்பீஹ் மணியை திக்ரு செய்கிறேன் என்ற பெயரில் கையால் உருட்டிக்கொண்டு மற்றவர்களிடம் பேசிக்கொண்டிருப்பவர்களையும் நாம் காண முடிகிறது.


இதுவும் உள்ளம் சம்பந்தப்பட்டதுதான். உதாரணமாக நபி (ஸல்) கூறினார்கள். தொழும் பொழுது அல்லாஹ்வை நீ பார்க்கின்றாய் அல்லது அல்லாஹ் உன்னை பார்க்கின்றான் என்ற நிலையில் தொழவேண்டும். ஆனால் தொழுகையில் நின்றபின்தான் ஷைத்தான் உலக சிந்தனைகள் அனைத்தையும் உள்ளத்தில் போடுவான். இது ஷைத்தானால் ஏற்படும் கோளாறு, தஸ்பீஹ் மணியால் அல்ல. உள்ளத்தை தூய்மைபடுத்தினால் சரியாகிவிடும்.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் இல்லாத நவீன கண்டுபிடிப்பு அல்லது காப்பியடிப்பு.

இவ்வாறு கூறுபவர்கள் மற்ற அமல்களில் கடைப்பிடிக்கிறார்களா ? என்றால் இல்லை. உதாரணமாக தொழுகையின் நேரத்தை அறிய நபி (ஸல்) காட்டித்தந்த முறையை பார்ப்போம்.

ஹதீஸ் : ளுஹரின் நேரம் சூரியன் உச்சியிலிருந்து சரிந்ததுமுதல் ஒரு மனிதரின் நிழல் (சரியாக) அவர் உயரத்தைப் (போன்று) ஆகின் (நேரம்) வரையிலாகும். மேலும் அஸர் நேரம் வராதவரையிலாகும். அஸரின் நேரம் சூரியன் மஞ்சள் மாறாதவரையிலாகும். மஹ்ரிப் தொழுகையின் நேரம் செம்மேகம் மறையாத வரையிலாகும். ஃபஜ்ரு தொழுகையின் நேரம், ஃபஜ்ரு உதயமானதிலிருந்து சூரியன் உதிக்காத வரையிலாகும். சூரியன் உதயமாகிவிட்டால் தொழுவதை நிருத்திக்கொள் ஏனெனில் அது நிச்சயமாக ஷைத்தானின் இரண்டு கொம்புகளுக்கு மத்தியில் உதயமாகின்றது. என அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ, பின் அம்ரு ரலியல்லாஹூ அன்ஹூமா. நூல் : முஸ்லிம்.

மேற்கண்ட ஹதீஸிற்கு மாற்றமாக இப்பொழுது தொழுகையின் நேரத்தை அறிய கடிகாரம் பயன்படுத்தப்படுகிறது. இது நபி (ஸல்) காலத்தில் இல்லாத நவீன கண்டுபிடிப்பு அல்லது காப்பியடிப்பு. அதைப்போல் ஜகாத் கணக்கிட கால்குலேட்டர், ஹஜ்ஜுக்கு செல்ல விமானம் மற்றும் பேருந்து இவைகளையெல்லாம் அந்தந்த அமலுக்கு உதவும்பொருள்தான் என விளங்கியவர்களுக்கு தஸ்பீஹ் மணி மட்டும் பித்அத் ஆக விளங்கியது ஆச்சரியமே.

எனவே தஸ்பீஹ் மணி திக்ர் என்னும் அமலுக்கு உதவும் ஒரு பொருள்தான் என்பதை அறியலாம். மேலும் இதனால் ஏற்படும் நன்மைகளை பார்ப்போம்.

1. தஸ்பீஹ் மணி கொண்டு திக்ர் செய்வதால் எண்ணிக்கையை பற்றி கவலைப்படாமல் உள்ளம் அல்லாஹ்வோடு ஒன்றிவிடுகிறது.

2. தஸ்பீஹ் மணி கையில் வைத்திருப்பதால், திக்ர் செய்ய மறந்துவிட்டாலும் மீண்டும் திக்ர் செய்ய தூண்டும் பொருளாக உதவுகிறது.

