بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
வெளிச்சத்திற்கு வந்த உண்மை !
வியாழன், அக்டோபர் 25, 2007 அன்று விடாது கருப்பு இணையத்தில் சுபுஹான மெளலிதில் தவறில்லை ! பி.ஜைனுலாபிதீன் தலைமையிலான (ததஜ) அணி பகிரங்கமாக ஏற்றுக்கொண்டது ! களியக்காவிளை விவாதத்தின்போது ! என்ற ஒரு கட்டுரையை பதிப்பித்தேன் (பார்க்க இங்கு கிளிக் செய்யவும்) அதற்கு பல சகோதரர்கள் கருத்தும் பதிவு செய்திருக்கிறார்கள். சகோதரர் கா.அ.முஹம்மது பஸ்லுல் இலாஹி என்பவருக்கும் மெயில் அனுப்பியிருந்தேன். அதற்கு கா.அ. பஸ்லுல் இலாஹி எனக்கு பல ஸலாம்கள் சொல்லி பதில் மெயில் அனுப்பி, அதை அவருடைய பிளாக்கிலும் பதிவு செய்திருக்கிறார். என்னுடைய கட்டுரையை பதிவு செய்தால் உண்மை விளங்கிவிடும் என்று அஞ்சி அவருடைய பதிலை மட்டும் பதிவு செய்திருக்கிறார் (பார்க்க இங்கு கிளிக் செய்யவும்). ஆனால் நான் திரும்ப மெயில் அனுப்பவில்லை.பஸ்லுல் இலாஹி எனக்கு அனுப்பிய மெயிலிலிருந்து சில வரிகள் :−
(ரகசிய கூலி பதில் சொல்லவில்லை என்பதனால் மவ்லிது ஓதுவது மார்க்கமாக ஆகி விடாது. இது மாதிரிதான் சேக் அப்துல்லா ஜமாலியிடம் பி.ஜெ. ரகசிய கூலி வாங்கி இருப்பார். அதனால்தான் வாங்கிய ரகசிய காசுக்காக வாய் மூடி இருந்திருப்பார். எங்களிடம் ரகசியமாக சம்பளம் பேசி தவ்ஹீது பிரச்சார வேலைக்கு வந்த வேலைக்காரர்தான் பி.ஜெ. (கா.அ.பஸ்லுல் இலாஹியின் முழு வாக்குமூலம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்) எனவே ரகசிய கூலி பி.ஜெ. பதில் சொல்லவில்லை என்பதைப் பற்றி ஆச்சரியப்படவில்லை. ரகசிய கூலி பதில் சொல்லவில்லை என்பதனால் மவ்லிது ஓதுவது மார்ர்கமாக ஆகி விடாது.) இதுபோல அனுப்பியிருந்தார்.
அவர்கள் எனக்கு சொன்ன அனைத்து ஸலாம்களுக்கும் பதில் சொல்லிக்கொண்டேன்.
33 தடவை திரும்பத் திரும்ப ஸலாம் சொல்லப்படுகிறது. எனவே இது முதல் தவறு என்று பஸ்லுல் இலாஹி சொல்ல வருகிறார். புரிந்துதான் சொன்னாரா என்பது எனக்கு தெரியவில்லை.ஆனால், யார் ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து சொல்வார்களோ அவர்கள் மீது 10 முறை அல்லாஹ் ஸலவாத்து சொல்வதாக வருகிறது.
அப்படியானால், அஸ்தஃபிருல்லாஹ், அல்லாஹ் பைத்தியக்காரனா ? இந்த ஸலாம் பைத்தில் இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு 33 தடவை திரும்பத் திரும்ப ஸலாம் சொல்லப்படுகிறது. எனவே இது முதல் தவறு என்று பஸ்லுல் இலாஹி சொல்ல வருகிறாரே.
