Saturday 13 December 2008

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்


அண்ணன் பி.ஜெ. பின்பற்றுவது தூதரையா ? அய்யரையா ?

சிரிப்போம் – சிந்திப்போம்


சிரிப்போம்.

மைக் மைதீன் பேசுகிறார்


அன்புப் பெரியோர்களே ! அருமைத் தாய்மார்களே !
எங்கள் அண்ணன் பி.ஜெ. குர்ஆன் மற்றும் ஹதீஸின் உண்மையான அர்த்தங்களை உல்டா பண்ணி மார்க்கத்தில் புதுமையை உண்டு பண்ணும் “புதுமைப்பித்தன்”. பெயர் சூட்டும் முறையில் அல்லாஹ் ரசூலின் வழி தனி வழியாக இருந்தாலும் எங்கள் பி.ஜெ.யின் வழி தனி… வழி. யார் என்ன கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் கொடுக்கும் கொடைவள்ளல் போல் யார் என்ன கேள்வி கேட்டாலும் பதில்இல்லை என்று சொல்லாமல் எதையாவது சொல்லும் சொல் வள்ளல் அண்ணன் பி.ஜெ. அதன்படி அய்யா முருகேசன் கேட்ட கேள்விக்கு அண்ணன் பி.ஜெ. தந்த பதிலை கீழே வீடியோ கிளிப்பில் கேட்டு மகிழுங்கள்.



இதுவரை மார்க்கத்தில் யாரும் சொல்லாத, சொல்லமுடியாத இன்னும் சொல்லக்கூடாத இப்படிப்பட்ட அதிநவீன ஃபத்வாக்களையெல்லாம் சொல்லுவதில் எங்கள் அண்ணன் பி.ஜெ.க்கு நிகர் பி.ஜெ. தான். யாரும் எங்கள் அண்ணன் பி.ஜெ.யிடம் குர்ஆன்,ஹதீஸ் ஆதாரம் கேட்கக் கூடாது. எங்கள் அண்ணன் பி.ஜெ. மட்டுமே கேட்பார். அப்படியே எங்கள் அண்ணன் பி.ஜெ.க்கு எதிராக எந்த ஹதீஸையாவது ஆதாரம் காட்டினால் அந்த ஹதீஸை பலவீனப்படுத்துவோம்.

மாற்றாருக்கு மாற்றம் செய்யுங்கள் என்று நபி (ஸல்) சொல்லியிருக்க, எங்கள் அண்ணன் பி.ஜெ.யோ நபிக்கே மாற்றம் செய்யுங்கள் என்று கூறும் மார்க்கத்தின் புதுமைதாரி. எங்கள் அண்ணன் பி.ஜெ. குர்ஆனிலிருந்தும், இந்தோனேஷியாவிலிருந்தும் ஆதாரம் காட்டியிருப்பதால், அண்ணன் பி.ஜெ.யின் தமிழ்நா(ட்)டு தவ்ஹீதை தங்களது கடவாய்ப் பற்கள் இருக பின்பற்றும் பக்தகோடிகளுக்காக சில பக்திப் பரவச மூட்டும் பெயர்கள் கீழே தரப்பட்டுள்ளன. அதனை தங்களுக்கு பிறக்கப் போகும் குழந்தைகள் மற்றும் பேரன், பேத்திகளுக்கு அண்ணன் பி.ஜெ. வழியில் பெயர் சூட்டி அழகு பார்க்க வேண்டுகிறோம். மேலும் கீழ்கண்ட இப்பெயரில் ஏற்கனவே ஒருவர் இருந்து இஸ்லாத்திற்கு வந்த பின்னரும் அதே பெயரை தக்கவைத்துக்கொள்ள வேண்டுகிறோம்.