எனவே தஸ்பீஹ் மணி கொண்டு திக்ர் செய்வதால் பித்அத் அல்ல என்பதை விளங்களாம். ஆனால் அதேசமயம் தஸ்பீஹ் மணி கொண்டு மட்டும்தான் திக்ர் செய்யவேண்டும் என்ற கட்டாயமில்லை. ஆனால் பித்அத் அல்ல என கூறியவனாய் இச்சிறு கட்டுரையை நிறைவு செய்கிறேன். அல்லாஹ்தான் எல்லாவற்றையும் நன்கு அறிந்தவன். வஸ்ஸலாம்.

இவன்
முஹம்மது பதுருதீன்.

Sunday 8 July 2007

சுதர்ஸனுக்கு பதில் கடிதம்

இஸ்லாம் அறிவுப்பூர்வமான மார்க்கம் எனில்.....

அனைவருக்கும் வணக்கம்.

நான் மதங்களுக்கு அப்பாற்பட்டவன். மதங்கள் அனைத்துமே ஏதோ ஒரு வகையில் மக்களிடையே பகைமையையும், மூட நம்பிக்கைகளையும் வளர்க்கின்றன என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவன்.

இஸ்லாம் மதத்தை வளர்க்க பி.ஜெய்னுலாபிதீன் என்ற இஸ்லாமிய பெரியவர் நடத்தும் அனைத்து நிகழ்ச்சிகளையும் நான் தவறாமல் பார்ப்பேன்.

சமீபத்தில் அவர் நடத்திய முக்காபுலா என்ற சாபம் இடும் நிகழ்ச்சியை பார்த்தேன். அதில் எழுந்த சந்தேகமே இக்கேள்வி.

கிறிஸ்த்தவத்தில் ஆதி மனிதன் செய்த பாவம் எல்லா மனிதர்கள் மீதும் தொடர்ந்து இருந்து வந்ததை தன் இரத்தத்தால் களையவே இயேசு சிலுவையில் உயிர் நீத்தார் என்ற கிறிஸ்த்தவ சித்தாந்தத்தை, "ஒருவர் பாவத்தை இன்னொருவர் சுமக்க இயலாது" என அறிவுக்கு இணங்கும் வகையில் அது தா நியாயமும் என இதே பி. ஜெயினுலாபித்தீன் பெரியவர் அறிவுப்பூர்வமாக வாதிட்டுள்ளது எனக்கு தெரியும்.

அவ்வாறிருக்க, இஸ்லாம் அறிவுப்பூர்வமான மார்க்கம் எனில், ஆண்கள் தங்களுக்குள் உள்ள பிரச்சனைகளை நியாயப்படுத்த தங்களின் மனைவி மற்றும் ஒன்றும் அறியா பச்சிளம் குழந்தைகளின் மீது கடவுளின் சாபம் உண்டாகட்டுமாக என சாபமிடுவது எந்த வகையில் அறிவுக்கு பொருத்தமாக இருக்கிறது என விளக்க இயலுமா?

இவ்வாறு சாபம் கோர இஸ்லாம் தான் வழிகாட்டுகிறது எனில், இஸ்லாம் எந்த வகையில் அறிவுப்பூர்வமான மார்க்கமாகிறது என்பதையும் சற்று விளக்குங்களேன்.

நன்றி.

சுதர்ஸன்

அன்பு சகோதரர் சுதர்ஸனுக்கு !

பி.ஜெய்னுலாபிதீன் நடத்திய முபாஹலா நிகழ்ச்சியினால் தங்களுக்கு இஸ்லாம் அறிவுப்பூர்வமான மார்க்கம்தானா ? என சந்தேகம் ஏற்பட்டுள்ளது, இதற்கு காரணம் இயேசு சிலுவையில் அறைந்ததையும் பி.ஜெ, நடத்திய முபாஹலா நிகழ்ச்சியையும் ஒன்றாக்கி பார்த்ததால்தான்.