அப்படியானால், அல்ஹம்துலில்லாஹ் என்று 33 தடவை சொல்கிறோம் எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே என்று 1 தடவை சொன்னால் போதாது ! அதில் என்ன சந்தேகம் நமக்கு வந்தது ! திரும்ப திரும்ப ஏன் சொல்ல வேண்டும். அது போல அல்லாஹூ அக்பர், சுபுஹானல்லாஹ் இன்னும் இது போல உள்ள வாசகங்களை திரும்ப திரும்ப ஏன் சொல்ல வேண்டும் ? இதையெல்லாம் பைத்தியக்காரத்தனம் என்றா சொல்ல முடியும் ? லாயிலாஹா இல்லல்லாஹூ என்று சொன்னால் மட்டும் போதாது, (இதை சொல்லித்தந்தவரையும் ஏற்கிறேன் என்று) முஹம்மதுர்ரஸூலுல்லாஹ் என்பதையும் சேர்த்து சொல்வதுதான் கலிமத்து தவ்ஹீதாகும். எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எத்தனை தடவை ஸலாம் சொல்கிறோமோ அவைகளெல்லாம் நமக்கு 10 மடங்காக அல்லாஹ்வால் சொல்லப்படுகிறது என்பதை அறிய வேண்டும். இப்போது நம்முடைய செய்தி இதுவல்ல.
இந்த மெயிலில் வெளிச்சத்திற்கு வந்த உண்மைதான் இப்போது ஆராயவேண்டியவை.
எங்களிடம் ரகசியமாக சம்பளம் பேசி தவ்ஹீது பிரச்சார வேலைக்கு வந்த வேலைக்காரர்தான் பி.ஜெ. (முழு வாக்குமூலம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்) எனவே ரகசிய கூலி பி.ஜெ. பதில் சொல்லவில்லை என்பதைப் பற்றி ஆச்சரியப்படவில்லை என்று பஸ்லுல் இலாஹி சொல்கிறார்.
ஜாக் ஜமாஅத்தும் தவ்ஹீது ஜமாஅத்தும் பித்தலாட்டம், நயவஞ்சகம், போக்கிரித்தனம் மற்றும் பொருக்கித்தனம் மிகுந்த ஜமாஅத் என்பதை அவருடைய மெயிலைப்பார்த்த பின்புதான் தெரிந்துகொண்டேன். ஜாக் ஜமாஅத்தில் பி.ஜெ. இருக்கும்போதுதான் சுன்னத் ஜமாஅத் அறிஞர்கள் சம்பளம் பேசுகிறார்கள், இஸ்லாமியப்பணி செய்வதற்கு காசு வாங்குகிறார்கள் என்று கூட்டாக பிரச்சாரம் செய்த இந்த கூட்டம், அதைக்கொண்டு யோக்கியவான்கள் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட இந்த கூட்டத்தின் மோசடித்தனம் என்ன தெரியுமா ? சுன்னத் ஜமாஅத் அறிஞர்கள் சம்பளம் பேசுகிறார்கள் என்று வீர வசனம் பேசிய இந்த கபோதிகளின் அயோக்கியத்தனம் என்ன தெரியுமா ? இஸ்லாமியப்பணி செய்வதற்கு காசு வாங்குகிறார்கள் என்று கூட்டாக பிரச்சாரம் செய்த இந்த கூட்டத்தின் பின்பக்க செயல், பொம்பலைத்தனம் என்னவென்று தெரியுமா ?