ஆன் குழந்தையின் பெயர்பெண் குழந்தையின் பெயர்
முருகன்வள்ளி
முருகேசன்தெய்வானை
பரமசிவம்பார்வதி
அப்பாசாமிஅகிலான்டேஸ்வரி
அய்யாசாமிஅங்காளபரமேஸ்வரி
முனுசாமிமுனியம்மாள்
முனியான்டிமூக்காயி
கஞ்சா கருப்புகாத்து கருப்பு
சுப்ரமணியசுவாமிசுப்புலட்சுமி
அத்வானிஅன்னை பாராசக்தி
பால் தாக்கரேபால நாகம்மாள்
கோவிந்தாகோமாதா



மேலும் பெயர் வேண்டுவோர் எங்கள் அண்ணன் பி.ஜெ.யின் ஈ-மெயிலை அனுகவும்.


அதுமட்டுமின்றி மார்க்கத்தில் புதுமையை விரும்பும் எங்கள் அண்ணன் பி.ஜெ. அசையும் சொத்திற்கு மேற்கண்ட பெயர்களை வைத்துக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளதால், எங்களது அசையா சொத்துகளாகிய மர்கஸ் மற்றும் மதரசாகளுக்கும் கீழ்கண்ட மற்றும் மேற்கண்ட பெயர்களை சூட்ட அண்ணன் பி.ஜெ.யிடம் அனுமதி கேட்போம்.

1.முருகவிலாஸ் 2.பாரத விலாஸ் 3.சரவணபவன் 4.விநாயகர் இல்லம் 5.சிவன் சன்னிதானம். 6.தங்க விலாஸ். 7.ரங்க விலாஸ். 8.கோபாலபுரம். 9.கீழ்ப்பாக்கம்.
உதாரணத்திற்கு : மேலப்பாளையம் TNTJ முருகவிலாஸ் மர்கஸ், சென்னை TNTJ சரவணபவன் மர்கஸ், சென்னை அன்னை பராசக்தி மகளிர் மதரசா, கடையநல்லூர் கஞ்சா கருப்பு ஆன்கள் மதரசா.

இதுமட்டுமின்றி இனிவரும் தமிழ்நா(ட்)டு தவ்ஹீதின் எழுச்சி மிகு மாநாடுகளில் கீழ்கானும் தீர்மானங்கள் நிறைவேற்ற உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

1.நமது பழக்கத்திலுள்ள அனைத்து அரபு மொழி பெயர்களெல்லாம் இனிமேல் நமது தாய் மொழியாம் தமிழில் மாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

2.நமது உயிரை கைப்பற்றும் மலக்குல் மெளத்தின் பெயர் அரபு மொழியில் இருப்பதால் அதனை நமது தாய் மொழியாம் தமிழில் “எமன்” என்று சொல்லப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இனிமேல் நமது உயிரை “எமன்” தான் கைப்பற்றுவார்.

3.அண்ணன் பி.ஜெ.யின் பேச்சில் உணர்ச்சி வசப்பட்டு அண்ணனின் பக்தகோடிகள் “அல்லாஹூ அக்பர்” என்று சொல்லுவது அரபு மொழியில் இருப்பதால், அதற்கு பதிலாக “அரோகரா” என்று தமிழில் சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

4.இனிமேல் நமது TNTJ பள்ளிவாசல்களில் தொழுகையில் அரபு மொழியில் குர்ஆன் ஓதுவதற்கு பதிலாக தமிழில் ஓதப்படும். அல்லாஹ்வுக்கு தமிழ் தெரியும் என்று எங்களது எதிரிகளுக்கு ஞாபகப்படுத்துகிறோம்.

5.எங்களது இந்து தமிழ் சகோதரர்கள் எவைகளையெல்லாம் அரபு மொழியிலிருந்து தமிழில் மாற்ற சொல்கிறார்களோ அவைகளையெல்லாம் தமிழில் மாற்ற எங்களது புரட்சி தலைவர் அண்ணன் பி.ஜெ.க்கு முழு அதிகாரம் வழங்குகிறோம்.