முதலில் இரண்டுக்குமுள்ள வேறுபாட்டை கவனிப்போம். கிறிஸ்த்துவத்தில் சொல்வதுபோல் இயேசு பிறப்பதற்க்கு முன்னுல்ளோர் பாவங்களையும், அவர் வாழ்ந்த மற்றும் மறைந்தபின் உலகம் அழியும்வரை உள்ளவர்களின் பாவங்களையும் சேர்த்து களையவே சிலுவையில் உயிர் நீத்தார் என்று கூறுவது அறிவிற்க்கு அப்பாற்பட்டது என்றும், அவரவர் செய்த பாவத்திற்க்குத்தான் அவரவர் பொறுப்பு என்ற இஸ்லாமிய கொள்கைதான் அறிவுப்பூர்வமானது என்றும் தாங்கள் தெளிவாக அறிந்திருப்பீர்கள்.

ஆனால் p.j.யின் முபாஹலா நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்டவர்களைத்தவிர அவரவர்களின் மனைவி மக்களும் சேர்க்கப்படுவதால்தான் தங்களுக்கு இது அறிவுப்பூர்வமானதுதானா ? என சந்தேகப்பட வைக்கிறது. ஆனால் இந்த முபாஹலா அல்லாஹ் கூறும் அறிவுப்பூர்வமான எச்சரிக்கைவலை என்பதை இங்கு காண்போம்.

அல்லாஹ் திருக்குர்ஆனில் :

உமக்கு விளக்கம் வந்த பின் இது குறித்து உம்மிடம் யாரேனும் விதண்டாவாதம் செய்தால் " வாருங்கள் ! எங்கள் பிள்ளைகளையும், உங்கள் பிள்ளைகளையும், எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும் அழைப்போம், நாங்களும் வருகிறோம், நீங்களும் வாருங்கள் ! பின்னர் இறைவனிடம் இறைஞ்சி பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபத்தைக் கேட்போம் " எனக் கூறுவீராக !

அல்குர்ஆன் 3 :61
என்று கூறுகிறான்.

ஏனெனில் ஒருவர் பொய் அல்லது உண்மை சொன்னாரா என்பதை அல்லாஹ் அறிகிறான் முபாஹலா மூலம்தான் அல்லாஹ் அறியவேண்டும் என்றில்லை. ஆனால் ஒரு சமுதாயம் யார் சொல்வது உண்மையென்று அறியவேண்டுமெனில் சம்பந்தப்பட்டவர்கள் எந்தவிதமான வார்த்தைஜாலங்கள், விதன்டாவாதங்கள், பொய்கள் மற்றும் அவதூறுகள் முதலியவைகளை கூறி தப்பித்துவிடமுடியாத ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தினால்தான் உண்மையை அவர்களிடமிருந்து வெளிக்கொணர முடியும் என்பதால், அவரவர் தத்தமது மனைவிமக்களோடு வந்து இறைவனின் சாபத்தை வேண்ட சொல்கிறான்.

இங்கு மனைவி மக்களுக்கும் சேர்த்து சாபத்தை வேண்ட சொல்வது சம்பந்தமில்லாதவர்களும் தண்டிக்கப்படவேண்டும் என்பதற்கல்ல, சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்கவேண்டும் என்பதற்காகத்தான். இரு தரப்பாரில் யாரோ ஒரு தரப்பினர் முஸ்லிம் சமுதாயத்தை ஏமாற்ற நினைக்கிறார்கள், அது யார் ? என்று பொதுமக்கள் அறியார், அதையறியத்தான் இறைவன் வைக்கும் CHECK இந்த முபாஹலா. ஏனெனில் கொடூரமான விலங்குகளுக்கும் அல்லாஹ் அதன் குட்டிகளின்மீது பாசத்தை வைத்துள்ளான், தனது குட்டிகளுக்கு ஏதும் ஆபத்தென்றால் தனது உயிரையும் கொடுத்து தனது குட்டிகளை காப்பாற்றும், ஆறரிவு படைத்த மனிதனுக்கு மனைவி மக்களின் மீது கொடூரமான விலங்குகளை விட அதிகளவு பாசம் இருக்கும், இருக்கவேண்டும்.