ததஜ மற்றும் ஜாக் ஜமாஅத்தும் சம்பளம் பேசி இஸ்லாமியப்பணி செய்வதுதான். பைசா இல்லையென்றால் இஸ்லாமியப்பணி கிடையாது. எதையும் நேரடியாக பெறமாட்டார்கள். பின்பக்கமாகத்தான். மார்க்கப்பணி செய்வதற்கு காசு வாங்கலாமா ? கூலி பேசலாமா ? என்று ததஜ மற்றும் ஜாக் ஜமாஅத்தினர் மேடைகளிலே வீரத்தோடு பயான் செய்வார்கள், மற்றவர்கள் மீது குறைகளை அள்ளிவீசுவார்கள் ததஜ மற்றும் ஜாக் ஜமாஅத்தைச்சேர்ந்த தறுதலைவாதிகள் அனைவரும் அடிமைப்போல வாய் பிளந்து கேட்பார்கள். இதையெல்லாம் பேச இவர்களுக்கு ஏது பணம், இவர்களின் குடும்பம் எப்படி நடக்கிறது சிந்திக்க மாட்டார்கள். பகுத்தறிவோடு சிந்திக்க வேண்டும் இல்லையென்றால் மிருகத்திற்கும் மனிதனுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.
சரி விஷயத்திற்கு வருவோம்.
ஜாக் ஜமாஅத்தில் அந்நஜாத் பத்திரிக்கையில் பணி புரிய பி.ஜைனுலாபிதீன் சம்பளம் பேசி பணிபுரிந்தார் என்று ஜாக் ஜமாஅத்தைச்சேர்ந்த பஸ்லுல் இலாஹி சொல்கிறார். என்னங்கடா இது… ? ததஜ மற்றும் ஜாக் ஜமாஅத்தும் கூலி பெற்று இஸ்லாமியப்பணி செய்வது மார்க்கமா ? மற்றவர்கள் செய்வதுதான் தவறா ? திருடாதே என்று சொல்லும் தகுதி திருடனுக்கு கிடையாது. இது தவறு என்று ஜாக்கில் பி.ஜைனுலாபிதீன் இருக்கும்போது பஸ்லுல் இலாஹிக்கு தெரியவில்லையா ? இல்லை இஸ்லாமியப்பணி செய்வதற்கு கூலி கொடுக்கும் உயர்ந்த நிலையில் இருப்பதாக நினைத்துக்கொண்டாரா ?
சுன்னத் ஜமாஅத் அறிஞர்கள் பற்றி பேச, கூலி பெற்று இஸ்லாமியப்பணி செய்த ததஜவைச்சார்ந்த பி.ஜைனுலாபிதீனுக்கும், கூலி கொடுத்த ஜாக் ஜமாஅத்திற்கும் என்ன தகுதி இருக்கிறது ? மற்றவர்களை இப்படி பேசி பிழைப்பு நடத்துவதைவிட ததஜ அறிஞர்களும் ஜாக் ஜமாஅத் அறிஞர்களும் திருவோட்டை கையில் எடுத்து பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தியிருந்தால் அது எவ்வளவோ மேலானதாக இருந்திருக்கும். இஸ்லாமியப்பணிக்கு கூலி கொடுத்தது தவறா ? இல்லை கூலியைப்பெற்றது தவறா ? ததஜ மற்றும் ஜாக் ஜமாஅத்தைச்சேர்ந்த தறுதலைவாதிகள் இதற்கு பதில் சொல்லட்டும். இல்லையென்றால் அறியாமையில் மூழ்கியிருந்த முட்டாள்களின் வாரிசு என்று சொல்லிக்கொள்ளட்டும். இனிமேலாவது சுன்னத் ஜமாஅத் அறிஞர்கள் பற்றி பேசும் முன்பு ததஜ அறிஞர்கள் பற்றியும் ஜாக் ஜமாஅத் அறிஞர்கள் பற்றியும் அவர்களின் யோக்கியத்தைப்பற்றியும் தறுதலைவாதிகள் அறிய முற்படவேண்டும். சுன்னத் ஜமாஅத் அறிஞர்களிடம் ததஜ அறிஞர்களும் ஜாக் ஜமாஅத் அறிஞர்களும் உண்மை முஸ்லிமாக இருப்பார்களானால் மன்னிப்பு கேட்பார்கள்.
வஸ்ஸலாம்.
சகதுல்லாஹ்
துபை.