6.எங்கள் அண்ணன் பி.ஜெ. கூறும் கருத்திற்கு எதிராக யாராவது ஹதீஸை ஆதாரமாகக் காட்டினால் அவையனைத்தும் பலவீனமானவை என பிரகடணம் செய்கிறோம். மேலும் யாராவது குர்ஆனை ஆதாரமாகக் காட்டினால், எங்கள் அண்ணன் பி.ஜெ.க்கு எதிராக அல்லாஹ் இவ்வாறு சொல்லியிருக்க முடியுமா ? என எங்கள் அண்ணன் பி.ஜெ. ஆய்வில் இறங்க வேண்டி வரும் என்று எச்சரிக்கை செய்கிறோம்.



சிந்திப்போம்.



இஸ்லாத்தை பொருத்தவரை அனைத்து மொழிகளும் சமமானது. எந்த மொழியும் உயர்ந்ததோ, தாழ்ந்ததோ கிடையாது. மொழி என்பது மனிதன் தங்களுக்குள் கருத்தை பரிமாறிக்கொள்ளும் தகவல் தொடர்பு சாதனம் அவ்வளவுதான். முஸ்லிம்களை பொருத்தவரை, தமிழ் நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும், தங்களது பெயர்களுக்கும் மற்ற மார்க்க அனுஷ்டானங்களுக்கும் அரபு மொழியை தேர்ந்தெடுக்க மூன்று முக்கிய காரணங்கள் உள்ளது. முதலாவது அல்குர்ஆன் இறக்கியருளப்பட்ட மொழி. இரண்டாவது நமது கண்மனி நாயகம் (ஸல்) பேசிய மொழி. மூன்றாவது எல்லாவற்றிற்கும் மேலாக அல்லாஹ் சுபுஹானுவத்தாலா தனது நபிக்கும்(ஸல்), குர்ஆனுக்கும், சுவர்க்கத்திற்கும் தேர்ந்தெடுத்த மொழி.

அல்லாஹ் ஒன்றை தேர்ந்தெடுத்தால் அது எவ்வளவு உயர்வானதும் சங்கைக்குரியதும்மாகும் என்பதை எந்த முஸ்லிமுக்கும் சொல்லித்தான் தெரியவேண்டுமென்பதில்லை. அப்படிப்பட்ட அந்த உயர்வான மொழியில்தான் முஸ்லிம்கள் தங்களது பெயர்களை சூட்டிக்கொள்கிறார்களே தவிர அரபு மொழி உயர்வானது என்ற தனது சொந்த அபிப்பிராயத்தில் அல்ல.

ஆனால் அண்ணன் பி.ஜெ.யோ முஸ்லிம்களுக்கு குறிப்பாக தமிழ்நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கு அவர்தான் அத்தாரிட்டி போலவும், அவர் என்ன சொல்கிராரோ அதைத்தான் முஸ்லிம்கள் செய்துவருகிறார்கள் என்பதுபோலவும் தனது வியாபார ரீதியிலான “இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்” நிகழ்ச்சிக்கு வரும் ஹிந்துக்களுக்கு காட்டுவதற்காகவும் மேலும் குஷிப்படுத்துவதற்காகவும் முருகேசன் என்ற பெயரில் முஸ்லிமாக இருக்கலாம் என்ற தனது அதிநவீன ஃபத்வாவை கக்கியிருக்கிறார். இதன்மூலம் மார்க்கத்தில் அவரது அறிவும், நேர்மையும் நன்றாகவே விளங்குகிறது.

