Sunday 26 October 2008

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹிம்.

அருள்மறையின் அற்புதங்கள்


சந்திரன் இரண்டாக பிளந்ததை ஒப்புக்கொள்ளும் இன்றைய விஞ்ஞானம்.

அல்லாஹ்வும் அவனது ரசூலும் கூறிய விஷயங்களை இன்றைய விஞ்ஞானம் உண்மைபடுத்தி வருகிறது. முஸ்லிம்களென்றால் அல்லாஹ்வும் அவனது ரசூலும் கூறியவைகளை நூறு சதம் உண்மை என நூறு சதம் ஈமான் கொள்பவர்தான். அவ்வாறு ஈமான் கொண்ட விஷயங்களை அல்லாஹ் அவர் கண் முன்னால் காட்டும்பொழுது, அது அவரது ஈமானின் வளர்ச்சிக்கும், இறைநேசத்திற்கும் வித்திடும்.

அல்லாஹ் சுபுஹானுவத்தஆலா இக்கால கட்டத்தில் இஸ்லாத்தின் உண்மையை முஸ்லிம்களை கொண்டு வெளிப்படுத்தவில்லை. மாறாக பெரும்பாலானவைகள் முஸ்லிம் அல்லாதவர்களை கொண்டுதான் வெளிப்படுத்துகிறான். இதில் அல்லாஹ்வின் பேராற்றலும், ஹிக்மத்தும் நிறைந்துள்ளது.

அல்லாஹ் நபி மூஸா (அலை) அவர்களை, முஸ்லிம் சாம்ராஜ்யத்தில், உயர்ந்த கோட்டை கொத்தளங்களில் வைத்து ஃபிர்அவ்னிடமிருந்து பாதுகாக்கவில்லை. மாறாக எந்த ஃபிர்அவ்ன் நபி மூஸா (அலை) அவர்களை அழிக்க நினைத்து, ஆணும் பெண்ணும் சேர தடைவிதித்து, பிறக்கும் ஆண் குழந்தைகள் அனைத்தும் கொல்லப்பட்டு, சல்லடை போட்டு தேடிய அதே ஃபிர்அவ்னின் மாளிகையில் அவனது கண்முன்னால் அவனது பராமரிப்பிலேயே பாதுகாக்கப்பட்டார்கள். அதுபோல் அல்லாஹ்வின் மார்க்கத்தை அழிக்க நினைக்கும், கலங்கம் கற்பிக்க விரும்புபவர்களின் மூலமாகவே அல்லாஹ்வும் ரசூலும் சொன்னவைகள் உண்மையே என்பதை வெளிப்படுத்தி தனது மார்க்கத்தை உயர்ந்தோங்கச் செய்வது அல்லாஹ்வின் வல்லமையாகும். மேலும் சம்பந்தப்பட்டவர்கள் இம்மார்க்கத்தின் உன்மையை உணர்ந்து ஹிதாயத் பெருவது அல்லாஹ்வின் ஹிக்மத்தும் ஆகும்.

அதனடிப்படையில் வருவதுதான் அல்லாஹ் குர்ஆனில் கூறியதும், நபி(ஸல்) அவர்கள் தனது வாழ்நாளில் செய்து காட்டிய அற்புதமுமாகிய சந்திரன் இரண்டாக பிளந்த சம்பவம்.

மறுமை நெருங்கிவிட்டது (அதற்கு அத்தாட்சியாக) சந்திரனும் பிளந்து விட்டது. எனினும், அவர்கள் எந்த அத்தாட்சியைக் கண்ட போதிலும் (அதனைப்) புறக்கணித்து, "இது சகஜமான சூனியந்தான்" என்று கூறுகின்றனர்.
(அல்குர்ஆன் 54 :1,2)



அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நபி (ஸல்) அவர்களிடம் (அவர்கள் இறைத்தூதர் தாம் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில்) தங்களுக்கு ஒரு சான்றைக் காட்டும்படி மக்காவாசிகள் கேட்டுக் கொண்டார்கள். அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் சந்திரனை இரண்டு துன்டுகளாக (பிளந்திருக்கக்) காட்டினார்கள். எந்த அளவிற்கென்றால், மக்காவாசிகள் அவ்விரு துண்டுகளுக்கிடையே ‘ஹிரா’ மலையைக் கண்டார்கள்.

(நூல் : புகாரி)

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நபி(ஸல்) அவர்களின் காலத்தில் சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளந்தது. (பிளவுண்ட சந்திரனின்) ஒரு துண்டு மலைக்கு மேலேயும் மற்றொரு துண்டு மலைக்குக் கீழேயும் சென்றது. அப்போது நபி(ஸல்) அவர்கள் நீங்கள் சாட்சியாக இருங்கள். என்று கூறினார்கள்.

(நூல் : புகாரி)

நபி (ஸல்) அவர்கள் நிகழ்த்தாட்டிய இவ் அற்புதத்தை அக்கால கட்டத்தில் வாழ்ந்த இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சக்கரவர்த்தி "ஃபர்மாஸ்" இதனைக் கண்டுள்ளார். இது சம்பந்தப்பட்ட முழு ஆதாரங்கள் லண்டன் மாநகரிலுள்ள இந்திய நூலகத்தில், பழங்கால கையால் எழுதப்பட்ட பிரதிகளில் காணப்படுகிறது. அதன் குறிப்பு எண் (Ref.No : Arabic, 2807,152-173.) இதனை M. ஹமீதுல்லா எழுதிய "முஹம்மது ரசூலுல்லாஹ்" என்ற ஆங்கில நூலில் குறிப்பிட்டுள்ளார்.