கண்டிப்பாக இருவரில் ஒருவர் பொய் சொல்கிறார் என்பது உண்மை, அந்த பொய்யர் இதையும் மீறி தன் மனைவி மக்களுடன் வந்து தன்னையும் தன் குடும்பத்தையும் அல்லாஹ்வின் சாபத்தில் போடுவாரேயானால் நிச்சயமாக அவர் கொடூரமான விலங்கைவிட மோசமானவர், மேலும் பொய்சொல்பவரின் இறைநம்பிக்கையும் பலவீனமாகத்தான் இருக்கும், ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் : பொய், நெருப்பு விறகை தின்பதுபோல், அது இறைநம்பிக்கையை தின்றுவிடும். என்று கூறினார்கள்.

எனவே உண்மை சொன்னவருக்கு இந்த முபாஹலாவினால் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் யார் அல்லாஹ்வின் சாப எச்சரிக்கையையும் மீறி பொய் சொல்லி தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் அல்லாஹ்வின் சாபத்தை விரும்பி வேண்டிக்கொண்டாரோ அதற்கு சம்பந்தப்பட்டவர்தான் முழு பொருப்பு ஏற்கவேண்டும், அவர் தண்டிக்கப்பட வேண்டியவரே. ஏனெனில் அவர் விரும்பியபடி இறைவனின் சாபம் அவர் மீது வரும்பொழுதுது, சமுதாயம் அவரை அடையாளம் கண்டு அவரின் குழப்பத்திலிருந்து தப்பிக்க உதவும், மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் : குழப்பம் கொலையை விட பெரியது என கூறியுள்ளர்கள். நோயை உண்டு பன்னும் கிருமியை அழித்தால்தான் மனிதன் உயிரோடும் ஆரோக்கியத்தோடும் வாழ முடியும். எனவே இஸ்லாம் யாரையும் அநியாயமாக தண்டிப்பதில்லை, அவரவர்கள் தங்கள் கைகளாலேயே அழிவை தேடிக்கொள்கிறார்கள். இதற்கு யார் பொருப்பு ?

எனக்கு அல்லாஹ் புரியவைத்தபடி தங்களுக்கு விளக்கியுள்ளேன். அல்லாஹ்தான் எல்லாவற்றையும் நன்கு அறிந்தவன். வஸ்ஸலாம்.

இவன்.
முஹம்மது பதுருதீன்

Thursday 5 July 2007

ஹயாத்துஸ் ஸஹாபா

பயணத்தின்போது அமீர் நியமிப்பது :

உமர் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் கூறுகிறார்கள். மூன்று நபர்கள் பயணம் செய்தால் அவர்களில் ஒருவர் அமீராகி கொள்ளட்டும். இவ்வாறு அமீர் நியமனம் செய்து கொள்ளும்படி நபியவர்கள் ஏவியுள்ளார்கள்.

நூல் : பஜ்ஜார் ஹ.ச-70-2



கருத்து வேற்றுமை கொள்ளுவதை எச்சரித்து இப்னு மஸ்வூது ரலியல்லாஹூ அன்ஹூ செய்த குத்பா :

இப்னு மஸ்வூது ரலியல்லாஹூ அன்ஹூ கூறினார்கள் ஓ ஜனங்களே ! கட்டுப்பட்டு நடக்குமாறும் ஒன்றுபட்டு வாழும்படியும் உங்களை நான் ஏவுகிறேன். ஏனெனில் அது அல்லாஹ் ஏவிய ஒப்பந்தமாகும். மேலும் ஒன்று சேர்ந்து ஜமாத்தாக இருப்பதனால் ஏற்படும் உங்களுக்கு வெறுப்பான நிலை, பிரிந்து வாழ்வதில் உங்களுக்குள்ள பிரியமான நிலையை விட சிறந்ததாகும். அல்லாஹ் எல்லா பொருளுக்கும் ஒரு முடிவை வைத்தே படைத்துள்ளான். ஒரு நாள் அப்பொருள் அதன் எல்லையை அடைந்து முடிவடைந்து போகும், மேலும் இது இஸ்லாம் வளர்ச்சியடைந்து உறுதி பெறும் காலமாக உள்ளது, அதுவும் தன் எல்லையை சென்றடைய நெருங்கி விட்டது, பின்பு கியாமத் நாள் வரை இஸ்லாம் வளர்ந்து கொண்டும் குறைந்து கொண்டும் இருக்கும்.