அண்ணன் பி.ஜெ. சொல்வதுபோல் முஸ்லிம்கள் ஜாதி பிரச்சினையிலிருந்து தப்பிப்பதர்காகத்தான் தனது பெயரை அரபு மொழியில் வைத்திருப்பதாக சொல்வது வேடிக்கையும், விநோதமும், மிகப் பெரிய பொய்யுமாகும். முருகேசன் என்று ஒரு முஸ்லிம் சொன்னால், அடுத்து நீங்கள் என்ன ஜாதி என்று கேள்வி வரும். ஆனால் முஸ்தஃபா என்று அரபு மொழியில் சொன்னால், இவர் ஒரு முஸ்லிம் என்று நினைத்து ஜாதி என்ற பேச்சுக்கே இடமில்லை என்பது அண்ணன் பி.ஜெ.யின் வாதம். இந்த இவருடைய சொந்த கருத்தில் உண்மையாளராக இருப்பாரேயானால், இராமர் சிலையை கடவுள் என அங்கீகரிக்க கூடியதும், தனக்கு விருப்பமானதுமான “இராமசாமி” என்று பெயர் மாற்றம் செய்து மெளலவி இராமசாமி உலவி என பவனி வர தயாரா ? ஏனெனில் இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் நிகழ்ச்சியின் மூலமாகவும் வின் டி.வி. மூலமாகவும் அண்ணன் பி.ஜெ. ஒரு முஸ்லிம் என்பதை அனைத்து ஹிந்துக்களும் அறிந்த ஒன்று. எனவே அடுத்து நீங்கள் என்ன ஜாதி என்று யாரும் கேள்வி கேட்க மாட்டார்களே ?

அடுத்து அண்ணன் பி.ஜெ. இவருடைய இந்த சொந்த கருத்திற்கு தனக்கே உரிய பானியில் குர்ஆனையும் ஹதீஸையும் ஆதாரம் காட்டியிருப்பது, தொழுகையை ஜட்டி போட்டுக்கொண்டு (தொடையின் பெரும் பகுதி தெரிய) தொழலாம் என்பதற்காக காட்டிய ஆதாரத்தைப் போன்றது. அதற்கு முன்னால் ஒரு விஷயத்தை அறிந்து கொள்வது அவசியம். அல்லாஹ்வும் ரசூலும் எந்த விஷயங்களை அங்கீகரித்தார்களோ அதுதான் நமது மார்க்கம். அல்லாஹ் அங்கீகரித்த முன்னால் நபிமார்களின் (அலை) பெயர்களும், நபி (ஸல்) தனது மகனாருக்கு சூட்டிய இப்ராஹிம் என்ற பெயரும் நமது மார்க்கத்தின் ஓர் அங்கமாகும். அது அரபு மொழியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரியே. அதனால்தான் தமிழ்நாட்டு முஸ்லிம்கள் மட்டுமல்ல உலக முஸ்லிம்கள் அனைவரும் தங்களது பெயர்களை முன்னால் நபிமார்களின் பெயர்களாகிய இப்ராஹிம், சுலைமான், மூஸா (அலை)… என்று சூட்டிக்கொள்கிறார்கள். அரபு மொழி இல்லாத பெயர்கள் என்பதால் அல்ல, அல்லாஹ்வும் ரசூலும் அங்கீகரித்த பெநர்கள் என்ற ஒரே காரணத்தினால்தான் என்பதை நிரூபிக்கும் மிகப்பெரிய சான்றும் ஆகும்.

ஆனால் அண்ணன் பி.ஜெ.யோ முருகேசன் (முருகன் என்ற தமிழர் கடவுள் சிலையின் மற்றொரு பெயர்) மற்றும் தனக்கு விருப்பமான இராமசாமி (இந்துக்களின் மற்றொரு கடவுள் சிலையின் பெயர்) போன்ற பெயர்களை முஸ்லிம்கள் சூட்டிக்கொள்ளலாம் என்று ஃபத்வா கொடுப்பதன் மூலம் இராமப் பிரான் மற்றும் முருகப் பிரானின் பெயர்களை ஆதரித்துப் பேசி இருப்பது ஏன் என்று தெரியவில்லை.

நமது பெயருடைய விஷயத்தில் நபி (ஸல்) அவர்களின் வழிமுறை என்ன என்பதை பார்க்கலாம்.

நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூதர்தா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நாளை மறுமை நாளிலே நீங்கள் உங்களது பெயரைக் கொண்டும், உங்களது தகப்பனாரின் பெயரைக் கொண்டும் அழைக்கப்படுவீர்கள், எனவே நல்ல பெயரை (உங்களுக்கு) சூட்டிக் கொள்ளுங்கள்.