நபியின் இவ் அற்புதத்தை மலபாரில் கண்ட சக்கரவர்த்தி "ஃபர்மாஸ்", மறுநாள் தனது அரசவையில் இதுபற்றி விசாரித்ததில், அவையிலுள்ள அரசு வானசாஸ்திரிகள், "இது அரபு நாட்டில் கடவுளின் தூதர் ஒருவர் வந்துள்ளார் என்பதை அறிவிக்கும் முன்னறிவிப்பு" என அவருக்கு சொல்லப்பட்டது. அத்துடன் தனது மகனை தனது சார்பாக அரியணையில் ஏற்றிவிட்டு, நபி(ஸல்) அவர்களை சந்தித்து அவர்களின் திருக்கரம் பிடித்து இஸ்லாத்தை தழுவ நாடி புறப்பட்டார். நபியை சந்தித்து இஸ்லாத்தை தழுவிய பின் வரும் வழியில் எமன் நாட்டிலுள்ள "ஜஃபர்" என்ற துறைமுக நகரில் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வின்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் அடக்கஸ்தலம் இன்னமும் எமன் நாட்டில் உள்ளது.

உண்மைபடுத்தும் விஞ்ஞானம்


அல்லாஹ்வும் ரசூலும் கூறிய மேற்கண்ட விஷயங்களை இன்றைய விஞ்ஞானம் உண்மைபடுத்தியுள்ளது.

கீழ்கானும் புகைப்படம் அமெரிக்காவின் வின்வெளி ஆய்வு நிருவனம் நாஸா (NASA) 1969-ம் வருடம் அனுப்பிய அப்போலோ-10 மற்றும் அப்போலோ-11 ஆகிய இரு செயற்கைகோல்கள் மூலம் எடுக்கப்பட்டது. படத்தில் காணப்படும் இக்கோடு சந்திரனை முழுவதுமாக சுற்றியுள்ளது. படத்தை பெரிதாக்கிப் பார்க்க அதன் மேல் இரண்டு முறை கிளிக் செய்யவும்.













சந்திரனில் காணப்படும் இக்கோடு சந்திரனை முழுவதும் சுற்றியுள்ளது. இக்கோடு ஒரு காலத்தில் சந்திரன் இரண்டாக பிளந்து பின்பு ஒன்றாக ஒட்ட வைக்கப்பட்டதை ஒற்றதாக உள்ளது. அதாவது ஒரு பொருள் இரண்டாக உடைந்த பின் அதனை ஒட்டுவதற்கு பற்ற வைத்து சீல் வைத்தது போல் உள்ளது.

இங்கிலாந்து நாட்டின் பிரிட்டிஷ் முஸ்லிம் கட்சியின் தலைவர் டேவிட் மூஸா பிட்குக் (David Moosa Pidcook) கூறுகிறார் : இப்புகைப்படக் காட்சி பிபிசி தொலைக்காட்சியில் மூன்று நாஸா விஞ்ஞானிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் காட்டப்பட்டது.

கலந்துரையாடல், நிலவுக்கு மனிதனை அனுப்ப அமெரிக்கா செய்திட்ட செலவினம் பற்றியது. இத்திட்டத்திற்காக சுமார் $100 பில்லியன் டாலர்களை அமெரிக்கா செலவு செய்துள்ளது. மேலும் இவ்வாராய்ச்சியின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட சந்திரனை சுற்றிலும் காணப்படும் இக்கோடு ஒரு காலகட்டத்தில் நிலவு இரண்டாக பிளந்து பின்பு ஒட்ட வைக்கப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்கிறது என அவ் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இதனையே அல்லாஹ் சுபுஹானுவத்தஆலா 1400 வருடங்களுக்கு முன்பே தனது அருள்மறையாம் திருமறையில் :

மறுமை நெருங்கிவிட்டது. (அதற்கு அத்தாட்சியாக) சந்திரனும் பிளந்து விட்டது.

(அல் குர்ஆன் 54 :1)


எனக் கூறியுள்ளான். அல்லாஹ்வும் அவனது ரசூலும் சொன்ன விஷயங்கள் விசுவாசம் கொள்ளாதவர்களின் மூலம் உண்மைபடுத்தி வெளிக்கொணர்வதன் மூலம், விசுவாசம் கொள்ளாதவர்களுக்கு ஹிதாயத்தையும், விசுவாசம் கொண்ட முஸ்லிம்களின் ஈமானை புதுப்பிக்கும் தூன்டுகோளாகவும் ஆக்கி அருளும் அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.

அலிஃப் ; லாம் ; மீம். (அல்லாஹூத்த ஆலா, ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலமாக, நபி முஹம்மது முஸ்தபா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அருட்செய்த திருக்குர்ஆனாகிய) இது வேத நூல். இதில் சந்தேகமேயில்லை.
(அல்குர்ஆன் 2 :1,2)


அஷ்ஹது அன்லாயிலாஹா இல்லல்லாஹ்
வஅஷ்ஹது அன்ன முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்.


ஸல்லல்லாஹூ அலா முஹம்மத். ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்.


இவன்
முஹம்மது பதுருதீன்.