அதன் அடையாளம் ஏழ்மை வருவதாகும், ஒரு ஏழை தனக்கு உதவி செய்யும் யாரையும் பெற்றுக் கொள்ள மாட்டான், ஒரு செல்வந்தன் தன்னிடமுள்ளவைகளைத் தனக்கு போதுமானதில்லை என்றே கருதுவான், இன்னும் அச்சமயம் ஒரு ஏழை தன் சகோதரனிடமும், சிறிய தந்தை மகனிடமும் தன் தேவைகளை முறையிடுவான். அவன் எப்பொருளையும் கொடுத்து உதவ மாட்டான். இன்னும் எந்தளவு ஏழ்மை என்றால் ஒரு ஏழை பெருந்திரளாக கூடியுள்ள இரு கூட்டத்தினர் மத்தியில் தன் தேவைகளைக் கேட்டவனாக நடந்து செல்வான். அவன் கையில் ஒரு பொருளும் வைக்கப்படாது (அதாவது யாரும் அவனுக்கு உதவி செய்திருக்க மாட்டார்கள்) இந்தளவு கடுமையான ஏழ்மை வரும்,

ஆக பூமி முழுவதும் ஏழ்மை, ஏழ்மை என்ற சப்தமாகவே இருக்கும், பூமியின் எல்லா பகுதியினரும் தங்கள் பகுதியில் ஏழ்மையை முறையிடுபவர்களாகவேக் காணப்படுவார்கள், பின்பு அல்லாஹ் நாடியபடி சில காலங்களுக்கு பின் பூமியில் (இந்த நிலை மாறி) அமைதி ஏற்படும் அதன் பின் பூமி பசுமை பெற்று செழிப்படைந்து தன் ஈரல் துண்டுகளை வெளிப்படுத்தும், அபூ அப்துர் ரஹ்மானே பூமி தன் ஈரல் துண்டுகளை வெளிப்படுத்துவது என்றால் என்ன ? என்று கேட்கப்பட்டதும், தங்கம் வெள்ளியின் தூண்கள் (வெளியேற்றப்படும்) என்று கூறினார்கள், அன்றைய நாளிலிருந்து கியாமத் வரை தங்கம் வெள்ளியால் எவ்வித பலனும் பெறப்படாது என்றும் கூறினார்கள்.

நூல் : தபரானீ

Sunday 24 June 2007

Tamil

've;j Mj;khTk; ve;j Mj;khTf;Fk; vjidAk; nra;J tpl Kbahj ve;j Mj;khtplkpUe;Jk; ve;jg; gupe;JiuAk; Vw;Wf; nfhs;sg;glhj cjtpAk; nra;ag;glhj xU ehis ePq;fs; mQ;rpf; nfhs;Sq;fs;."

(my;Fu;Md; 2:48)

my;yh`;tpd; J}jh; K`k;kJ egp (]y;) mth;fs; $wpajhf cf;gh ,g;D Mkph;(uop) mth;fs; mwptpf;fpd;whh;fs;.


'kiy cr;rpapy; epd;W> njhOiff;F miog;Gf; nfhLj;J gpd;G njhOfpd;w ,ilaid (ML Nka;g;gtid)f; fz;L my;yh`; kfpo;r;rp milfpwhd;." mg;NghJ my;yh`; $Wfpwhd;: 'vd;Dila ,e;j mbahid ghUq;fs;. mtd; njhOiff;F miog;Gf; nfhLj;J tpl;L> njhOfpwhd;. mtd; vd;idg; gw;wp kpf mr;rczh;T nfhz;ltdhf tpsq;Ffpwhd;. vd;Dila (,e;j) mbahdpd; ghtq;fis ehd; kd;dpj;J> mtid Rth;fj;jpDs; Eioar; nra;Jtpl;Nld;."
E}y;: e]aP> m`;kj;> mG+jhTj;.

Saturday 23 June 2007