நூல் : அபூதாவூது


ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், “இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கெட்ட பெயரை மாற்றி விட்டு, நல்ல பெயர்களை வைத்தார்கள்”.
நூல் : திர்மிதி


ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : “இறைத்தூதர்(ஸல்) அவர்கள் விரும்பாதொரு பெயரைக் கொண்ட மனிதர் அவர்களிடத்தில் வந்தால், அவரது பெயரை மாற்றக் கூடியவர்களாக இருந்தார்கள்”
நூல் : தபரானி


இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : உங்களது பெயர்களில் புகழுக்குரியோனும், மகத்துவமிக்கோனுமாகிய அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்த பெயர் எதுவென்றால் “அப்துல்லாஹ்” மற்றும் “அப்துர்ரஹ்மான்” என்பதாகும்.
நூல் : முஸ்லிம்,திர்மிதி,அபூதாவூத்



அல்லாஹ்வும் ரசூலும் நமக்கு நல்ல விஷயங்களையே கற்றுத் தந்துள்ளார்கள் என்பதில் என்த முஸ்லிமுக்கும் கருத்து வேறுபாடு கிடையாது. ஆனால் அண்ணன் பி.ஜெ.யோ நல்லவைகளை விடுத்து சிலைகளின் பெயர்களும் மார்க்கத்தில் கூடும் எனக் கூறுவதன் மூலம் அண்ணன் பி.ஜெ. பின்பற்றுவது தூதரையா ? அய்யரையா ?

அண்ணன் பி.ஜெ.யின் இந்த அதிநவீன ஃபத்வாவின்படி லாத், உஜ்ஜா, மனாத் போன்ற நபி(ஸல்) காலத்தில் இருந்த சிலைகளின் பெயர்களையும் நாம் வைத்துக்கொள்ளலாம் என்றாகும். எனவே அண்ணன் பி.ஜெ.யின் பக்தகோடிகள் மேற்கண்ட லாத், உஜ்ஜா, மனாத் போன்ற பெயர்களை தங்களுக்கு சையது லாத், சையது உஜ்ஜா என்றோ உஜ்ஜா பீவி, மனாத் பேகம் என்றோ சூட்டிக்கொள்ள தயாரா ? இப்படி உயர்வானதை விடுத்து தாழ்வானதை தேர்ந்தெடுப்போரை குறித்து அல்லாஹ் எச்சரிக்கும்பொழுது :

“நல்லதாக எது இருக்கிறதோ, அதற்கு பதிலாக மிகத்தாழ்வானதை நீங்கள் மாற்றிக் கொள்(ள நாடு)கிறீர்களா ?”

அல்குர்ஆன் :2 :61


எது எப்படியோ அண்ணன் பி.ஜெ. அல்லாஹ்வையும் ரசூலையும் பின்தள்ளி முருகப்பெருமானை முதன்மைபடுத்தி பேசி தனது தமிழ்நா(ட்)டு தவ்ஹீதை நிலைநாட்டியிருப்பதால், முருகப்பெருமானே அண்ணன் பி.ஜெ.யின் கனவில் வந்து சுட்ட பழம் வேண்டுமா ? சுடாத பழம் வேண்டுமா ? என்று கேட்டு ஞானப்பழம் ஒன்றை கொடுத்து ஆசிர்வதிப்பார் என எதிர்பார்க்களாம். அண்ணன் பி.ஜெ.க்கு அரோகாரா.

அண்ணன் பி.ஜெ.யின் கவர்ச்சிப் பேச்சிலிருந்து விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொள்வார். தூங்கியோரெல்லாம் பின்பு துக்கப்படுவார் என கூறியவனாய் இச்சிறு கட்டுரையை நிறைவு செய்கிறேன். வ ஆகிர தாவானா அனில் ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன். அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன். வஸ்ஸலாம்.

இவன்.
முஹம்மது பதுருதீன்.